செய்திகள் :

ஆதாரங்களை கையில் வைத்து சுற்றிய குற்றவாளிகள் - கோவை மாணவி வழக்கில் வெளியான புதிய தகவல்

post image

கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம், “கோவை விமான நிலையம் அருகே நடந்த பாலியல் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் (30), கார்த்திக் (21) இருவரும் சிவகங்கை மாவட்டம் சிங்கணம்புரி பகுதியைச் சேர்ந்தவர்கள். குணா (20) மதுரையைச் சேர்ந்தவர். இவர்கள் மீது பீளமேடு, கோவில்பாளையம், சிங்காநல்லூர், துடியலூர், காகாசாவடி, கிணத்துக்கடவு,

கோவை மாணவி பாலியல் வழக்கு
கோவை மாணவி பாலியல் வழக்கு

சூலூர், சத்தியமங்கலம், திருமுருகன் பூண்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, வாகனத் திருட்டு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. மூவருக்கும் திருமணம் ஆகவில்லை. இருகூர் பகுதியில் தங்கி, கிடைக்கின்ற பகுதிக்குச் சென்று வந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக உடனடியாக 100க்கும் மேற்பட்ட காவலர்கள் விசாரணையில் இறங்கினார்கள். 300 சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. கோவில்பாளையத்தில் ஒரு வீட்டில் சாவியுடன் இருந்த இருசக்கர வாகனத்தை திருடிக்கொண்டு மூவரும் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். நேற்று முன்தினம் அவர்கள் மது அருந்திவிட்டு காரின் கண்ணாடியை உடைத்துள்ளனர்.

கோவை மாணவி வழக்கு
கோவை மாணவி வழக்கு

கையில் அரிவாள் வைத்திருந்தனர். அப்போது அவர்களிடம் அரிவாள் இருந்துள்ளது. அடையாள அணிவகுப்பு நடத்த வேண்டியிருப்பதால், குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மாணவி உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு உளவியல் சிகிச்சையும் வழங்கப்பட்டுள்ளது. 

கைது செய்யப்பட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பதிவு செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் நடந்த இடத்தில் காவல்துறையினர் அடிக்கடி ரோந்து சென்றுள்ளனர். சம்பவத்தன்று அப்பகுதிக்குச் செல்லவில்லை. மூவரும் குற்ற சம்பவத்திற்கு பிறகு பல இடங்களுக்கு சென்றுள்ளனர். மாணவி புதர் அருகே இருந்ததாலும், பயங்கர இருட்டாக இருந்ததாலும் அவரை மீட்க தாமதம் ஆனது.

கோவை மாணவி வழக்கு

சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் 3 பேரின் அடையாளம் கண்டறியப்பட்டது. அந்த நபர்கள் மாணவியின் செல்போன், மோதிரம் ஆகியவற்றை எடுத்தனர். செல்போன் நெட்வொர்க் மூலமும் அவர்களை டிராக் செய்தோம். சிசிடிவி, செல்போன் நெட்வொர்க், பழைய வழக்குகள் அடிப்படையில் கைது செய்துள்ளோம்.” என்றனர்.

`உனக்காகத்தான் மனைவியை கொன்றேன்'- காதலிக்குத் தகவல் சொன்ன கணவன்

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவர்களாகப் பணிபுரிந்து வந்தவர்கள் மகேந்திர ரெட்டி மற்றும் கிருத்திகா ரெட்டி. கணவன் மனைவியான இருவரும் கடந்த ஆண்டுதான் திருமணம் செய்து கொண்டனர். கடந்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் பொண்டாட்டியை கல்யாணம் பண்ணிக்க நினைச்சான்!’ - சோகத்தில் முடிந்த முறையற்ற காதல்

புதுச்சேரி வம்பாகீரப்பளையம் `பாண்டி மெரீனா’ செல்லும் சாலையில், நேற்று முன் தினம் இளைஞர் ஒருவர் படுகாயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அதுகுறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந... மேலும் பார்க்க

சிவகாசி: வீட்டில் பிரசவம் பார்த்த அசாம் தம்பதி; செவிலியரை இடைநீக்கம் செய்ய பரிந்துரை; என்ன நடந்தது?

சிவகாசியில் சாரதா நகர் பகுதியில் வசிப்பவர்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ஜூலில் - அஷ்மா காத்துன் தம்பதி. சிவகாசியில் உள்ள தனியார் தீப்பெட்டி ஆலையில் கூலி வேலை பார்த்து வரும் இவர்களுக்கு ஏற்கனவே... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை: நள்ளிரவு கிடைத்த தகவல்; சுட்டுப் பிடிக்கப்பட்ட 3 பேர்; என்ன நடந்தது?

கோவை விமான நிலையம் அருகே நேற்று முன்தினம் இரவு 20 வயதான கல்லூரி மாணவியை, 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. காரில் தன் நண்பருடன் அமர்ந்து பேசி வந்த மாணவிக்கு நடந்த கொடூரம் நாடு முழுவதும் ... மேலும் பார்க்க

கோவை மாணவி பாலியல் வழக்கு: கொந்தளித்த பாஜக.. சூறையாடிய நாம் தமிழர்

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “கோவை கல்லூரி மாணவியை 3 பே... மேலும் பார்க்க

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க