செய்திகள் :

சென்னை: ஒரே நாளில் பெட்ரோல், டீசல் விலை ரூ.3 உயர்வு; வாகன ஓட்டிகள் அதிர்ச்சி | News Today live update

post image

CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்வு!

AG&Pratham CNG Station

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து CNG விலையும் கிலோவிற்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் நிலவும் போர் பதற்றத்தால் இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இதன் மூலம் டெல்லியில் ஒரு கிலோ CNG ரூ. 79.09-ஆகவும், மும்பையில் ரூ. 84-ஆகவும் அதிகரித்துள்ளது. பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் CNG-ல் இயங்குவதால், இந்த விலை உயர்வு சாமானிய மக்களின் பயணச் செலவை நேரடியாகப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!

பெட்ரோல் விலை
பெட்ரோல் விலை

மேற்கு ஆசியப் போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் இன்று லிட்டருக்கு ரூ. 3 உயர்த்தப்பட்டுள்ளன.

இதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3.14 உயர்ந்துள்ளது. அதாவது, ரூ.100.80-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் இப்போது ரூ.103.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.3.11 உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது டீசல் விலை ரூ.95.50 ஆக உள்ளது.

Petrol Price Hike: நாடு முழுவதும் உயர்ந்த பெட்ரோல், டீசல், CNG விலை; சாமானிய மக்கள் கலவை

மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் நேரடி விளைவாக, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை லிட்டருக்கு ரூ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: எரிபொருள் செலவைக் குறைக்கச் சொன்ன பிரதமர்; தலைமை செயலகத்திற்கு பைக்கில் வரும் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி பொதுமக்கள் தங்கம் வாங்குவதைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். அதோடு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்படியும், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் படியும், வீட்டில... மேலும் பார்க்க

TVK: சேலத்தில் நடைமுறைக்கு வந்தது சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை; பணிகள் என்ன?

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் ஜோசப் விஜய், பெண்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பிரிவைத் தொடங்க உத்தரவிட்டிருந்தார... மேலும் பார்க்க

15%-ஆக உயர்ந்தது: தங்கம், வெள்ளியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வரி அதிகரிப்பு!

பிரதமர் நரேந்திர மோடி தங்கம் வாங்குவதை ஓர் ஆண்டுக்கு நிறுத்தும்படியும், எரிபொருள், உணவு ஆயில்களை பயன்படுத்துவதை குறைக்கும்படியும், வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யும்படியும், வீட்டில் இருந்து வேலை செய்ய... மேலும் பார்க்க

இந்தியாவில் இருந்து சர்க்கரை ஏற்றுமதி செய்ய 'நோ'- மத்திய அரசின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

தற்காலிகமாக இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது மத்திய வர்த்தக மற்றும் தொழிற்சாலை அமைச்சகம். அமைச்சகம் என்ன சொல்கிறது? வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்தியாவில் இருந்து சர்க்கரை (ரா ச... மேலும் பார்க்க

நிழல் உலகின் பிடியில் NEET: கனவுகளைத் திருடிய வினாத்தாள் கசிவு; நீட் முறைகேட்டின் விரிவான பின்னணி!

கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட்-யூஜி (NEET-UG 2026) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்புதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து... மேலும் பார்க்க