செய்திகள் :

ரூ.1800 கோடி அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு வாங்கிய அஜித் பவார் மகன்; ரூ.21 கோடி செலுத்த அரசு உத்தரவு

post image

மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார் மகன் பார்த் பவார் பங்குதாரராக இருக்கும் தனியார் நிறுவனம் புனேயில் கடந்த மாதம் அரசுக்கு சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக சீத்தல் என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கியது. அதுவும் ரூ.1800 கோடி மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.300 கோடிக்கு வாங்கினார். இது தொடர்பாக தெரிய வந்தவுடன் அஜித் பவார் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து மாநில அரசு தலையிட்டு இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டதோடு நில ஒப்பந்தத்தையும் ரத்து செய்தது. இது தொடர்பாக போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது. ஆனால் முதல் தகவல் அறிக்கையில் அஜித் பவார் மகன் பெயர் இடம் பெறவில்லை.

இது குறித்து கோர்ட் கேள்வி எழுப்பி இருந்தது. தற்போது நிலம் பதிவு செய்யப்பட்டதில் ரூ.21 கோடி முத்திரை தீர்வை பாக்கி இருப்பதாக கூறி கட்டணத்தை செலுத்தும்படி மாநில பத்திர பதிவுத்துறை அஜித் பவார் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு உத்தரவிட்டு இருக்கிறது. இது தொடர்பாக பத்திர பதிவு துறையில் விசாரணைக்கு வந்தபோது அஜித் பவார் மகன் தரப்பில் இரண்டு வழக்கறிஞர்கள் நேரில் ஆஜராகி அரசு பத்திர பதிவை ரத்து செய்து இருப்பதால் முத்திரை தீர்வை கட்டணத்தை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று வாதிட்டனர்.

ஆனால் அவர்களது வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்த பத்திர பதிவு துறை, பத்திர பதிவு செய்ததற்கு பாக்கி முத்திரை தீர்வை கட்டணம் ரூ.21 கோடி மற்றும் அதற்கு அபராதம் ரூ.1.5 கோடி ஆகிய கட்டணத்தை இரண்டு மாதத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக பேச இனி வழக்கறிஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒரு பத்திர பதிவை இரண்டு தரப்பினரும் சேர்ந்து ரத்து செய்தால் மட்டுமே முத்திரை தீர்வை செலுத்தவேண்டும் என்றும், அரசு தரப்பில் ரத்து செய்தால் முத்திரை தீர்வை செலுத்தவேண்டிய அவசியம் இல்லை என்று சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நில மோசடியை மாநில அரசு அஜித் பவார் மகனுக்கு சாதமாக முடித்து வைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

`3 மாத வாடகை; 7 நாளில் வீட்டை காலி செய்ய வேண்டும்’ - தாராவி செக்டர் 1 குடிசைவாசிகளுக்கு உத்தரவு

மும்பை தாராவியில் உள்ள குடிசைகள்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய குடிசையாக கருதப்படுகிறது. அக்குடிசைகளை இடித்துவிட்டு அங்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணி அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அ... மேலும் பார்க்க

பெரும் பணத்துடன் ஷிண்டே அணிக்கு தாவிய சிவசேனா எம்.எல்.ஏ.க்கள்? - வெளியாகும் வீடியோவின் பின்னணி!

மகாராஷ்டிராவில் கடந்த 2023-ம் ஆண்டு சிவசேனா இரண்டாக உடைந்தது. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு சென்றதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி உண்மையான சிவசேனா என்று தேர்த... மேலும் பார்க்க

புதுச்சேரி: `ரோடு ஷோவுக்கு `நோ’ சொன்ன டி.ஐ.ஜி!' - புதுச்சேரி மக்கள் பாராட்டும் சத்தியசுந்தரம் யார்?

கரூர் துயர சம்பவம் நடைபெற்று இரண்டு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், தங்களை தலைவர் விஜய்யை வைத்து மக்கள் சந்திப்பை நடத்த முடிவெடுத்தது த.வெ.க. ஆனால் தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், அந்த நிகழ்ச்சியை ப... மேலும் பார்க்க

"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவதில் அரசுக்கு என்ன சிக்கல்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி!

தமிழ்நாட்டில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் இன்று பாமக அறப்போராட்டத்தை நடத்தி வருகிறது. சென்னையில் பாமக ச... மேலும் பார்க்க

ஈரோடு: `தவெக விஜய் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா?' - எதிர்பார்ப்பில் தொண்டர்கள்

அதிமுகவில் ஏற்பட்ட முரண்பாட்டால் அக்கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட மூத்த நிர்வாகி செங்கோட்டையன், தவெகவில் அண்மையில் இணைந்தார்.தவெகவில் அவருக்கு கட்சியின் தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் ப... மேலும் பார்க்க

தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது! - என்ன நடந்தது?

தனியார்மயமாக்கலை எதிர்த்தும் பணி நிரந்தரம் வேண்டியும் தொடர்ந்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், இன்று கலைஞர் சமாதி முன்பாகவும் தலைமைச் செயலகம் முன்பாகவும் போராடி காவல்துறையால் குண்டுக்கட்டாக கைது ச... மேலும் பார்க்க