செய்திகள் :

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!

post image

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஜன. 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு மறைக்கிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி வருகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே இதுகுறித்து கேள்வி எழுப்பி அகிலேஷ் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய அகிலேஷ் யாதவ்,

'மத்திய அரசு தொடர்ந்து பட்ஜெட் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கி வரும் அதேநேரத்தில், மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரங்களையும் வழங்க வேண்டும்.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

எந்த குற்றமும் இல்லை என்றால், இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட ஏன் மறுக்கிறீர்கள். அவை மறைக்கப்பட்டிருக்கிறதா? அழிக்கப்பட்டிருக்கிறதா?

மேலும், இறந்தவர்களின் உடல்கள் டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. உ.பி. மாநில அரசு இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது' என்று கூறியுள்ளார்.

நாட்டின் வளா்ச்சிப் பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது: ஜகதீப் தன்கா்

ஜெய்பூா்: வளர்ச்சியை நோக்கிய பயணத்தில் விவசாயிகளின் பங்கு அளப்பரியது என்றும் வேளாண் அறிவியல் மையங்களை விவசாயிகள் பயன்படுத்திப் பலன் அடைய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் தெரிவித்தார... மேலும் பார்க்க

மோடி அமெரிக்காவுக்குச் சென்றுவந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா?

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்குச் சென்று வந்த பிறகு தில்லி முதல்வர் பதவியேற்பு விழா நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.பிப். 12, 13 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயண... மேலும் பார்க்க

தில்லி முதல்வர் யார்? அமித் ஷாடன் நட்டா சந்திப்பு!

தில்லியில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷாவை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா நேரில் சந்தித்தார். தில்லி புதிய முதல்வரை தேர்வு செய்வது குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பாஜக விரைவில் அ... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி அமைத்ததும் பாஜகவின் முதல் திட்டம்!

தில்லியில் முறையாக ஆட்சி அமைத்ததும் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், மாநிலத்திலுள்ள ஊழல் வழக்குகளை ஆராய சிறப்பு விசாரணைக் குழு அமைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. நடைபெற்றுமுடிந்த தில்லி சட்டப் பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

2026-ல் மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி: தர்மேந்திர பிரதான்

2026-ல் நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (பிப். 9) தெரிவித்தார். இது குறித்து கொல்கத்தாவில் செய்தியாளர்களுட... மேலும் பார்க்க

மணிப்பூர் முதல்வர் ராஜிநாமா!

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தனது பதவியை ராஜிநாமா செய்தார். தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் வழங்கினார். மேலும் பார்க்க