செய்திகள் :

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

post image

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உலகக்கோப்பைக்கான டிராபியை அறிமுகப்படுத்தி வைத்தார்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, 'திராவிட மாடல் அரசின் ஆட்சி காலம் தமிழக விளையாட்டுத்துறையின் பொற்காலம். நிறைய சர்வதேச தொடர்களை தமிழகத்தில் நடத்தியிருக்கிறோம். அதன் தொடர்ச்சியாக இப்போது ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கியை நடத்தவிருக்கிறோம்.

தமிழ்நாட்டில் ஹாக்கிக்கென ஒரு தனிப்பெருமை இருக்கிறது. நிறைய தமிழக வீரர்கள் இந்திய அணிக்காக ஆடியிருக்கிறார்கள். நாங்கள் ஆட்சியமைத்த சமயத்தில் தமிழகத்தில் 3000 ஹாக்கி வீரர்கள் மட்டுமே பயிற்சிக்காக பதிவு செய்திருந்தார்கள். இப்போது 11000 பதிவு செய்யப்பட்ட ஹாக்கி வீரர்கள் பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்த தொடரின் இலச்சினையாக 'காங்கேயன்' காளையை அறிவிக்கிறோம். உலகம் முழுக்கமிருந்து பலதரப்பு ரசிகர்களும் இந்தத் தொடரை காண சென்னைக்கும் மதுரைக்கும் வருவார்கள் என நம்புகிறோம்.' என்றார்.

காங்கேயன் இலச்சினை
காங்கேயன் இலச்சினை

சர்வதேச ஹாக்கி சம்மேளன தலைவர் தயப் இக்ரம் பேசுகையில், 'எனக்கும் தமிழ்நாட்டுக்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. சென்னை மதுரை போன்ற முக்கிய அழகிய நகரங்களில் இந்தத் தொடரை நடத்துவதில் மகிழ்ச்சி. ஆசிய சாம்பியன்ஸ் டிராபியை இங்கே சென்னையில்தான் சிறப்பாக நடத்தினோம். நாங்கள் சரியான போட்டி நடத்தும் இடத்தைத்தான் தேர்வு செய்திருக்கிறோம் என உறுதியாக நம்புகிறோம்.' என்றார்.

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க

Ind v Aus: "இந்தியாவிடம் அடைந்த தோல்வி இன்னும் வலிக்கிறது"- ஆஸ்திரேலிய கேப்டன் அலிஷா ஹீலி

கடந்த ஞாயிற்று கிழமை (நவ. 2) நடந்த ஐசிசி மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரின் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்... மேலும் பார்க்க

`RCB அணி விற்பனைக்கு.!’ - விரும்பும் பூனாவாலா; களத்தில் குதிக்கும் அதானி - அணியின் மதிப்பு தெரியுமா?

ஆர்.சி.பி எனப்படும் ராயல் சேலஞ்சர் பெங்களூரு ஐ.பி.எல் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தொழிலதிபர் விஜய் மல்லையாவின் யுனைடெட் ஸ்பிரிட்ஸ் லிமிடெட் கட்டுப்பாட்டில் இருந்தது. அவரது நிறுவனம் பிரிட்டனை சேர்ந்த டி... மேலும் பார்க்க