செய்திகள் :

கும்பமேளா கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் எத்தனை பேர்? - மக்களவையில் அகிலேஷ் கேள்வி!

post image

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என மக்களவையில் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஜன. 29 அன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் உயிரிழந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மாநில அரசு மறைக்கிறது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறி வருகிறார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் நாளே இதுகுறித்து கேள்வி எழுப்பி அகிலேஷ் உள்ளிட்ட அக்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க | ராணுவ விமானத்தில் இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!

இந்நிலையில் இன்று மக்களவையில் பேசிய அகிலேஷ் யாதவ்,

'மத்திய அரசு தொடர்ந்து பட்ஜெட் குறித்த புள்ளிவிவரங்களை வழங்கி வரும் அதேநேரத்தில், மகா கும்பமேளாவில் இறந்தவர்களின் புள்ளி விவரங்களையும் வழங்க வேண்டும்.

மகா கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்.

எந்த குற்றமும் இல்லை என்றால், இறந்தவர்களின் புள்ளிவிவரங்களை வெளியிட ஏன் மறுக்கிறீர்கள். அவை மறைக்கப்பட்டிருக்கிறதா? அழிக்கப்பட்டிருக்கிறதா?

மேலும், இறந்தவர்களின் உடல்கள் டிராக்டர் மூலமாக கொண்டு செல்லப்பட்டன. உ.பி. மாநில அரசு இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கையை மறைக்கிறது' என்று கூறியுள்ளார்.

போபாலில் யாசகம் பெறவும் தானம் வழங்கவும் தடை!

போபால் : மத்திய பிரதேச தலைநகர் போபால் அமைந்துள்ள போபால் மாவட்டத்தில் பிச்சையெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல, யாரேனும் யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு தானம் வழங்குதலும் தடை செய்யப்பட்டுள்ளது. போ... மேலும் பார்க்க

முதல் முறை.. குடியரசுத் தலைவர் மாளிகையில் சிஆர்பிஎஃப் வீராங்கனைக்கு திருமணம்!

புது தில்லியில் அமைந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், சிஆர்பிஎஃப் வீராங்கனை பூனம் குப்தாவுக்கு திருமண வைபவம் நடைபெறவிருக்கிறது. இங்கு தனிநபரின் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுவது இதுவே முதல் முறை என தகவல்க... மேலும் பார்க்க

இந்திய- சீன எல்லை குறித்து ராகுல் கூறியது தவறு: ராஜ்நாத் சிங்

இந்திய- சீன எல்லை விவகாரம் குறித்து ராகுல் காந்தி தவறான குற்றச்சாட்டுகளை கூறியதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவையில் நேற்று(பிப். 3) பேசிய எதிர்க்கட்ச... மேலும் பார்க்க

ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியா... மேலும் பார்க்க

தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் பதவியா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

புது தில்லி : தில்லி சட்டப்பேரவைக்கு பிப்.5-ஆம் தேதி நடைபெறும் தோ்தலுக்கான பிரசாரத்தின் இறுதி நாளான திங்கள்கிழமை(பிப். 3) பேசிய தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த்... மேலும் பார்க்க

கும்பமேளா: பிரதமர் மோடி நாளை புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் கலந்துகொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை(பிப். 5) புனித நீராடவுள்ளார்.இதனால், பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமம் பகுதியில் பாதுகாப்பு ... மேலும் பார்க்க