செய்திகள் :

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

post image

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள எச்.ஏ.டி.பி மைதானத்தில் இன்று காலை ஓட்டப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஆண்கள், பெண்கள் பிரிவில் வயது மற்றும் கிலோமீட்டர் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி
அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தொடங்கி வைத்த இந்த ஓட்டப் போட்டியில் பல்வேறு தரப்பினரும் பங்கேற்றனர். 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் அதற்கும்‌ குறைவான வயதுடைய பெண்களைப் பங்கேற்கச் செய்து பரிசுகளை வழங்கிய விவகாரத்தால் போட்டியாளர்கள் பலரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய 25 வயதிற்கு மேற்பட்ட பெண் போட்டியாளர்கள், "நீலகிரி மாவட்ட விளையாட்டுத்துறை மூலம் நடத்தப்படும் பல போட்டிகளில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளிலும் ஏகப்பட்ட விதிமீறல்கள் நடந்திருக்கின்றன.

அண்ணா ஓட்டப் போட்டி

இன்று காலை நடத்தப்பட்ட 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான ஓட்டப் போட்டியில் 14 முதல் 22 வயதுடைய பெண்கள் பலரையும் ஓடவிட்டார்கள். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பலரும் இவர்களுடன் ஓடியும் ஈடு கொடுக்க முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது. ஏன் என்று கேட்டால் ஆள் பற்றாக்குறை காரணமாக எல்லோரையும் ஓடச் செய்தோம் என அலட்சியமாகப் பதில் சொல்கிறார்கள்.

இதனால் ஆவேசமடைந்த பலரும் விளையாட்டுத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். காவல்துறையினர் வந்து சமாதானம் செய்து வைத்தனர். அண்ணா பெயரைக் கெடுக்கவே இப்படி முறைகேடாக போட்டிகளை நடத்துகிறார்கள்" எனக் கொந்தளித்தனர்.

அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி
அண்ணா மாரத்தான் ஓட்டப் போட்டி

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த நீலகிரி மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, "ஊட்டியில் நடத்தப்படும் விளையாட்டு போட்டிகளில் ஆட்கள் குறைவான அளவிலேயே பங்கேற்கிறார்கள். இதன் காரணமாகவே 25 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் பிரிவில் அனைத்து வயதுப் பெண்களும் பங்கேற்கும் பொது பிரிவாக மாற்றப்பட்டது" எனப் பதில் அளித்துள்ளார்.

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக... மேலும் பார்க்க

விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" - உறுப்பினர்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது நடைபெற்ற விவாதம் வ... மேலும் பார்க்க

தமிழக Amni Busகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம்; "கேரளாவுக்கு சவாரி இல்லை" - உரிமையாளர்கள்; என்ன நடந்தது?

சென்னை, கோவை, மதுரை எனப் பல பகுதியிலிருந்து கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று (07.11.2025) கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்க... மேலும் பார்க்க

சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணிநிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறை கைது ச... மேலும் பார்க்க

அதிமுக: முன்னாள் எம்.பி உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.அதிமுகவில் இருந்து வ... மேலும் பார்க்க