செய்திகள் :

கேரளா: புகைபிடித்ததை தட்டிக்கேட்ட இளம்பெண்; ஓடும் ரயிலில் இருந்து மிதித்து தள்ளிவிடப்பட்ட கொடூரம்

post image

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாலோடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகுட்டி(19), கல்லூரி மாணவி. இவரின் தாய் பிரியதர்ஷினி பெங்களூரில் ஒரு ஸ்கூலில் நீச்சல் பயிற்சியாளராக உள்ளார். ஸ்ரீகுட்டியின் சகோதரர் ஸ்ரீகுமாரும் பெங்களூரில் வசித்துவருகிறார். ஸ்ரீகுட்டிக்கும் ஆலுவாவைச் சேர்ந்த ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. ஸ்ரீகுட்டி சில தினங்களுக்கு முன்பு தாய் பிரியதர்ஷினியை பார்க்க பெங்களூர் சென்றார். அங்கிருந்து கணவன் வீட்டுக்கு ஆலுவா சென்றுள்ளார்.

ஆலுவாவிலிருந்து திருவனந்தபுரத்துக்கு கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பயணித்தார். அவரின் தோழி அர்ச்சனாவும் அவருடன் ரயிலில் பயணித்தார். ரயில் வர்க்கலா ரயில் நிலையத்தை கடந்ததும் ரயில் சென்றுகொண்டிருந்தபோது ஸ்ரீகுட்டியும், அவரது தோழியும் கழிவறைக்குச் சென்றுவிட்டு வாசல் அருகே நின்றுள்ளனர். அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பனச்சில்மூட்டைச் சேர்ந்த சுரேஷ்குமார் மதுபோதையில் இருந்ததுடன் புகைபிடித்துள்ளார்.

சிகெரெட் பிடிப்பத்த நிறுத்த சொல்லி இருக்கிறார்கள். புகைபிடிப்பதை நிறுத்தாமல் இருந்தால் போலீஸில் புகார் அளிப்போம் என மாணவிகள் கூறியுள்ளனர். இதனால் வாசல் அருகே நின்ற ஸ்ரீகுட்டியை பின்னால் இருந்து முதுகில் காலால் மிதித்து ரயிலில் இருந்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறார் சுரேஷ்குமார். அதைபார்த்து சத்தம்போட்ட அர்ச்சனாவையும் மிதித்தார் சுரேஷ்குமார். அர்ச்சனா சுரேஷின் காலை பிடித்ததால் வெளியே விழாமல் தப்பித்தார். உடனடியாக ரயிலில் இருந்த சக பயணிகள் அங்குசென்று அர்ச்சணாவை மீட்டனர்.

கைதுசெய்யப்பட்ட சுரேஷ்குமார்

மேலும் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். ரயில் நின்றதும் ஸ்ரீகுட்டி விழுந்த இடத்தில் அவரை தேடினர். படுகாயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்த ஸ்ரீகுட்டியை கண்டுபிடித்து ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஸ்ரீகுட்டியை மிதித்து தள்ளிவிட்ட சுரேஷ்குமாரை பயணியர் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். 

ஸ்ரீகுட்டிக்கு திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு தலையில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், முதுகில் மிதித்ததால் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஸ்ரீகுட்டி பயணித்த ரயில் பெட்டியில் ரயில்வே போலீஸார் சோதனை நடத்தினர். ரயிலில் வைத்து ஸ்ரீகுட்டிக்கு சுரேஷ்குமார் தொல்லை கொடுத்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் போலீஸாருக்கு கிடைத்துள்ளன. அதன் அடிப்படையில் போலீஸார் சுரேஷ்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிந்தனர்.

அழுதுபுலம்பும் ஸ்ரீகுட்டியின் தாய் பிரியதர்ஷினி

இதுகுறித்து ஸ்ரீகுட்டியின் தாய் பிரியதர்ஷினி கூறுகையில், "ஸ்ரீகுட்டி வென்டிலேட்டரில் சிகிச்சையில் உள்ளார். பாதி மூடிய நிலையில் அவளது கண்கள் உள்ளன. உடலில் 20 காயங்கள் ஏற்பட்டுள்ளன. தலையின் பின்பக்கமும், நெற்றியிலும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு எனது மகள் திரும்ப கிடைக்க வேண்டும். ஸ்ரீகுட்டி 2-ம் வகுப்பு படிக்கும்போது அவளது அப்பா என்னைவிட்டு பிரிந்து சென்றார். யாருடைய உதவியும் இல்லாமல் கஷ்டப்பட்டு குழந்தைகளை வளர்த்தேன். என் மகளை உயிரோடு இங்கிருந்து கொண்டுபோகமுடியுமா என தெரியவில்லை. அவ்வளவு மோசமான நிலையில் மகள் சிகிச்சையில் இருக்கிறாள்" என்றார் கண்ணீரோடு.

கோவை இருகூர் விவகாரம்: 'கணவர் அடிச்சார்; நானும் அடிச்சேன்' திடீர் திருப்பமாக வெளியான பெண்ணின் வீடியோ

கோவை மாவட்டம், இருகூர் அருகே உள்ள அத்தப்பன்கவுண்டன்புதூர் பகுதியில் நேற்று மாலை ஒரு பெண் காரில் கடத்தப்பட்டதாக சிசிடிவி வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் பெண் அலறி துடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டத... மேலும் பார்க்க

விசாரணைக்கு அழைத்துச் சென்ற காவலரை, கத்தியால் குத்திய கைதி - ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிர்ச்சி!

சிவகாசி அருகே உள்ள வடபட்டியைச் சேர்ந்த மரியராஜ் என்பவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ள நிலையில், வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. இந்... மேலும் பார்க்க

கரூர்: மது அருந்தும் போது தகராறு; நண்பரை பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்த இளைஞர்கள் கைது!

கரூர் மாவட்டம், மேட்டு மகாதானபுரம் ஹரிஜன தெருவை சேர்ந்தவர் சண்முகம் என்கின்ற பாலன் (வயது: 21). இவர், தனது வீட்டின் அருகில் உள்ள ஒரு நாடக மேடை பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார்... மேலும் பார்க்க

காதலிக்க மறுத்த மாணவி மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய இளைஞர் - வீட்டுக்கு சென்று பயங்கரம்

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மாவத்தூர் ஊராட்சி, குளக்காரன்பட்டியைச் சேர்ந்தவர் வினிதா (வயது: 21). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மெடிக்கல் கல்லூரி விடுதியில் தங்கி பி.பார்ம் 4-ஆம் ஆண்டு பட... மேலும் பார்க்க

ஓசூர்: இளம் பெண்ணுடன் ஏற்பட்ட தன்பாலின ஈர்ப்பு; கைக்குழந்தையை கொன்ற கொடூரத் தாய் - நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு அருகேயுள்ள கெலமங்கலம் காவல் நிலையத்துக்குட்பட்ட சின்னட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 38). பெயிண்டர் தொழிலாளி. இவரின் மனைவி பாரதி (26). இந்த தம்பதிக்கு 5 மற்றும... மேலும் பார்க்க

மூதாட்டிகள் கொலை வழக்கு; குவாரியிலிருந்து தப்பிய கொலையாளி; சுட்டுப்பிடித்த போலீஸ்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்த இடங்கணசாலை, காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த பெரியம்மா மற்றும் பாவாயி ஆகிய இரண்டு பேரையும் கடந்த 03.11.2025 தேதியில் இருந்து காணவில்லை என மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புக... மேலும் பார்க்க