செய்திகள் :

கணவர் தர்மேந்திராவிற்காக தனியாக பிரார்த்தனை கூட்டம் நடத்தியது ஏன்? - நடிகை ஹேமாமாலினி விளக்கம்

post image

பாலிவுட் பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 24-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவர் இறந்தவுடன் ரசிகர்களின் நினைவு அஞ்சலிக்காகக்கூட உடலை வைக்காமல் அவர் மகன்கள் அவசர அவசரமாக இறுதிச்சடங்குகளைச் செய்தனர். நடிகையும், தர்மேந்திராவின் மனைவியுமான ஹேமாமாலினி கூட மயானத்தில் சென்றுதான் தன் கணவர் உடலை கடைசியாகக் காண முடிந்தது. இதே போன்று தர்மேந்திராவிற்கு அவர் மகன்கள் மும்பை நட்சத்திர ஹோட்டலில் பாலிவுட் பிரபலங்களுக்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் ஹேமாமாலினியோ அல்லது அவரின் இரண்டு மகள்களோ பங்கேற்கவில்லை. அதேநாளில் ஹேமாமாலினி தனது வீட்டில் தனிப்பட்ட முறையில் தனது கணவருக்கு பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். இதனால் தர்மேந்திராவின் முதல் மனைவி குடும்பத்திற்கும், ஹேமாமாலினி குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு இருப்பதாக செய்தி வெளியானது.

மகள்களுடன் ஹேமாமாலினி

இது குறித்து விளக்கமளித்துள்ள ஹேமாமாலினி, ''கணவருக்கு பிரார்த்தனை கூட்டம் நடத்துவது குறித்து நாங்கள் பேசிக்கொண்டோம். என்னை சார்ந்தவர்கள் வேறுபட்டவர்கள் என்பதால்தான் எனது வீட்டில் தனியாக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தேன். நான் அரசியலில் இருப்பதால் அரசியல் நண்பர்களுக்காக டெல்லியில் பிரார்த்தனை கூட்டம் நடத்தவேண்டியதாக இருந்தது. எனது தொகுதியான மதுராவில் எனது தொகுதி மக்களுக்காக அங்கும் ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்தினேன்.

நான் செய்ததில் எனக்கு மகிழ்ச்சியே'' என்றார். புனே அருகில் உள்ள லோனவாலாவில் இருக்கும் தர்மேந்திராவின் பண்ணை வீடு மியூசியமாக மாற்றப்படுமா என்று கேட்டதற்கு, ``சன்னி தியோல் இது தொடர்பான காரியத்தில் ஈடுபட்டுள்ளார். தர்மேந்திராவின் முதல் மனைவி பிரகாஷ் கவுருக்கும் எனக்கும் எந்த வித கருத்து வேறுபாடும் கிடையாது. அனைத்தும் நன்றாக நடக்கிறது. எனவே யாரும் கவலைப்படவேண்டியதில்லை. நாங்கள் நன்றாக இருக்கிறோம். நான் எனது வேலைகளை தொடங்கிவிட்டேன்.

தர்மேந்திராவின் மரணம் எங்களுக்கு ஆற்ற முடியாத அதிர்ச்சியாகும். அவர் மருத்துவமனையில் தங்கியிருந்த காலத்தில் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்கிறோம். தர்மேந்திராவின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். அந்த மாதம் 'பயங்கரமானது'. அவரின் 90வது பிறந்தநாளை கொண்டாட நாங்கள் தயாராகிக் கொண்டிருந்தோம். ஆனால் திடீரென அவர் இப்போது எங்களுடன் இல்லை'' என்று தெரிவித்தார்.

தீபிகா படுகோனேயின் 40வது பிறந்தநாள்: 'ரசம் சாதம், முட்டை, வறுத்த மீன்' - இளமையின் ரகசியம் என்ன?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவிற்கு இன்று 40வது பிறந்தநாள் ஆகும். அவர் இந்தப் பிறந்தநாளை தனது மகள் மற்றும் கணவருடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.அவருக்கு இந்தப் பிறந்தநாள் இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்... மேலும் பார்க்க

Dharmendra: "இது கோடிக்கணக்கான மக்களுக்கு தர்மேந்திரா விட்டுச் சென்ற பொக்கிஷம்!" - அமிதாப் பச்சன்

பாலிவுட்டின் மூத்த நடிகர் தர்மேந்திரா கடந்தாண்டு இயற்கை எய்தினார். இயக்குநர் ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் அவர் கடைசியாக நடித்திருந்த 'இக்கிஸ்' திரைப்படம் புத்தாண்டு ஸ்பெஷலாக இன்று திரைக்கு வந்திருக்கிற... மேலும் பார்க்க

Salman Khan: பண்ணை வீட்டில் 60வது பிறந்தநாள் விழா; தோனி, இந்தி நடிகர்களுடன் கொண்டாடிய சல்மான் கான்!

நடிகர் சல்மான் கானுக்கு இன்று 60வது பிறந்தநாள் ஆகும். இதையடுத்து இந்தப் பிறந்தநாளை சல்மான் கான் மும்பை புறநகர் பகுதியில் உள்ள பன்வெலில் இருக்கும் தனது பண்ணை வீட்டில் கொண்டாடினார்.பிறந்தநாள் விழாவிற்கா... மேலும் பார்க்க

"அப்போதுதான் உண்மை முகம் தெரிந்தது; அவர்களின் பெயர்களைச் சொன்னால்..." - ராதிகா ஆப்தே வருத்தம்!

நடிகை ராதிகா ஆப்தே நடித்திருக்கும் 'ராத் அகேலி ஹை: தி பன்சால் மர்டர்ஸ்' என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேற்றைய தினம் வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்காக அளித்த நேர்காணல்களில் பல்வேறு சுவ... மேலும் பார்க்க

Madhuri Dixit: `சினிமா வேண்டாம்!’ - ஆப்பிள் நிறுவனத்தில் மாதுரி தீட்சித்தின் மகன்!

இந்தியத் திரையுலகின் `புன்னகை அரசி' என்று வர்ணிக்கப்படுபவர் மாதுரி தீட்சித். நடிப்பைத் தாண்டி நவரசங்களையும் தன் கண்களிலேயே கடத்தும் அசாத்திய கலைஞர். தனது காந்தப் புன்னகையாலும், நளினமான நடன அசைவுகளாலும... மேலும் பார்க்க

Dhurandhar: `அழகே அழகே...' - சாரா அர்ஜுன் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

Sara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara ArjunSara Tendulkar: `சுற்றுலா பிரசாரத்துக்கு ரூ.1140 கோடி' - ஆஸ்திரேலியா பிராண்ட் தூதராக சச்சின் மகள் மேலும் பார்க்க