செய்திகள் :

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

post image

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய்(57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இவரது நிறுவனம் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியுள்ளது. இவர் மோகன்லால் நடித்த 'காசனோவா' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

'பிக் பாஸ் மலையாளம்' நிகழ்ச்சியின் ஸ்பான்சராகவும் இவரது நிறுவனம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வருமான வரித்துறையினர் இவரை கண்காணித்து வந்துள்ளனர். ஜனவரி 28 முதல் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

CJ Roy
CJ Roy

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சி.ஜே. ராய்க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி அளவில், பெங்களூரின் அசோகா நகர் பகுதியில் உள்ள சி.ஜே.ராய் அலுவலகத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, சி.ஜே.ராய் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள நாராயணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

CJ Roy
CJ Roy

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், ``முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இன்றும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கேரளாவைச் சேர்ந்த ஐடி அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக அசோகா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெரும் தொழிலதிபர் ஐடி சோதனையின் போதே தற்கொலை செய்துகொண்டது ரியல் எஸ்டேட் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க