செய்திகள் :

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

post image

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது மார்கழி மாதம் என்பதால், முருகசெல்வி, அப்பகுதியிலுள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு அதிகாலையில் பஜனை குழுவுடன் கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம்.

சேர்ந்தமரம்

ஆனால், நேற்று காலை அவர் பஜனைக்கு வரவில்லையாம். இந்த நிலையில், வழக்கமாக முருகசெல்வியின் வீட்டிற்கு பால் கொண்டு செல்லும் அதே பகுதியைச் சேர்ந்த சரத் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், முருகசெல்வியின் வீட்டின் குளியலறை குழாயில் இருந்து ரத்தம் கசிந்து வருவதாகக் கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர், சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் கூறியுள்ளனர். இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம், நகைக்காகவா அல்லது வேறு ஏதும் முன்பகையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். முருகசெல்வியின் செல்போன் அழைப்புகள், அங்குள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், முருகசெல்வியின் வீட்டிற்கு தினமும் பால் கொண்டு வரும் சரத் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சேர்ந்தமரம் காவல் நிலையம்

அவரிடம் நடத்திய விசாரணையில், ”எனக்கு கடன் பிரச்னை உள்ளது, தனியாக உள்ள முருகசெல்வியிடம் நகையை பறித்தால் கடன் பிரச்னை தீர்ந்துவிடும் என்பதால்,  முருகசெல்வியை நானே கொலை செய்தேன்” எனக் கூறியுள்ளார். அதே நேரத்தில் கொலை செய்யப்பட்ட முருகசெல்விக்கும், கைது செய்யப்பட்ட பால்காரர் சரத்திற்கும் இடையே திருமணம் மீறிய உறவு இருந்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தால், சரத்,  முருகசெல்வியை கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. சரத்திட,ம் இருந்து 4 சவரன் தங்கநகை, கொலை செய்ய பயன்படுத்திய இரும்புக்க ம்பியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.     

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெ... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகேநேற்றுஇரவு நேரம் சொகுசுகார் ஒன்றுஅதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாககட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுற... மேலும் பார்க்க

கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக... மேலும் பார்க்க

சென்னை: நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த ரூம்பாய்; லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கைதுசெய்த போலீஸ்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.20... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க