செய்திகள் :

சென்னை: காதலன் வீட்டில் மாணவி தற்கொலை - மருந்து பிரதிநிதி கைது!

post image

சென்னை, நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் பூஜா (24). இவர், கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஸ்குமார். இவர் மருந்து பிரதிநிதியாக வேலைப்பார்த்து வருகிறார். பூஜாவும் ஹரிஸ்குமாரும் பள்ளியில் படிக்கும் போதிலிருந்து காதலித்து வந்திருக்கிறார்கள். பூஜாவின் காதலை அவரின் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் ஹரிஸ்குமாரும் பூஜாவும் பழகி வந்திருக்கிறார்கள். இந்நிலையில் ஹரிஸ்குமாரின் அம்மா, 17.01.2026-ம் தேதி பூஜாவின் அம்மாவுக்கு போன் செய்து உங்களின் மகள் திடீரென மயங்கிவிட்டார் எனக் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பூஜாவின் அம்மா, ஹரிஸ்குமாரின் வீட்டுக்கு வந்திருக்கிறார். அப்போது பூஜாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கும் தகவல் கிடைத்து அங்கு சென்றிருக்கிறார் பூஜாவின் அம்மா.

காதல்
காதல்

மருத்துவமனையில் பூஜா இறந்துவிட்டதாக தகவல் கிடைத்ததும் பூஜாவின் அம்மாவும் அவரின் குடும்பத்தினரும் கதறி துடித்தனர். பின்னர் ஹரிஸ்குமாரிடம் என் மகள் எப்படி இறந்தாள் என்று விசாரித்தபோது தூக்குப் போட்டுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மகளை ஹரிஸ்குமார் கொலை செய்து விட்டதாக பூஜாவின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர். அதோடு பூஜாவின் தந்தை கண்ணன், சூளைமேடு காவல் நிலையத்தில் என் மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார், இயற்கைக்கு மாறான முறையில் மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பூஜா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்தது.

இதுகுறித்து சூளைமேடு போலீஸார் கூறுகையில், `` சம்பத்தன்று காதலன் ஹரிஸ்குமாரின் வீட்டுக்கு பூஜா சென்றிருக்கிறார். அங்கு இருவரும் தங்களின் திருமணம் குறித்து பேசியிருக்கிறார்கள். அப்போது பூஜா, தன்னை பதிவு திருமணம் செய்து கொள்ளும்படி ஹரிஸ்குமாரிடம் வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு ஹரிஸ்குமார், காலஅவகாசம் கேட்டிருக்கிறார். அதனால் பூஜாவுக்கும் ஹரிஸ்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது கோபத்திலிருந்த ஹரிஸ்குமார், காதலி பூஜாவைப் பார்த்து செத்து போ என கூறியிருக்கிறார். இதில் மனமுடைந்த பூஜா, அறைக்குள் சென்று துப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலை செய்திருக்கிறார். அதனால் பூஜாவை தற்கொலைக்கு தூண்டியதாக ஹரிஸ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்திருக்கிறோம்'' என்றனர்.

தூத்துக்குடி: சொத்தைப் பிரித்து தர மறுத்த தாய்; கொன்று உடலை கிணற்றில் வீசிய மகன் - நடந்தது என்ன?

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகேயுள்ள மிட்டாவடமலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசிங்கம். இவரின் மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 4 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி... மேலும் பார்க்க

சென்னை கள்ளச்சாராய வழக்கில் பெண்ணை சிக்கவைக்க ஸ்பெஷல் டீம் போலீஸ் போட்ட மாஸ்டர் பிளான்; திடுக் தகவல்

சென்னை, மயிலாப்பூர் பிடாரி அம்மன் கோயில் தெருவில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்திருப்பதாக மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கடந்த ஆண்டு டிசம்பர் ... மேலும் பார்க்க

`715 கோடிக்கு சொத்து; சகோதரியான மனைவி'- பெண் இன்ஜினீயரை திருமணம் செய்வதாகக் கூறி ரூ.1.53 கோடி மோசடி!

பெங்களூரைச் சேர்ந்தவர் நவ்யா ஸ்ரீ (29). சாஃப்ட்வேர் இஞ்ஜினீயரான நவ்யா தனது திருமணத்திற்கு வரன் தேடி மேட்ரிமோனியல் தளத்தில் பதிவுசெய்து வைத்திருந்தார். விஜய் ராஜ் என்பவர் நவ்யாவின் குடும்பத்தை அணுகி நவ... மேலும் பார்க்க

குற்றாலத்தில் பதுங்கியிருந்த பிரபல சென்னை ரெளடி - துப்பாக்கி முனையில் சுற்றி வளைத்தது எப்படி?

நெல்லை மாநகரில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் ஏ பிளஸ், ஏ மற்றும் பி கிரேடு ரெளடிகளை போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அவர்கள் ரெளடிகளின் நகர்வு, அவர்களின் நடவடிக்கை குறித்தும் ரகசியமாக ... மேலும் பார்க்க

'பஸ்ஸில் தவறான நோக்கத்துடன் தொட முயன்றார்' - இளம்பெண்ணின் வீடியோ; தற்கொலை செய்த நபர்

கேரள மாநிலம் கோழிக்கோடு கோவிந்தபுரத்தைச் சேர்ந்தவர் தீபக்(42). துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக வேலை செய்துவந்தார். இவர் வேலை செய்யும் நிறுவனம் சம்பந்தப்பட்ட பணிக்காக கடந்த வெள்ளிகிழமை கண்ணூர் சென்றார்... மேலும் பார்க்க

நெல்லை: செல்போனில் பேச்சு… கேட்காத அக்கா.. ஓட ஓட விரட்டிக் கொன்ற தம்பி; நடந்தது என்ன?

நெல்லை மாவட்டம், தேவர்குளத்தைச் சேர்ந்தவர் ராமராஜ். விவசாயியான இவரது மனைவி சவுந்தரி. இவர்களுக்கு ராதிகா என்ற மகளும், கண்ணன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில், சவுந்தரியும், கண்ணனும் வேலூரில் உள்ள ஒரு... மேலும் பார்க்க