செய்திகள் :

"ஸ்டாலின் இடத்திற்கு உதயநிதி வருவார்; ராஜேந்திர சோழன் போல ஆட்சி செய்வார்" - துரைமுருகன் பேச்சு

post image

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.

இதில் திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன், "ஸ்டாலினுக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்று ராஜேந்திர சோழனைப் போல ஆட்சி செய்வார்" என்று பேசியிருக்கிறார்.

திமுகவின் 75வது ஆண்டு அறிவுத் திருவிழாவில் துரைமுருகன், ஸ்டாலின், உதயநிதி
துரைமுருகன், ஸ்டாலின், உதயநிதி

இதுகுறித்துப் பேசியிருக்கும் துரைமுருகன், "நான் கலைஞருடன் பல ஆண்டுகள் கூடவே இருந்து பணியாற்றியவன். இன்று நானே வியந்து பார்க்கின்ற அளவுக்கு சிறப்பாகப் பணியாற்றி கட்சியை வழிநடத்திக் கொண்டிருக்கிறார் மு.க ஸ்டாலின். அவரை நினைத்து மெத்தப் பெருமை கொள்கிறேன். ஏனென்றால் ஸ்டாலின் கலைஞர் அருகில் இருந்து பணியாற்றியவர். அதனால் சிறப்பாகத்தான் ஸ்டாலினும் பணியாற்றுவார்.

ஒருகாலத்தில் கலைஞர் உதயநிதியைப் பார்த்து, 'இவன் என்னையவே மிஞ்சிடுவான், தளபதி ஸ்டாலினையும் மிஞ்சிடுவான்' என்றார் என்னிடத்தில்!

திமுகவின் 75வது ஆண்டு அறிவுத் திருவிழாவில் உதயநிதி
உதயநிதி

ராஜராஜ சோழன் காந்தளூர் சாலைவரை ஆட்சி செய்தான். ஆனால், அவர் மகன் ராஜேந்திர சோழன் பர்மா, தாய்லாந்து வரையிலும் தனது ஆட்சியை நிறுவிக் காட்டினார்.

இன்றைக்கு எழுதி வைத்துக்கொள்ளுங்கள் ஒருநாள் ராஜேந்திர சோழன்போல உதயநிதி ஆட்சி செய்வார்" என்று பேசியிருக்கிறார் அமைச்சர் துரைமுருகன்

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க

ஊட்டி: "அண்ணா பெயரைக் கெடுக்கவே முறைகேடாக போட்டிகளை நடத்துகின்றனர்" - பெண்கள் புகாரின் பின்னணி என்ன?

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ... மேலும் பார்க்க

விருதுநகர் நகராட்சிக் கூட்டம்: "பழுதான சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை இல்லை" - உறுப்பினர்கள் புகார்

விருதுநகர் நகராட்சியில் அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆணையாளர் விஜயகுமார், பொறியாளர் எட்வின் பிரைட்ஜோஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.அப்போது நடைபெற்ற விவாதம் வ... மேலும் பார்க்க

தமிழக Amni Busகளுக்கு ரூ.70 லட்சம் அபராதம்; "கேரளாவுக்கு சவாரி இல்லை" - உரிமையாளர்கள்; என்ன நடந்தது?

சென்னை, கோவை, மதுரை எனப் பல பகுதியிலிருந்து கேரளாவிற்கு தனியார் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் நேற்று (07.11.2025) கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்க... மேலும் பார்க்க

சென்னை: 100வது நாளை எட்டிய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்; ரிப்பன் மாளிகையில் போலீஸார் குவிப்பு

கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணிநிரந்தரம் வேண்டியும் தனியார்மயமாக்கலை எதிர்த்தும் 13 நாட்களாகப் போராடிய தூய்மைப் பணியாளர்களை நள்ளிரவில் காவல்துறை கைது ச... மேலும் பார்க்க

அதிமுக: முன்னாள் எம்.பி உள்ளிட்ட செங்கோட்டையன் ஆதரவாளர்கள் நீக்கம்! - எடப்பாடி பழனிசாமி அதிரடி

அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியால் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.அதிமுகவில் இருந்து வ... மேலும் பார்க்க