செய்திகள் :

ஐடி சோதனையின் போது விபரீதம்: விசாரணையின்போதே தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர் சிஜே ராய்!

post image

தென்னிந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான 'கான்ஃபிடன்ட் குழுமத்தின்' (Confident Group) நிறுவனர் மற்றும் தலைவர் சி.ஜே. ராய்(57). கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இவர், ரியல் எஸ்டேட் துறையில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக கேரளா மற்றும் கர்நாடகாவில் இவரது நிறுவனம் ஆயிரக்கணக்கான வீடுகளைக் கட்டியுள்ளது. இவர் மோகன்லால் நடித்த 'காசனோவா' உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

'பிக் பாஸ் மலையாளம்' நிகழ்ச்சியின் ஸ்பான்சராகவும் இவரது நிறுவனம் இருந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வருமான வரித்துறையினர் இவரை கண்காணித்து வந்துள்ளனர். ஜனவரி 28 முதல் தீவிர சோதனை நடைபெற்றுள்ளது. வருமானத்திற்கு அதிகமான சொத்துக்கள் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதனால் அவர் கடும் மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது.

CJ Roy
CJ Roy

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சி.ஜே. ராய்க்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வந்தனர். நேற்று பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணி அளவில், பெங்களூரின் அசோகா நகர் பகுதியில் உள்ள சி.ஜே.ராய் அலுவலகத்தில் விசாரணை நடந்துகொண்டிருந்தபோது, சி.ஜே.ராய் தனது துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் எச்.எஸ்.ஆர் லேஅவுட்டில் உள்ள நாராயணா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

CJ Roy
CJ Roy

சம்பவ இடத்தை ஆய்வு செய்த பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், ``முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்பது தெரியவந்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. இன்றும் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கேரளாவைச் சேர்ந்த ஐடி அதிகாரிகள் இந்தச் சோதனையை மேற்கொண்டுள்ளனர். முழுமையான விசாரணைக்குப் பிறகே உண்மை நிலவரம் தெரியவரும்." எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்தத் தற்கொலை சம்பவம் தொடர்பாக அசோகா நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பெரும் தொழிலதிபர் ஐடி சோதனையின் போதே தற்கொலை செய்துகொண்டது ரியல் எஸ்டேட் மற்றும் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்: காதலில் விழுந்த மருமகள்; கண்டித்த மாமனாரை பெட்ரோல் ஊற்றி எரித்த காதலன்

கடலூர் மாவட்டம் மாளிகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முந்திரி விவசாயியான ராஜேந்திரன், கடந்த 29-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த கந்தன் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.... மேலும் பார்க்க

குளித்தலை: `ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்; யாருக்காக ஆட்சி நடத்துகிறது திமுக?' - அண்ணாமலை கண்டனம்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

கல்குவாரிக்குச் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்; திமுக எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு!

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் தொகுதியின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பழனியாண்டி. இவருக்குச் சொந்தமான கல்குவாரி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, சிவாயம் பகுதியில் செயல்பட்டு ... மேலும் பார்க்க

`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்

டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாத... மேலும் பார்க்க

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்த... மேலும் பார்க்க

சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து... மேலும் பார்க்க