செய்திகள் :

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

post image

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்றுள்ளார்.

சுமன் சக்திவேல் என்பவர் அவரது நண்பர்களுடன் அதே பார்க்கு சென்றுள்ளார்.

இந்த இரண்டு குழுவினருக்கும் பாரில் நடனமாடும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது தகராறாக மாற, இரண்டு குழுவினரையும் பவுன்சர்கள் பாரில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

மதுபான பார்
மதுபான பார்

பார்க்கு வெளியேயும் தகராறு தொடர்ந்துள்ளது. இதனால், அங்கிருந்து பவுன்சர்கள் இரண்டு குழுவினரையும் அனுப்பியுள்ளனர்.

யான்சி அவரது தோழிகளுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். தனது காரில் கிளம்பிய சுமன் சக்திவேல், யான்சியையும், அவரது தோழிகளையும் ஃபாலோ செய்து மோதியுள்ளார்.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவருடன் சென்ற சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவத்திற்குப் பிறகு, 'மாட்டிக்கொள்வோம்' என்று சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கோயம்பேடு பூண்டு மார்க்கெட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இருந்தும், சுமன் சக்திவேல் உள்ளிட்ட சம்பவத்தில் தொடர்புள்ள 7 பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

மேலும், அந்தத் தனியார் மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தென்காசி: பொதுமக்களை அரிவாளால் வெட்டிய 9 பேர் கைது; மற்றொரு குற்றவாளியைச் சுட்டுப் பிடித்த போலீஸ்

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் கிராமத்தில் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில், மே 29-ம் தேதி மாலையில் மூன்று இரு சக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வ... மேலும் பார்க்க

மூடப்பட்ட வெடி மருந்து தொழிற்சாலையில் NIA அதிகாரிகள் ஆய்வு - திருச்சி பரபரப்பு

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், உப்பிலியபுரம் அருகே உள்ள முருங்கப்பட்டியில் வெற்றிவேல் எக்ஸ்புளோசிவ்ஸ் என்ற வெடி மருந்து நிறுவனம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் கடந்த 2016-ல் நிகழ்... மேலும் பார்க்க

மும்பை: மனைவியை Rooster Position இல் நிற்க வைத்து சித்திரவதை; கொடூர கிரிமினல் கணவன் கைது

மும்பை தேவ்னார் பகுதியைச் சேர்ந்தவர் அர்பாஸ் செய்யத். பல்வேறு கிரிமினல் வழக்குகள் அர்பாஸ் மீது இருக்கின்றன. உள்ளூரில் மிரட்டி பணம் பறித்தல் போன்ற கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டு வந்தான். அர்பாஸ் தனது வீட... மேலும் பார்க்க

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதானவர் மீது சக கைதிகள் தாக்குதல் – சிறைக்குள் நடந்தது என்ன?

கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்த ஒரு 10 வயது சிறுமி, கடந்த 21ம் தேதியன்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள ஒரு கடைக்கு சென்றுள்ளார். வெகுநேரமாகியும் சிறுமி வீடு திரும்பததால் சந்தேகம் அடைந்த சிறு... மேலும் பார்க்க

5 மாத திட்டம்; க்ரைம் படங்கள் - தாயை துன்புறுத்திய தந்தை, சித்தி உட்பட 4 பேரை கொன்று எரித்த மைனர்

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் அருகில் ஸ்ரீராம்புரா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ராம்சிங். முன்னாள் பஞ்சாயத்து தலைவரான ராம்சிங், அவரது இரண்டாவது மனைவி சர்க்யன் மற்றும் ராம் சிங்கின் தாயார் மற்றும் உறவி... மேலும் பார்க்க

திருமண வீட்டில் பயங்கரம்!முகமூடி கும்பல் அரிவாள் வெறியாட்டம் – 6 பேர் படுகாயம்; 4 பேர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ரத்த வெள்ளமாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்மக் கும்பல் ஒன்று சினிமாப் படக் காட்சியை... மேலும் பார்க்க