செய்திகள் :

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

post image

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்ப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது சம்பந்தமாக சமூக வலைதளத்தில் ஒரு பதிவு போட்டார். அந்தப் பதிவை விமர்சித்து பைங்குளம் பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் தேங்காய்ப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த நபரின் சமூக வலைதளத்தில் இருந்து அவரின் 16 வயது மகளின் புகைப்படத்தை மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ் என்பவர் எடுத்துள்ளார். அந்தச் சிறுமியின் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆபாசமாகச் சில கருத்துகளையும் பதிவேற்றம் செய்துள்ளார்.

திருப்பரங்குன்றம் தூண்

தன் மகள் குறித்த அந்தப் பதிவை பார்த்து அதிர்ச்சியடைந்த தேங்காய்ப்பட்டணத்தைச் சேர்ந்த நபர், இது குறித்து நாகர்கோவில் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்தார். அது குறித்து விசாரித்த சைபர் க்ரைம் போலீஸார், பதிவிட்டவர் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பொருளாதாரப் பிரிவு துணைத் தலைவர் சுரேஷ்குமார் என்பது தெரியவந்தது. சிறாருக்கு எதிரான விவகாரம் என்பதால், நடவடிக்கைக்காக குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குப் பரிந்துரை செய்தனர்.

கைது செய்யப்பட்ட பா.ஜ.க நிர்வாகி சுரேஷ்குமார்

இது குறித்து குளச்சல் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தி போக்சோ பிரிவில் வழக்கு பதிவுசெய்தனர். சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டதுடன், தரக்குறைவாகவும், ஆபாசமாகவும் கருத்து பதிவிட்ட மார்த்தாண்டம் சாங்கையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (46) மீது வழக்கு பதிவுசெய்த போலீஸார், அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது குறித்து குளச்சல் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெ... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகேநேற்றுஇரவு நேரம் சொகுசுகார் ஒன்றுஅதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாககட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுற... மேலும் பார்க்க

கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக... மேலும் பார்க்க

சென்னை: நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த ரூம்பாய்; லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.20... மேலும் பார்க்க

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது ம... மேலும் பார்க்க