செய்திகள் :

கேரளா: பஸ் மோதி 4 வயது சிறுமி பலி; பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம்!

post image

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செறுதோணி அருகே உள்ள தடியம்பாடு பரப்பள்ளிலைச் சேர்ந்த பென் ஜான்சன் என்பவரது மகள் ஹேசல் பென். நான்கு வயதே ஆன ஹேசல் பென் வாழத்தோப்பு பகுதியில் உள்ள கிரிஜோதி பள்ளியில் பிளே ஸ்கூல் மாணவியாக இருந்தார். தினமும் ஸ்கூல் பஸ்ஸில் பள்ளிக்குச் சென்றுவந்தார். நேற்று பள்ளிக்குச் சென்ற சிறுமி ஹேசல்பென் 17-ம் எண் கொண்ட ஸ்கூல் பஸ்ஸில் இருந்து இறங்கி வகுப்பறைக்குச் செல்வதற்காக பள்ளி வளாகத்தில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அவருடன் தோழியான 3 வயது சிறுமி இனயா தெஹஸிலும் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது 19-ம் எண் கொண்ட ஸ்கூல் பஸ் எதிர்பாராத விதமாக நடந்துசென்ற ஹேசல் பென் மற்றும் இனயா தெஹஸில் ஆகியோர் மீது மோதியது. கீழே விழுந்த சிறுமி ஹேசல் பென்னின் தலையில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதைத்தொடர்ந்து ஹேசல் பென் மரணமடைந்தார். இனயா தெஹஸில் காலில் பஸ் சக்கரம் ஏறி இறங்கியதால் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.

ஸ்கூல் பஸ்

விபத்தில் காயமடைந்த இனயா தெஹஸிலுக்கு இடுக்கி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மரணமடைந்த சிறுமி ஹேசல் பென்னின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறுகிறது. ஸ்கூல் பஸ் டிரைவரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்தில் இறந்த சிறுமி ஹேசல் பென்

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், பைனாவ் பகுதியைச் சேர்ந்த பள்ளி வாகன ஓட்டுநர் சசியை கைது செய்தனர். பின்னர் ஸ்டேஷன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர்மீது மனப்பூர்வம் அல்லாத கொலை, ஆபத்தானமுறையில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை: குறுக்கே வந்த நாய்; இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி; பேருந்து ஏறி கணவர் இறந்த சோகம்!

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருருந்து தவறி விழுந்த தம்பதியினர் அரசுப் பேருந்து மோதி, மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் ,மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேருந்துமதுரை ஜீவா ந... மேலும் பார்க்க

சவூதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ... மேலும் பார்க்க

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க

திண்டுக்கல்: `லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு' -வத்தலக்குண்டு அருகே சோகம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தக்குண்டு அருகே உள்ள தெப்பத்துப்பட்டியை சேர்ந்தவர் காத்தவராயன் (65). இவருடைய மனைவி ஜோதி, மற்றும் பேரக்குழந்தைகள் ஹர்சன் மற்றும் ஹர்ஷினி ஆகியோரை அழைத்துக்கொண்டு உசிலம்பட்டியில் ... மேலும் பார்க்க

சவூதி அரேபியா: டேங்கர் லாரி மீது மோதிய பேருந்து; 42 இந்தியர்கள் பலி? - ரேவந்த் ரெட்டி உத்தரவு

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உம்ரா பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்... மேலும் பார்க்க

ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகர் போலீஸ் ஸ்டேஷனில் வெடிகுண்டு விபத்து; 9 பேர் பலி - என்ன நடந்தது?

ஜம்மு காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் போலீஸ் நிலையத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது பிடிபட்ட வெடிகுண்டுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. அந்த வெடிகுண்டுகளை போலீஸாரும், தடயவியல் நிபுணர... மேலும் பார்க்க