செய்திகள் :

எடப்பாடி - நயினார் சந்திப்பு : தொகுதி பங்கீடு, கூட்டணியில் தினகரன் குறித்து பேச்சுவார்த்தை?

post image

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தி்த்து பேசியிருக்கிறார்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் பேரணி, பிரசாரம், பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சிகள் துரிதப்படுத்தியுள்ளன.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன்
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நயினார் நாகேந்திரன்

இந்த சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்த அரசியல் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அண்மையில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நயினார் - எடப்பாடி சந்திப்பில், தினகரனை கூட்டணியில் இணைப்பது குறித்தும், அவருக்கான இடங்களையும் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தினகரனும் தற்போது டெல்லியில் முகாமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டார்கெட் Greenland: "நான் முந்தவில்லை என்றால் சீனாவும், ரஷ்யாவும்.!" - ட்ரம்ப் என்ன சொல்கிறார்?

வெனிசுலாவைக் கைப்பற்றியதை அடுத்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கிரீன்லேண்டிற்கு தற்போது குறி வைத்திருக்கிறார். இது புதிய குறி அல்ல... அவர் முதல்முறை அமெரிக்க அதிபராக பதவியேற்ற போதே வைத்த குறி தான். கடந்த ... மேலும் பார்க்க

'கோட்டையில் ஓட்டை போட திமுக சம்மட்டியுடன் தயாராக உள்ளது!' - அதிமுகவினருக்கு எஸ்.பி. வேலுமணி வார்னிங்

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகங்களுடன் அனல் பறக்க தொடங்கிவிட்டன. கொங்கு மண்டலத்தை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமு... மேலும் பார்க்க

'ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றது மறந்துவிட்டதா?' - விஜய்யை சாடிய சரத்குமார்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார், “சென்சார் போர்டு ‘ஜனநாயகன்’ படத்தை மட்டும் நிறுத்தவில்லை. இதற்கு முன்பும் பல்வேறு படங்களை நிறுத்தியுள்ளார்கள். அண்மையில் ‘தக... மேலும் பார்க்க

கடலூர்: "எங்களால் வென்றுவிட்டு எங்களுக்கே வாய்ப்பு தர மறுப்பது நியாயமா?" - பிரேமலதா கேள்வி

கடலூர் மாவட்டம், வேப்பூரில் தே.மு.தி.க-வின் மக்கள் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளரான பிரேமலதா விஜயகாந்துக்கு வழங்குவது உட்பட 10 ... மேலும் பார்க்க