செய்திகள் :

திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?

post image

கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் சென்ற தனியார் பேருந்து தாடிக்கொம்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:30 மணி அளவில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தாடிக்கொம்பு காவல்துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 11 ஆண்கள், 11 பெண்கள் மற்றும் 1 குழந்தை என 23 பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. இவர்கள் அனைவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதில், 10 ஆண்கள், 6 பெண்கள் மற்றும் ஒரு குழந்தை ஆகியோருக்கு சிறு காயங்கள்தான் என்பதால், அவர்கள் உடனடியாக சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

பேருந்து கவிழ்ந்து விபத்து
பேருந்து கவிழ்ந்து விபத்து

மேலும், பலத்த காயம் ஏற்பட்ட சுவாதி, குமுதா, தங்கம், முத்துச்செல்வம், சசி பிரபா, மற்றும் ரேகா ஆகியோருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு காவல்துறையினர் விசாரணை செய்ததில் தனியார் பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

Tejas: துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது - அதிர்ச்சி வீடியோ

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) தொடங்கியது.இதில் இந்திய விமானப்படையின் விமானங்கள் உட்பட உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள... மேலும் பார்க்க

சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்

சிவகாசியில் ரீல்ஸ் மோகத்தில் சாலையில் இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போன்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை பார்த்துக்கொண்டிருந்த டூவீலரில் சென்ற நபர் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்... மேலும் பார்க்க

கேரளா: பஸ் மோதி 4 வயது சிறுமி பலி; பள்ளி வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த துயரம்!

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், செறுதோணி அருகே உள்ள தடியம்பாடு பரப்பள்ளிலைச் சேர்ந்த பென் ஜான்சன் என்பவரது மகள் ஹேசல் பென். நான்கு வயதே ஆன ஹேசல் பென் வாழத்தோப்பு பகுதியில் உள்ள கிரிஜோதி பள்ளியில் பிளே... மேலும் பார்க்க

மதுரை: குறுக்கே வந்த நாய்; இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்த தம்பதி; பேருந்து ஏறி கணவர் இறந்த சோகம்!

நாய் குறுக்கே வந்ததால் இருசக்கர வாகனத்திலிருருந்து தவறி விழுந்த தம்பதியினர் அரசுப் பேருந்து மோதி, மனைவி கண் முன்னே கணவர் உயிரிழந்த சம்பவம் ,மதுரையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பேருந்துமதுரை ஜீவா ந... மேலும் பார்க்க

சவூதி பேருந்து விபத்து: ஒரே குடும்பத்தில் 18 பேர் உயிரிழப்பு; நெஞ்சை உலுக்கும் சோகம்!

இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து இஸ்லாமியர்களின் புனித நகரமாக கருதப்படும் மக்காவுக்கு புனித யாத்திரை செல்வது வழக்கம். இந்த நிலையில், சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ... மேலும் பார்க்க

சவூதி: மெக்கா டு மெதினா; டீசல் டேங்கருடன் மோதிய பஸ்; 42 இந்தியர்கள் பலி - உயிர் பிழைத்த ஒருவர்

சவூதி அரேபியாவுக்கு புனித பயணம் சென்று இருந்தவர்களை ஏற்றிக்கொண்டு மெக்காவில் இருந்து மெதினாவிற்கு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் முப்ரிஹட் என்ற இடத்தில் சென்றபோது எதிரில் வந்த டீசல் டேங்கர் ... மேலும் பார்க்க