செய்திகள் :

'தாயிடம் யாசகம் வாங்கணும்' - 15 வயதில் காணாமல் போனவர் 65 வயதில் சாமியாராகத் திரும்பிய சுவாரஸ்யம்!

post image

குழந்தைகள் சிறுவயதில் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு செல்வதுண்டு. அவர்கள் சில ஆண்டுகள் கழித்து திரும்ப வந்துவிடுவதுண்டு. ஒரு சிலர் அப்படி திரும்ப வராமலே போய்விடுவர்.

காணாமல் போய் பல சகாப்தங்கள் தாண்டி சொந்த ஊருக்கு வந்து ஆச்சரியம் கொடுத்த பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. மத்தியப் பிரதேசத்திலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. அங்குள்ள பித்தோராகர் அருகில் உள்ள தெளலிகட் என்ற கிராமத்தைச் சேர்ந்த புத்தி பல்லப் உபாத்யாயா என்பவர் தனது வீட்டை விட்டு தனது 15 வயதில் காணாமல் போனார்.

அவரைக் கண்டுபிடிக்க அவரது தந்தை தாராதத் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அதன் பிறகு தேடுவதைக் கைவிட்டுவிட்டனர். அவரது தந்தை இறந்தும் போனார். இந்நிலையில் அக்கிராமத்திற்கு மிகப்பெரிய தாடி வைத்த நிலையில் சன்னியாசி ஒருவர் அங்கு வசிக்கும் நந்தி தேவி வீட்டிற்கு யாசகம் பெற வந்தார்.

யாசகம் பெற வந்தவர்
யாசகம் பெற வந்தவர்

அங்கு வீட்டில் வயதான நந்திதேவி மட்டும் இருந்தார். அவரிடம் யாசகம் பெற வந்தவர் நந்தி தேதியிடம், தான் வீட்டைவிட்டு வெளியேறிய உங்களது மகன் புத்தி பல்லப் உபாத்யாயா(61) என்று தெரிவித்தார். புத்தி பல்லப் காணாமல் போய் 45 ஆண்டுகள் ஆன நிலையில் மகன் திரும்ப வந்ததை நினைத்து அவரது தாயார் ஆனந்த கண்ணீர் வடித்தார். நந்தி தேவி தாடி வைத்த சாதுவை மரியாதையுடன் வரவேற்றார். அவரிடம் தங்களுடன் தங்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆனால் தான் இங்கு தொடர்ந்து இருக்க வரவில்லை என்றும், வயதான சாதுவாக சன்னியாச சடங்குகளை முடிக்க தனது தாயிடமிருந்து யாசகம் பெற வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். புத்தி பல்லப் தனது பெயர் புத்தநாத் என்றும், தன்னால் இங்கு தொடர்ந்து தங்கி இருக்க முடியாது என்று தெரிவித்தார்.

அவரைக் காண கிராமத்தினர் கூடினர். அவர்களிடம், வீட்டை விட்டு வெளியேறிய பிறகு, அவர் சிறிது நேரம் லாரிகளிலும் பிற போக்குவரத்து நிறுவனங்களிலும் பணிபுரிந்ததாகத் தெரிவித்தார். பின்னர் படிப்படியாக கோயில்கள் மற்றும் மத வாழ்க்கைக்குத் திரும்பியதாக புத்த நாத் கிராமவாசிகளிடம் கூறினார். பின்னர் அவர் ராஜஸ்தானின் பிகானேரில் குடியேறினார்.

அங்கு அவர் தற்போது ஒரு கோவிலில் வசிக்கிறார். அவர் கிராமத்தில் நிரந்தரமாக வசிக்க வரவில்லை என்றும், சன்யாக்களுடன் தொடர்புடைய ஒரு சடங்கு கடமையை முடிக்க வந்திருப்பதாகக் கூறினார். தனது ஆன்மிக குரு நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அவர் இறப்பதற்கு முன், அவர் என்னிடம், உனது சொந்த ஊருக்குச் சென்று அம்மாவின் கைகளில் இருந்து யாசகம் பெறச் சொன்னார். அந்தக் கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே நான் வந்துள்ளேன் என்று அவர் கூறினார்.

உத்தரபிரதேசம்: நீதிமன்றத்தில் தனது மாமியாரை திருமணம் செய்து கொண்ட மருமகன்!

உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது சொந்த மருமகனையே திருமணம் செய்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார். கான்பூர் அருகில் அக்பர்பூர் என்ற இடத்தை சேர்ந்த நிஷா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற ... மேலும் பார்க்க

மும்பை தமிழர்களின் நீண்டநாள் கனவு; `தமிழ்நாடு பவன்' அமைய த.வெ.க அரசு உதவுமா?

மும்பையில் அனைத்து மாநிலங்களுக்கும் விருந்தினர் விடுதி எனப்படும் கேரளா பவன், அஸ்ஸாம் பவன் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு மட்டும் மும்பையில் அது போன்ற ஒன்றை இது வரை கட்டவில்லை. இதற்கு தமிழ்நாட்... மேலும் பார்க்க

தோல்வி நிரந்திரம் அல்ல! ஐஐடியில் இடம் கிடைக்காத மகன், தந்தைக்கு ரூ.55 லட்சம் கார் பரிசளித்த தருணம்!

ஐஐடி நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்தது, உடல் எடை அதிகரிப்பு, எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மை என ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பெரும் மன உளைச்சலில் இருந்த 26 வயது இளைஞர், இன்று தனது விடாமுயற்சியால் வாழ்... மேலும் பார்க்க

பல நாடுகளின் GDP-ஐ ஓவர்டேக் செய்யும் எலான் மஸ்க்! - பின்னால் இருப்பது டெஸ்லாவா, ஸ்பேஸ்எக்ஸ்?

உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை இதுவரை எந்தவொரு தனிநபரும் எட்டியதில்லை. ஆனால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் விரைவில் அடையக்கூடும் என்று தற்போத... மேலும் பார்க்க

தெலங்கானா: "தனியார் பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பினால் அபராதம்"- கவனம் ஈர்க்கும் கிராம மக்கள் தீர்மானம்

"தங்கள் கிராமத்திலுள்ள அனைத்துப் பிள்ளைகளும் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும், தனியார் பள்ளிகளில் சேர்க்கக் கூடாது" என்று மக்கள் எல்லோரும் சேர்ந்து தீர்மானம் நிறைவேற்றி உறுதிமொழி எடுத்துள்ளது, தெ... மேலும் பார்க்க

ரூ.6,000 சம்பளம் வாங்கும் அரசு பொறியாளரிடம் சிக்கிய ரூ.2 கோடி, சொத்து ஆவணங்கள்... ஒடிசா அதிர்ச்சி!

ஒடிசா மாநிலம், கந்தமால் மாவட்டத்தில் உள்ள பாலிகுடா என்ற இடத்தில் செயல்பட்டு வரும் பழங்குடியினர் மேம்பாட்டு ஏஜென்சியான ITDAயில் உதவி நிர்வாக பொறியாளராக பணியாற்றி வருபவர் பைகுந்தநாத். இவர் வருமானத்துக்க... மேலும் பார்க்க