போர்க்களத்திலும் குறையாத கடல் ஆமைகள் மீதான கரிசனம்; உலகை உலுக்கிய சுற்றுச்சூழல் ...
பெரியபாளையம்: இறால் தொழிற்சாலையில் அமோனியா கசிவு; தீவிர சிகிச்சையில் இருவர்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று உள்ளது.
அந்தத் தொழிற்சாலையில் பல்வேறு தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இன்று திடீரென அந்தத் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்துள்ளது.
இதனால், அங்கு பணிபுரிந்து வந்த பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. சிலருக்கு வாய், மூக்கில் இருந்து ரத்தம் கசிந்துள்ளது.
இதில் இரண்டு பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். 20-க்கும் மேற்பட்டோர் தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





















