செய்திகள் :

மகாராஷ்டிரா: மராத்தி பேசாதவருக்கு ரயிலில் அடி, உதை; உயிரை மாய்த்துக்கொண்ட கல்லூரி மாணவர்

post image

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் ரயிலில் சென்றபோது மொழி விவகாரத்தில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்ட 19 வயது கல்லூரி மாணவர், தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக வியாழக்கிழமை (நவ. 20) காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கல்யாண் ஈஸ்ட் பகுதியில் அப்பார்ட்மென்டில் வசிக்கும் அந்த முதலாம் ஆண்டு மாணவர் கடந்த செவ்வாய் (நவ. 18) அன்று தூக்கிட்டுள்ளார்.

அவர் தினமும் கல்யாணிலிருந்து முலுண்டில் இருந்த தனது கல்லூரிக்கு ரயிலில் சென்று வந்துள்ளார். செவ்வாய் காலை அதுபோல பயணிக்கும்போது சச்சரவு ஏற்பட்டுள்ளது.

ரயில், நெருக்கடியான நிலை
ரயில், நெருக்கடியான நிலை

வாலிபரின் தந்தை கூறியதன்படி, நெருக்கடியான நிலையில், ஒருவர் அவரை தள்ளி நிற்க சொல்ல, அவர் மராத்தியில் பதில் அளிக்காததால் சண்டை ஏற்பட்டிருக்கிறது. அதில் உள்ளூர் கும்பலால் தாக்கப்பட்டுள்ளார்.

"ஒரு பயணி, தனது ஐந்து தோழர்களுடன் சேர்ந்து, மாணவனை கொடூரமாகத் தாக்கி, அவரை எண்ணற்றமுறை குத்தியுள்ளனர். இதனால் அவருக்கு பயமும் குமட்டலும் ஏற்பட்டு தானே நிலையத்தில் இறங்கியுள்ளார்" என காவல்துறை அதிகாரி விளக்கியுள்ளார்.

கல்லூரியில் முழு நேரமும் அமராத அந்த மாணவர் விரைவாக வீடுதிரும்பி அவரது தந்தையிடம் ஃபோனில் பேசியிருக்கிறார்.

Marathi
Marathi

"அவர் தனது மொபைல் போனில் சம்பவம் குறித்து தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார், தந்தை அவரது குரலில் பயமும் பதற்றமும் இருப்பதை தந்தை உணர்ந்தார். அன்று மாலை வேலையிலிருந்து வீடு திரும்பியபோது, ​​கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டார். அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ​​தனது மகனைக் கண்டார்," என்று அந்த காவல்துறை அதிகாரி கூறயுள்ளார்.

தாக்குதலால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக அந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி, அவரது தந்தை புகார் அளித்துள்ளார். காவலர்கள் இதனை விபத்து மரணம் எனப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்ரேஷன் சிந்தூர்: ``இந்தியா மீது பாகிஸ்தானின் வெற்றி" - அமெரிக்கா கருத்தும் காங்கிரஸ் கேள்வியும்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் 26 பேர் கொலை செய்யப்பட்டதற்காக மே 7-ம் தேதி இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' எனும் தாக்குதலைத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா பயிற்சி முகாம்கள் த... மேலும் பார்க்க

``உதயநிதி அப்செட்; செல்வப்பெருந்தகை ஆப்சென்ட்'' - வைரலாகும் உதயநிதி ஸ்டாலினின் பேச்சு

இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மெல்லத் தொடங்குகிறது. இதற்கிடையில், திமுக காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக எழுதப்படாத விதியாகவே தொடர்ந்து ... மேலும் பார்க்க

மதுரை: ``மெட்ரோவைத் தொடர்ந்து ஆசியான் ஒப்பந்தத்தில் விமான நிலையமும் புறக்கணிப்பா?'' - சு.வெங்கடேசன்

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை விமான நிலையத்தை சிங்கப்பூர், மலேசியா உள்ளடக்கிய ஏழு ஆசியான் நாடுகளுடன் சுற்றுலா மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்கும் வண்ணம் இந்த... மேலும் பார்க்க