செய்திகள் :

கமல் வீட்டுக்குச் சென்ற ஸ்டாலின்: ``நேற்றைய மாலை விருந்தில்" - கமல்ஹாசன் நெகிழ்ச்சி

post image

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் அவரது வீட்டுக்குச் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

கமல்ஹாசனின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘பன்முகத் திறமையோடு தமிழ்த் திரையுலகை உலகத் தரத்துக்கு கொண்டுச் செல்லும் தீராத கலைதாகமும் தணியாத நாட்டுப்பற்றும் கொண்டவர்.

என் மீது அளவற்ற அன்போடு தோழமை பாராட்டும் கலைஞானி கமல்ஹாசனுக்கு அன்புநிறை பிறந்தநாள் வாழ்த்துகள்' என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை நடிகரும், மக்கள் நீதிமய்யத் தலைவருமான கமல்ஹாசனின் வீட்டுக்கு முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் சென்றிருக்கிறார்.

இது தொடர்பாக கமல்ஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,``என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் ஸ்டாலின் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கு நன்றி.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என் அன்புக்குரிய இளவல் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திருமதி. கிருத்திகா உதயநிதி தம்பதியருக்கும், என் அன்புக்குரிய நண்பர் திரு. சபரீஸன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பொதுவாக அப்பாவின் நண்பர்களோடு பிள்ளைகள் நெருக்கம் காட்ட மாட்டார்கள். மரியாதையுடனான சிறு விலகல் இருக்கும். ஆனால், முத்தமிழறிஞர் உடனான எனது உறவு மூன்று தலைமுறைத் தாண்டிய நெருக்கம் கொண்டது.

நிபந்தனைகளற்ற தூய பேரன்பினால், அளவு கடந்த மரியாதையால் பிணைத்துக்கட்டப்பட்டது எங்கள் உறவு. அதை உறுதி செய்யும் வகையில் அமைந்தது இந்த சந்திப்பு. நேற்றைய மாலை விருந்தில் மகிழ்ந்தோம், நெகிழ்ந்தோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

போதை: பள்ளிப் பேருந்தின்மீது கல்வீச்சு;`ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில்'- எடப்பாடி பழனிசாமி காட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் கிராமத்தை அடுத்த அரசலங்குடியில் தனியார் பள்ளி மினிபேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பொதுமக்களிடையே கொந்தளிப்பையும் ஏற்பட... மேலும் பார்க்க

``புகழொடு தோன்றும் பண்பு... அன்பு இளவல்" - சீமானுக்கு எம்.பி கமல்ஹாசன் வாழ்த்து!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சீமானின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சியினர் இன்று காலையில் இருந்தே சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

`அரசு நிலம் என்று தெரியாது'- அரசு நில விற்பனை ரத்து, வழக்கில் அஜித் பவார் மகன் பெயர் மிஸ்ஸிங்!

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவாருக்கு புனேயில் உள்ள முந்த்வா என்ற இடத்தில் உள்ள அரசு நிலம் 40 ஏக்கர் வெறும் ரூ.300 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது... மேலும் பார்க்க

சென்னை: 100-வது நாளில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: "முதல்வர் செய்வது டிராமா" - கு.பாரதி பேட்டி

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை ரிப்பன் பில்டிங்குக்கு வெளியே பணி நிரந்தரம் வேண்டி 13 நாட்களாகப் போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் 100 வது நாளை எட்டியிருக்கிறது. தூய்மைப் பணியாளர்... மேலும் பார்க்க

தென்காசி: "தென்மாவட்டங்களில் நடக்கும் கனிமவள கொள்ளைக்கு காட்ஃபாதர் அப்பாவு" - திலகபாமா குற்றச்சாட்டு

தென் மாவட்டங்களிலிருந்து, வெளி மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு வரும் கனிம வளக் கொள்ளையைக் கண்டித்து தென்காசி மாவட்டம், தென்காசி புதிய பேருந்து நிலையம் எதிரே பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட... மேலும் பார்க்க

அதிமுக: `செங்கோட்டையன் விவகாரம்; திமுக மீது சந்தேகம்!' - பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்

அ.தி.மு.க ஒருங்கிணைப்பு தொடர்பாக பேச பா.ஜ.க தான் என்னை அழைத்தது என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் ஈரோட்டில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ``எ... மேலும் பார்க்க