செய்திகள் :

கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி? - மன நல மருத்துவர் ஆலோசனை

post image

கோபம், நம் எல்லோருக்குமே வரும். எதிரில் இருப்பவரை மட்டுமல்ல, நம் ஆரோக்கியத்தையும் சேர்த்தே காயப்படுத்தும் கோபத்தை எப்படி கட்டுக்குள் வைப்பது? சொல்லித் தருகிறார் மனநல ஆலோசகர் கவிதா சேகர்

கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி?
கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி?

''உங்களுக்கு யாரால், எந்தச் சூழ்நிலையால் அதிகம் கோபம் ஏற்படுகிறது என்பதை ஒரு சுயபரிசோதனை செய்யுங்கள். அதை ஒரு பேப்பரில் வரிசைப்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக ஒரு நபர் பேசுவதைக் கேட்டாலே உங்கள் கோபம் வரும் அல்லது எரிச்சல் ஏற்படும் என்று நீங்கள் நினைத்தால், அவரது குரலை ஒரு காமெடி நடிகர் அல்லது நடிகையின் குரலாகக் கற்பனைப் பண்ணிக்கொள்ளுங்கள்.

அந்த நபர் பேசும் விஷயங்களை காமெடி நடிகர் குரலோடு பொருத்திப்பார்த்து அதன்மூலம் சூழலை மாற்ற முயற்சி செய்யுங்கள். இது பலராலும் முயன்று வெற்றிபெற்ற ஒரு வழிமுறை. இதன்மூலம் கோபம் என்ற மனநிலையில் இருந்து நீங்கள் விடுபட முடியும்.

கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி?
கோபத்தை கட்டுக்குள் வைப்பது எப்படி?

நீங்கள் கோபமாக இருக்கும்போது, கோபத்துக்கும் எரிச்சலுக்கும் இடையில் நீங்கள் உங்கள் சுவாசம் அசாதாரணமாவதை நீங்கள் உணரலாம். நீங்கள் கோபமாக உணரத் தொடங்கும்போது, ஆழ்ந்த சுவாசம், நேர்மறையான சுயபேச்சு அல்லது உங்கள் கோபமான எண்ணங்களை நிறுத்த முயலவும். உங்கள் அடிவயிற்றில் இருந்து ஆழமாக சுவாசிக்கவும்.

`நிதானமாக' அல்லது `எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்' போன்ற பாசிட்டிவ் வார்த்தைகளை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டு அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோபம் குறையும்வரை ஆழமாக சுவாசிக்கும்போது அதை நீங்களே செய்யவும். கோபத்தை வெளிப்படுத்துவது அதை அடக்குவதைவிட சிறந்தது என்றாலும், அதைச் செய்ய சரியான வழி இருக்கிறது. உங்களை தெளிவாக வெளிப்படுத்த முயற்சி செய்யுங்கள்.

ஆங்கிலத்தில் CAR என்ற ஒரு பதம் இருக்கிறது. அதாவது, Change the Changeable, Accept the unchangeable and remove yourself from the unacceptable என்பார்கள். `உங்களால் மாற்ற முடிவதை மாற்றுங்கள், மாற்ற முடியாததை ஏற்றுக்கொள்ளுங்கள் மற்றும் அதேபோல், மாற்றவே முடியாத சூழலில் இருந்து நீங்கள் வெளியேறுங்கள்' என்பார்கள். இந்த எளிய வழியைப் பின்பற்றினால் எந்தச் சூழலையும் உங்களால் எதிர்கொள்ள முடியும்'' என்றார்.

Doctor Vikatan: ஃபேஸ் வாஷ், எப்படித் தேர்வு செய்ய வேண்டும்; யாருக்கு, எது பொருந்தும்?

Doctor Vikatan: முகத்துக்கு சோப் பயன்படுத்துவதைத்தவிர்த்து ஃபேஸ்வாஷ் பயன்படுத்தலாம் என்று பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால், ஃபேஸ்வாஷிலேயே ஏகப்பட்ட வெரைட்டி இருக்கின்றன. யாருக்கு, எது சரியாக இருக்கும், எ... மேலும் பார்க்க

வெங்காயங்களில் கருப்பு பூஞ்சை: கழுவினால் போதுமா? தோலை நீக்கிவிட வேண்டுமா? எது சரி?

இப்போது நாம் வாங்கும் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டிலும் கருப்பு பூஞ்சைகளை அதிகம் பார்க்க முடிகிறது. சிலர் அந்தப் பூஞ்சையை கழுவி விட்டு வெங்காயத்தை பயன்படுத்துகிறோம்... சிலர் அந்தப் பூஞ்சை இர... மேலும் பார்க்க

Doctor Vikatan: சர்க்கரைநோய்: இன்சுலின் ஊசி போட ஆரம்பித்தால், மீண்டும் மாத்திரைகளுக்கு மாற முடியாதா?

Doctor Vikatan: எனக்கு கடந்த 15 வருடங்களாக சர்க்கரைநோய் இருக்கிறது. இத்தனை வருடங்களாக மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது ஒரு மாதமாக இன்சுலின் ஊசி போட்டுக்கொண்டிருக்கிறேன். இன்சுலின் ஊசி போட ... மேலும் பார்க்க

`நாகரிகத்துக்காக தும்மலை அடக்க வேண்டாம்; உயிருக்கு ஆபத்தை உண்டாக்கலாம்!' - எச்சரிக்கும் மருத்துவர்

நிறைய பேர் நாகரிகத்துக்காக தும்மலை அடக்குகிறார்கள். தும்மலை அடக்கலாமா? நவீன மருத்துவம் என்ன சொல்கிறது? டாக்டர் கு. கணேசன் விளக்குகிறார். தும்மல்தும்மல் நல்லது!தும்மல் ஓர் அனிச்சைச் செயல். காற்று தவிர ... மேலும் பார்க்க

Doctor Vikatan: `பீரியட்ஸ் அவதிகள், ஆண்களும் உணர வேண்டும்' - நடிகை ராஷ்மிகாவின் பேச்சு சாத்தியமா?

Doctor Vikatan: பெண்களின் பீரியட்ஸ் அவதிகளை ஆண்களும் அவசியம் உணர வேண்டும் என சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா கருத்து சொல்லியிருக்கிறார். பீரியட்ஸ் வலியைஉணரவென்றே பிரத்யேக கருவி இருப்பதாகச் சொல்கிறார்... மேலும் பார்க்க

``அந்த மசாலா கடவுளின் அமிர்தம் தான்'' - சித்த மருத்துவர் சிவராமன்

நம் வீட்டு சமையலறைகளில் மணக்கும் பெருங்காயத்தின் பலன்களைப் பட்டியலிடுகிறார் சித்த மருத்துவர் கு. சிவராமன். பெருங்காயம்பிசாசு மலமா; கடவுளின் அமிர்தமா?‘காலிப் பெருங்காய டப்பா’ எனத் தோற்றுப்போனவர்களைச் ச... மேலும் பார்க்க