செய்திகள் :

சென்னை மதுபான பாரில் தகராறு; இலங்கைப் பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில் பார்க்கு சீல்; பின்னணி என்ன?

post image

நேற்று சென்னை கோயம்பேட்டில் உள்ள தனியார் பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டு, அது கொலையில் முடிந்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்தவர் யான்சி. இவர் தனது இரண்டு தோழிகளுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் பார்க்குச் சென்றுள்ளார்.

சுமன் சக்திவேல் என்பவர் அவரது நண்பர்களுடன் அதே பார்க்கு சென்றுள்ளார்.

இந்த இரண்டு குழுவினருக்கும் பாரில் நடனமாடும் போது பிரச்னை ஏற்பட்டுள்ளது. அது தகராறாக மாற, இரண்டு குழுவினரையும் பவுன்சர்கள் பாரில் இருந்து வெளியேற்றியுள்ளனர்.

மதுபான பார்
மதுபான பார்

பார்க்கு வெளியேயும் தகராறு தொடர்ந்துள்ளது. இதனால், அங்கிருந்து பவுன்சர்கள் இரண்டு குழுவினரையும் அனுப்பியுள்ளனர்.

யான்சி அவரது தோழிகளுடன் இருசக்கர வாகனத்தில் கிளம்பியுள்ளார். தனது காரில் கிளம்பிய சுமன் சக்திவேல், யான்சியையும், அவரது தோழிகளையும் ஃபாலோ செய்து மோதியுள்ளார்.

கார் மோதியதில் தூக்கி வீசப்பட்ட யான்சி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அவருடன் சென்ற சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சம்பவத்திற்குப் பிறகு, 'மாட்டிக்கொள்வோம்' என்று சுமன் சக்திவேல் மற்றும் அவரது நண்பர்கள் கோயம்பேடு பூண்டு மார்க்கெட்டில் காரை நிறுத்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர்.

இருந்தும், சுமன் சக்திவேல் உள்ளிட்ட சம்பவத்தில் தொடர்புள்ள 7 பேரைக் கைது செய்துள்ளனர் போலீசார்.

மேலும், அந்தத் தனியார் மதுபான பாருக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

மைசூரு டு கோவை: பூண்டு லோடில் பதுக்கி கொண்டு வரப்பட்ட 440 கிலோ குட்கா மூட்டைகள் - பிடிபட்டது எப்படி?

தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள குட்கா, பான் மசாலா பொருள்கள் அண்டை மாநிலமான கர்நாடகாவில் எந்தவித தடையும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகின்றன. கர்நாடகாவில் இருந்து கிலோ கணக்கில் குட்கா பொருள்களை பதுக... மேலும் பார்க்க

திருத்தணி: சிறுவன் கொலை; 4 மாதங்களுக்கு பிறகு உண்மையைக் கூறிய அம்மா - தம்பதி சிக்கிய பின்னணி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் திருத்தணி அருகே உள்ள முருகம்பட்டு என்ற இடத்தில் கோழி பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இந்தப் பண்ணையில் வெண்ணிலா என்பவர் வேலை ச... மேலும் பார்க்க

தந்தையின் வீட்டைக் காலி செய்ய கோர்ட் உத்தரவு; கோபத்தில் 82 வயது தந்தையைக் குத்திக்கொன்ற மகன்

மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சாம்பாஜி நகரில் வசித்தவர் ஜாபர் பட்டேல்(82). ஒய்வுபெற்ற அரசு ஊழியரான ஜாபர் பட்டேலை அவரது மகன் அப்துல் ரஹ்மான் அடிக்கடி வீட்டை விட்டு வெளியேறும்படி கூறி அடித்து உதைத்து திட்... மேலும் பார்க்க

`சல்மான் கானுடன் பழகுபவர்களுக்கு எச்சரிக்கை!' - ஜிம் உரிமையாளரை சுட்டுக்கொன்ற பிஷ்னோய் கேங்க்

டெல்லி, பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களில் பிஷ்னோய் கூட்டத்தினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: பைக்கில் மோதிய சரக்கு வாகனம்; தாத்தா, பேரப்பிள்ளைகள் பலியான சோகம்

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்துள்ள ஓச்சேரி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் வேலு (வயது 60). இவர், அதே பகுதியில் டெய்லர் வேலை செய்து வந்தார். இவரின் பேரப்பிள்ளைகள் அஜய் (9), குணஸ்ரீ... மேலும் பார்க்க

மும்பை: அழகிப்போட்டியில் பங்கேற்ற பெண்ணிடம் ரூ.11 கோடி மதிப்பிலான கஞ்சா; விமான நிலையத்தில் கைது

மும்பையில் உள்ள பிரபல தனியார் வங்கியில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருப்பவர் ஹன்சா சன்னி. இவர் கடந்த ஆண்டு அழகிப்போட்டியில் கலந்து கொண்டு இரண்டாவது இடம் வந்தார். அவர் பாங்காக் சென்றுவிட்டு மும்பைக்குத்... மேலும் பார்க்க