செய்திகள் :

உருவக் கேலி செய்த அரசுப் பள்ளி ஆசிரியைகள்? - துயரத்தில் முடிந்த வால்பாறை மாணவியின் விபரீத முடிவு

post image

கோவை மாவட்டம், வால்பாறை ரொட்டிக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் – வத்சலகுமாரி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். மூத்த மகள் சஞ்சனா அங்குள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அந்தப் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மாணவியை மனரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.

வால்பாறை

மாணவி குறித்து பெற்றோரிடம் புகார் அளிப்போம் என்று ஆசிரியைகள் மிரட்டியதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த மாணவி கடந்த அக்டோபர் 10-ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்துள்ளார். 

மாணவி 45 சதவிகிதம் தீக்காயங்களுடன் கோவை அரசு மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 35 நாள்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக மாணவியின் வாக்குமூலம் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை வால்பாறை பள்ளி மாணவி

அதில் அவர், “ஆங்கில ஆசிரியர் என்னை அனைவரின் முன்பும் உருவ கேலி செய்தார். நான் நன்கு படிக்கும் மாணவி, என்னை சரியாக படிக்காத மாணவர்களுடன் அமர்ந்து படிக்க வைத்து மன உளைச்சலாக்கினர்.

தமிழ் ஆசிரியர், என் கன்னத்தில் அறைந்தார். அதை எல்லோரும் பார்த்தனர். அறிவியல் ஆசிரியரும் சரியாக படிப்பதில்லை வீட்டில் சொல்லிவிடுவேன் என மிரட்டினார். சின்ன காயம் ஏற்படும் நினைத்து இப்படி செய்தேன். இவ்வளவு பெரிய காயம் ஏற்படும் என்று நினைக்கவில்லை.” என்று கூறியுள்ளார்.

மரணம்
மரணம்

இதுதொடர்பாக சக்திவேல் அளித்த புகாரின் அடிப்படையில் வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வால்பாறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.                                                                                                                                                       

UP: "அதனாலதான் கடிச்சு துப்பினேன்" - பெண்ணுக்கு முத்தம் கொடுக்க முயன்று நாக்கைப் பறிகொடுத்த நபர்

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகில் உள்ள தரியாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த சுமேதா(20) என்ற பெண் மண் அடுப்பு செய்வதற்குத் தேவையான மண் எடுப்பதற்காக அங்குள்ள கால்வாய் ஒன்றுக்குச் சென்றார். அவர் அங்... மேலும் பார்க்க

நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் போக்சோ கைதி தற்கொலை - அடுத்தடுத்து இரு சம்பவங்கள்

தென்காசி மாவட்டம், ஆய்க்குடியைச் சேர்ந்தவர் திருமலைக்குமார். சமீபத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸாரால் கைது செய்யப்ப... மேலும் பார்க்க

படத் திருட்டு மோசடி: பிரபல இணையதள மூளையாக செயல்பட்டவர் கைது - பாராட்டும் பவன் கல்யாண்!

திரைப்படத் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட திரைத் துறையினருக்கும் பெரும் சிக்கலாக இருந்தது திரைப்படத் திருட்டு (Piracy). திரைப்படம் திரையரங்குக்கு வந்த உடனே, அதை இணையதளத்தில் பதிவேற்றுவதால், திரைத் துறையினரு... மேலும் பார்க்க

பெங்களூரு: ATM-க்கு வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.7.11 கோடி கொள்ளை - என்ன நடந்தது? சந்தேகம் என்ன?

நேற்று பெங்களூரில் பட்டப்பகலில் ஏ.டி.எம்மிற்கு எடுத்து சென்ற ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? சி.எம்.எஸ் இன்ஃபோ சிஸ்டம் என்னும் கம்பெனியின் வாகனம் பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள தனியா... மேலும் பார்க்க

விருதுநகர்: புகாரளிக்க வந்த பெண்ணுடன் திருமண மீறிய உறவு; காவலர் சஸ்பெண்ட்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒருவருக்கு பணம் கொடுத்து வாங்க முடியாததால் இளம்பெண் ஒருவர் புகார் அளிக்க வந்துள்ளார்.இதுதொடர்பாக அந்தக் காவல் நிலையத்தில் ஆய்வாளர் தலைமை... மேலும் பார்க்க

செங்கல்பட்டு: ரத்த வெள்ளத்தில் சடலமாக மனைவி; திருமணமான 4வது மாதத்தில் நடந்த கொடூரம்; என்ன நடந்தது?

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகா, பாக்கம், சிலாவட்டம், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன். லாரி டிரைவரான இவரின் மகள் மதுமிதாவும் அதே பகுதியைச் சேர்ந்த சரண் என்பவரும் காதலித்து க... மேலும் பார்க்க