செய்திகள் :

சென்னை: நர்ஸ் குளிப்பதை வீடியோ எடுத்த ரூம்பாய்; லாட்ஜில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! - கைதுசெய்த போலீஸ்

post image

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து வருகிறார். இவர் தோழியுடன் சேர்ந்து சொந்த ஊருக்குச் சென்று விட்டு கடந்த 04.01.2026-ம் தேதி சென்னை வந்தார். பின்னர் இருவரும் சென்னை சென்ட்ரல் பகுதியில் லாட்ஜில் தங்கியிருந்தனர். பின்னர் நர்ஸ், பாத்ரூமில் குளிக்கச் சென்றபோது, ஜன்னல் வழியாக மர்ம நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அதைக் கவனித்த நர்ஸின் தோழி சத்தம் போட்டுள்ளார்.

தனஞ்செய் பதி

அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நர்ஸ், பாத்ரூமை விட்டு அவசர அவசரமாக வெளியில் வந்திருக்கிறார். இதையடுத்து இருவரும் சேர்ந்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரின் செல்போனை வாங்கிப் பார்த்தபோது அதில் நர்ஸ் குளிக்கும் வீடியோ அழிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னொரு பெண் ஒருவர் குளிக்கும் வீடியோ இருந்தது. அதைத் தொடர்ந்து லாட்ஜ் நிர்வாகத்துக்கு நர்ஸ் தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து விசாரித்தபோது வீடியோ எடுத்தது ரூம் பாய் தனஞ்செய் பதி, (19) என்று தெரியவந்தது. இதையடுத்து நர்ஸ், வேப்பேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் (BNS Act) மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் (TNPHW Act) மற்றும் IT Act ஆகிய பிரிவுகளின் கீழ் தனஞ்செய் பதி மீது வழக்கு பதிவுசெய்தனர். அவரின் செல்போனையும் சைபர் க்ரைம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் தனஞ்செய் பதி, ஒடிசாவைச் சேர்ந்தவர். இவர், லாட்ஜில் தங்கியிருக்கும் பெண்கள் குளிக்கச் செல்லும் போது வீடியோ எடுத்து பார்ப்பதை வழக்கமாக வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு தனஞ்செய் பதியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தேனி: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 74 லட்சம் மோசடி; பிஆர்ஓ மீது 3 பிரிவுகளில் வழக்கு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தி (வயது 48). இவரது மகன் சூரியநாராயணன் பிஇ படித்துவிட்டு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு சாந்த... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: திருட வந்த இடத்தில் எக்ஸாஸ் பேன் துளையில் சிக்கிக் கொண்ட நபர்; மீட்டுக் கைதுசெய்த போலீஸ்!

ராஜஸ்தான் மாநிலம், கோடா என்ற இடத்தில் வசிப்பவர் சுபாஷ் குமார். இவர் சம்பவத்தன்று வெளியில் சென்று இருந்தார். அவரின் மனைவியும் வெளியில் சென்றுவிட்டு அதிகாலை ஒரு மணிக்கு வீட்டிற்கு வந்தார். வீட்டிற்கு வெ... மேலும் பார்க்க

தாறுமாறாக ஓடிய கார் - கோவை அவிநாசி சாலையை அலறவிட்ட போதை ஆசாமி

கோவை அவிநாசி சாலை பீளமேடு அருகேநேற்றுஇரவு நேரம் சொகுசுகார் ஒன்றுஅதிவேகமாக சென்றுள்ளது. தாறுமாறாககட்டுப்பாடு இல்லாமல் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதியது. மக்கள் எச்சரித்தும் கேட்காமல் அந்த கார் அச்சுற... மேலும் பார்க்க

கேரளா: நீதிமன்ற ஆதாரத்தை அழித்த வழக்கில் 3 ஆண்டுத் தண்டனை; திருவனந்தபுரம் எம்எல்ஏ-வின் பதவி பறிப்பு

கேரள மாநிலம் திருவனந்தபுரம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் ஆண்டனி ராஜூ. ஜனாதிபத்திய கேரளா காங்கிரஸ்கட்சியின் துணைத்தலைவரான இவர் 2021 முதல் இரண்டரை ஆண்டுகள் கேரள போக்குவரத்துத்துறை அமைச்சராக... மேலும் பார்க்க

தென்காசி: குளியறையில் கொலைசெய்யப்பட்ட பெண்; சிக்கிய பால்காரர்... திருமணம் மீறிய உறவு காரணமா?

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகிலுள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்தவர் அய்யங்கண்ணு. இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி முருகசெல்வி. இவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகள் உள்ளார். தற்போது ம... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சிறுமி குறித்து ஆபாச பதிவு; பாஜக நிர்வாகி போக்சோவில் கைது!

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தொடர்ந்து விவதிக்கப்பட்டு வருகிறது. அது குறித்து அரசியல் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்து வரும் நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் ... மேலும் பார்க்க