செய்திகள் :

குஜராத்: மிளகாய்ப் பொடி தூவி நகைக்கடையில் திருட முயன்ற பெண்; சுதாரித்த கடைக்காரரால் வைரலான சம்பவம்!

post image

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பெண் ஒருவர் நகைக்கடையில் மிளகாய் பொடியைத் தூவி கொள்ளையடிக்க முயன்று மாட்டிக்கொண்டுள்ளார்.

அகமதாபாத்தில் உள்ள ரனீப் என்ற இடத்தில் இருக்கும் நகைக்கடை ஒன்றில் நகைக்கடை உரிமையாளர் மட்டும் கடையில் அமர்ந்து இருந்தார். அந்நேரத்தில் அங்கு முகத்தை மூடியபடி பெண் ஒருவர் வாடிக்கையாளர் போல் உள்ளே நுழைந்தார்.

அவரை நகைக்கடைக்காரர் தனக்கு எதிரில் இருக்கும் இருக்கையில் அமரச் சொல்லி பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அப்பெண் தன்னிடம் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்து நகைக்கடைக்காரர் முகத்தில் போட்டார்.

கொள்ளையடிக்க முயன்ற பெண் மீது தாக்குதல்
கொள்ளையடிக்க முயன்ற பெண் மீது தாக்குதல்

இதை எதிர்பாராத நகைக்கடைக்காரர் சற்றும் தாமதிக்காமல் சுதாரித்துக்கொண்டு கண்ணில் மிளகாய் பொடி பட்டபோதும் தனது எதிரில் நின்ற பெண் தப்பித்துவிடக்கூடாது என்பதற்காக அவரைக் கையைப் பிடித்துக்கொண்டார்.

அவரது கையைப் பிடித்துக்கொண்டு அவரைச் சரமாறியாக அடித்தார். அப்பெண் தப்ப முயன்றார். ஆனால் விடாமல் அப்பெண் முகத்திலும் தலையிலும் அடித்தார். அதோடு தனது இருக்கையிலிருந்து இறங்கி வெளியில் வந்து அவரை அடித்து அடித்தே கடையில் இருந்து வெளியில் அனுப்பினார்.

20 விநாடியில் 17 அடி அடித்துள்ளார். வெளியில் விட்டதும் அப்பெண் சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து ஓடிவிட்டார். இது குறித்து போலீஸிலும் புகார் செய்யப்பட்டது. போலீஸார் வழக்குப்பதிவு செய்து அப்பெண்ணைத் தேடி வருகின்றனர்.

இந்த நிகழ்வு அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க