செய்திகள் :

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்

post image

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக்லைப்’ படத்திற்கு நடந்தது அனைவருக்கும் தெரியும்.

சரத்குமார்

விஜய் படத்திற்கு ஏற்கனவே இப்படி நடந்துள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் இப்படி நடந்து, விஜய் கைகட்டி ரோட்டில் நின்றார் தானே. இதில் அரசியல் இல்லை. அனைத்தும் அரசியல் ரீதியாக நடைபெறுகிறது என்ற எண்ணங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். 

எனக்கும் ஆசை உள்ளது 

சென்சார் போர்டு அந்த படம் சரியாக இல்லை என்று நினைக்கிறது. அரசியல்வாதிகள் யாரும் சென்சார் போர்டில் இடம்பெறவில்லை. ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. அதேபோல எனக்கும் ஆசை உள்ளது. படம் எடுப்பது மிகவும் கடினம்.

ஜனநாயகன் | விஜய்

ஆனால் அது சட்டத்துக்குட்பட்டு இருக்க வேண்டும். எதிர்க்கட்சிகளுக்கு வேறு வேலை இல்லை. எதை அரசியலாக வேண்டும், எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதறியாமல் இருக்கிறார்கள். எது மக்களுக்கு தீங்கு விளைவிக்கிறது என்று நினைக்கிறார்களோ, அதை சென்சார் போர்டு கூர்ந்து கவனிக்கிறது.

நான் நடித்த ‘அடங்காதே’ படமும் இன்னும் வெளியாகவில்லை. அதற்கு ஏன் யாரும் குரல் கொடுக்கவில்லை. அடங்காதே திரைப்படத்திற்கு அனைத்து நடிகர்களையும் குரல் கொடுக்க கூறுங்களேன் பராசக்தி திரைப்படமும் மறு ஆய்வுக்கு சென்று தான் வந்தது.

பராசக்தி

வருகிற சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இல்லை. பாஜக வெற்றி பெறுவதற்காக உழைப்பேன். என்னுடன் பயணித்தவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்து, அவர்கள் அமைச்சரானால் மகிழ்ச்சியடைவேன்” என்றார்.

`நீட்' எழுதி தேர்வான 50 மாணவர்கள்; கல்லூரிக்கு திடீர் அனுமதி ரத்து - கொண்டாடிய இந்துத்துவ அமைப்பினர்

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், புகழ்பெற்ற ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி மருத்துவ சிறப்பு கல்லூரி (SMVDIME) செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 50 இடங்களுடன் எம்பிபிஎஸ்... மேலும் பார்க்க

மதுரோ–சதாம் ஹுசைன் சிறைபிடிப்பு: இரண்டுமே அமெரிக்கா செய்தது தான்; ஆனால், வித்தியாசம் உண்டு - எப்படி?

கடந்த ஜனவரி 3-ம் தேதி வெனிசுலாவின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவிற்கு சிறைபிடித்து வரப்பட்டார். இதற்கு முன்பு, 2003-ம் ஆண்டு, ஈராக்கின் அதிபர் சதாம் ஹுசைன் அமெரிக்க படையினரால் ஈராக்கில் சிறைபிடிக்... மேலும் பார்க்க

தமிழே உயிரே : இந்தி ‘நெவர்’... இங்கிலீஷ் ‘எவர்’ - தமிழனின் வெற்றி! | மொழிப்போரின் வீர வரலாறு – 3

கட்டுரையாளர்: மணா, மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர்தமிழே உயிரே! - பகுதி 3‘குண்டுக்கஞ்சோம் வடவர்கள் கூட்டுக்கஞ்சோம் பலபல குண்டர்க்காம் செய்தித்தாள் கூற்றுக்கஞ்சோம் அண்டிற்றா இந்நாட்டில் அயலானின் இந்திம... மேலும் பார்க்க

"தூய்மைப் பணியாளர்கள் போராடினால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும்" - போராட்டத்திற்கு காவல்துறை மறுப்பு

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் சென்னைக்குள் தொடர் போராட்டங்களை தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக இன்று முதல் (10.01.26) சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அரு... மேலும் பார்க்க

கடலூர்: தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0; குவிந்த தொண்டர்கள் | Photo Album

தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடுதேமுதிக மக்கள் உரிமை மீட்பு மா... மேலும் பார்க்க

USA: ``நான் சீன, ரஷ்ய மக்களையும் நேசிக்கிறேன். ஆனால்.!" - அதிபர் ட்ரம்ப் பரபரப்பு பேட்டி

டென்மார்க்கின் கட்டுப்பாட்டில், சுயாட்சி செய்துவரும் கிரீன்லாந்தை சொந்தமாக்கிக்கொள்ள வேண்டும் என வல்லரசுகள் போட்டிபோடத் தொடங்கிவிட்டன. கிரீன்லாந்தில் இருக்கும் எண்ணெய் உள்ளிட்ட தாது பொருள்களும், பணி உ... மேலும் பார்க்க