செய்திகள் :

``'சம்பவக்காரன்' சசி; இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்" - இயக்குநர் பாலா எழுதிய கடிதம்

post image

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்காக சிறந்த நடிகர் விருதை நடிகர் சசிகுமார் வென்றிருந்தார்.

இந்நிலையில் சசிகுமாரை பாராட்டி இயக்குநர் பாலா கைப்பட கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார்.

அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், " சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' படத்திற்கு நீ சிறந்த விருது வாங்கியிருப்பதை அறிந்தவுடன் ஏற்பட்ட என் வெளிப்பாடுதான் இந்தக் கடிதம்.

இயக்குநர் பாலா
இயக்குநர் பாலா

கடந்த 25 வருடங்களாக உன்னை பற்றி நான் கணித்தது நீ போராடி வெல்பவன். பேராற்றல் கொண்டவன்.

கொந்தளிக்கிற கடலையும் அமிழ்த்திச் சாந்தமாக்கி விடுகிற உன் பண்பட்ட வித்தையை அதைச் சகலருக்கும் கடத்தும் உன் உள்ளன்பை நேரில் மட்டுமல்ல திரையிலும் பார்த்து பூரித்துப் போகிறேன்.

பல ரசிகர்களில் நானும் ஒருவனாக.!

உன் இயல்பான எளிமைக்கு இருக்கும் பல ரசிகர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

மேலும் நடிகனாக உன் ஒவ்வொரு வெற்றியும் எனக்குள் ஏற்படுத்தும் மகிழ்ச்சியை வார்த்தைகளில் விவரிக்க இயலவில்லை.

இறுதியாக, உனக்குள் உறுமிக் கொண்டிருக்கிற அந்தச் 'சம்பவக்காரன்' சசியை, என் இனிய இயக்குநனை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

சசிகுமார்
சசிகுமார்

என்னுடைய இந்த ஆசையை நீ விரைவில் நிவர்த்தி செய்வாய் என்றும் வேண்டுகிறேன்” என்று பாராட்டி எழுதியிருக்கிறார்.

இந்த கடிதத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த சசிகுமார், " தேசிய (விருது) அங்கீகாரம் தந்த பாலா அண்ணனுக்கு மனமார்ந்த நன்றி...

உங்கள் ஆசையை சீக்கிரமே நிவர்த்தி செய்கிறேன்" என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்திருக்கிறார்.

“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” - கே.பாலசந்தர் நினைவு நாளில் கமல்ஹாசன்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒருவர், இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரகாஷ்ராஜ் எனப் பல நட்சத்திரங்களின் வாசல் கதவைத் திறந்து வைத்த கே. பாலசந்தருக்கு இன்று 11-வது நினைவு ந... மேலும் பார்க்க

Sirai: "விஜய், வெற்றிமாறன்கூட ஒரு படமாவது செய்திடணும்னு ஆசைப்பட்டேன்!" - எஸ்.ஏ. சந்திரசேகர்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "மதத்தின் பெயரால அரசியல் செய்பவர்களை செருப்பால அடிச்ச மாதிரி இருந்தது!" - ஆர். கே. செல்வமணி

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். சிறை படத்தில்... மேலும் பார்க்க

Sirai: "கதையை எப்படி பிடிக்கணும்னு வெற்றிமாறன் அண்ணன்கிட்டதான் கத்துகிட்டேன்!" - இயக்குநர் தமிழ்

விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகியிருக்கும் 'சிறை' திரைப்படம் டிசம்பர் 25-ம் தேதி திரைக்கு வருகிறது. 'டாணாக்காரன்' இயக்குநர் தமிழ் எழுதிய கதையை, அறிமுக இயக்குநர் சுரேஷ் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் ப... மேலும் பார்க்க

Parasakthi: 'ரிலீஸ் தேதி மாற்றம்!'; ஜனநாயகனுக்கு அடுத்த நாள் வெளியாகும் 'பராசக்தி' - வெளியான அப்டேட்

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பராசக்தி' திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையம... மேலும் பார்க்க

Sreenivasan: "அந்த உஷ்ணத்தை ஶ்ரீனியின் உடல் உணராது என்பதும் சுட்டது!" - பார்த்திபன் உருக்கம்

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசனின் மறைவு மலையாளத் திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய உடல் நேற்றைய தினம் தகனம் செய்யப்பட்டது. தமிழ் மற்றும் மலையாளத் திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அவர... மேலும் பார்க்க