செய்திகள் :

தென்காசி: "தென்மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு காட்ஃபாதர் அப்பாவு" - திலகபாமா குற்றச்சாட்டு

post image

தென் மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு வரும் கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா பங்கேற்று கனிம வள கொள்ளைக்கு எதிராகவும், தமிழக அரசைக் கண்டித்தும் கண்டன கோஷங்களை எழுப்பினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பா.ம.க-வினர் பங்கேற்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகபாமா

குறிப்பாக, கனிமவளக் கொள்ளைக்கு முக்கிய காரணம் தி.மு.க-வினர்தான் எனவும், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்த்து சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் கனிம வளங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு வருகின்றன.

அதிலும் தென் மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்குக் கடத்தப்படும் கனிமவளக் கொள்ளை முக்கிய காரணமே தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவுதான் எனவும் அந்த வகையில் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கனிமவளக் கொள்ளைக்கு காட்ஃபாதராக செயல்பட்டு வருகிறார் எனவும் கடுமையான குற்றச்சாட்டைத் தெரிவித்தார்.

எனவே இந்தக் கனிம வள கொள்ளைக்கு எதிராக சி.பி.ஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுப்பதாக திலகபாமா தெரிவித்தார்.

சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "முதல்வர் செய்வது டிராமா" - கு.பாரதி பேட்டி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி 13 நாட்களாகப் போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 100 வது நாளை எட்டியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்... மேலும் பார்க்க

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க

ரூ.1800 கோடி அரசு நிலம் அஜித் பவார் மகனுக்கு ரூ.300 கோடிக்குதானா? - விசாரணைக்கு உத்தரவிட்ட பட்னாவிஸ்

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருக்கும் முந்த்வா என்ற இடத்தில் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தின் மதிப்பு ரூ.1,800 கோடியாகும். இந்த நிலம் சமீபத்தில் துணை முதல்வர் அஜித்பவார் மகன... மேலும் பார்க்க

`எனக்கும் மன வருத்தம் உண்டென ஓர் உதாரணத்துக்குச் சொன்னேன்'- செல்லூர் ராஜூ

‘கட்சியில் எனக்கும் மன வருத்தம் உண்டு’ என்கிற பொருள்பட, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியிருப்பது, கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது!எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன்அ.தி.மு.க முன்னாள் அமை... மேலும் பார்க்க

US: இனி பாஸ்போட்ர்டில் இரண்டு பாலினம் மட்டுமே - ட்ரம்ப்பின் கட்டுப்பாட்டுக்கு நீதிமன்றம் அனுமதி!

அமெரிக்க பாஸ்போர்ட்களில் குறிப்பிடப்படும் பயணியின் பாலினம் அவர்களது பிறப்பு பாலினத்துடன் (அதாவது ஆண் அல்லது பெண்) ஒத்துப்போக வேண்டும் என்ற ட்ரம்ப் அரசின் நிபந்தனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அமெரிக்க உச... மேலும் பார்க்க