செய்திகள் :

தேனிலவில் காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற வழக்கு; சோனம் ஜாமீனை ரத்து செய்ய சுப்ரீம் கோர்ட் மறுப்பு!

post image

மேகாலயாவிற்கு கடந்த ஆண்டு தேனிலவு சென்றபோது தனது கணவர் ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ததாக சோனம் ரகுவன்ஷி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இக்கொலை தொடர்பாக சோனம் ரகுவன்ஷியும், அவரது காதலன் ராஜ் சிங் குஷ்வாஹாவும் கைது செய்யப்பட்டனர். இதில் ஷில்லாங் நீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் சோனமுக்கு ஜாமீன் வழங்கியது. மேகாலயா உயர் நீதிமன்றம் ஜூன் 29 அன்று சோனமுக்கு வழங்கிய ஜாமீனை உறுதி செய்தது. இதனைத் தொடர்ந்து, மாநில அரசு இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இம்மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஷீல் நகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து சுப்ரீம் கோர்ட் சில அதிருப்திகளை வெளிப்படுத்திய போதிலும், சோனம் ஏற்கெனவே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டதைச் சுட்டிக்காட்டி, அதற்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கு விசாரணையின் முன்னேற்றத்தைக் கவனிப்பதாக நீதிபதிகள் கூறினர். மேலும், இது தொடர்பாக சோனமுக்கு நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிட்டனர்.

இந்த விசாரணையின் போது, மேகாலயா அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, புனே மலையில் இருந்து வருங்கால கணவனை பெண் ஒருவர் தள்ளிவிட்டுக் கொலை செய்ததையும் சுட்டிக்காட்டினார். சோனமுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையான தன்மை கொண்டவை என்றும், தொழில்நுட்பக் காரணங்களை முன்னிறுத்தி அவரை ஜாமீனில் விடுவிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த சோனம் ரகுவன்ஷி, தனது கணவர் ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

அவர்களுக்கு கடந்த ஆண்டு மே 11 அன்று திருமணம் நடந்தது, பின்னர் அவர்கள் மே 20 அன்று மேகாலயாவின் சோஹ்ரா (செராபுஞ்சி) பகுதிக்கு தேனிலவு சென்றனர். மூன்று நாள்களுக்குப் பிறகு தம்பதியினர் திடீரென மாயமாகினர், பின்னர் ஜூன் 2 அன்று ராஜாவின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

25 வயதான சோனம், ஜூன் 9 அன்று உத்தரப் பிரதேசத்தின் காஜிபூரில் வைத்து கைது செய்யப்பட்டார். அவரது காதலனான ராஜ் சிங் குஷ்வாஹாவும் பின்னர் கைது செய்யப்பட்டார். ஷில்லாங் மாவட்டச் சிறையில் சுமார் 10 மாதங்கள் நீதிமன்றக் காவலில் இருந்த பிறகு, கடந்த ஏப்ரல் 27 அன்று விசாரணை நீதிமன்றம் சோனமுக்கு ஜாமீன் வழங்கியது. அவர் கைது செய்யப்பட்டதற்கான காரணங்களை போலீஸ் முறையாகத் தெரிவிக்கத் தவறிவிட்டது என்று நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. கைது நினைவூட்டல் கடிதம் உள்ளிட்ட கைது தொடர்பான அனைத்து ஆவணங்களிலும், கொலைக் குற்றத்தைக் கையாளும் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-க்கு பதிலாக தவறாகப் பிரிவு 403(1) என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது

ஆவணங்கள் எதிலுமே அவர் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப்படுகிறார் என்பது தெரிவிக்கப்படாததால், இந்தத் தொடர் பிழையை வெறும் எழுத்துப்பிழையாக மட்டும் கருத முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், கைது செய்யப்படும் சமயத்தில் அவர் மீது சுமத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றத்திற்கான குறிப்பிட்ட உண்மைகளும் அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

குற்றம் சாட்டப்பட்டவரின் கைது ஆவணங்கள் கவனக்குறைவாகவும், போதிய ஆலோசனையின்றி தயாரிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு, அரசுத் தரப்பு மேல்முறையீட்டைத் தள்ளுபடி செய்தது. தட்டச்சுப் பிழை என அரசு வாதிட்டாலும், ஆவணங்களில் தேவையற்ற தகவல்கள் மீண்டும் மீண்டும் இடம்பெற்றதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

தனக்கு தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் போட்ட கணவர்; விபரீத முடிவெடுத்த மனைவி - திருவாரூரில் அதிர்ச்சி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கரும்பியூர் பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன் (31) இவரது மனைவி காயத்ரி(24). இவர்களுக்கு நான்கரை வயதில் ஒரு ஆண் குழந்தை, இரண்டு வயதில் ஒரு... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: `கோயில் புதுபிக்கும் பணிக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்' - தோழியுடன் இணை ஆணையர் கைது!

தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கிய தஞ்சாவூர் மண்டலத்தின் அறநிலையத்துறை இணை ஆணையராக இருந்தவர் ஜோதிலட்சுமி. இவரது தோழி கிரிஜா. ஜோதிலட்சுமி கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம், கோயில் ... மேலும் பார்க்க

நெல்லை: பழிக்குப் பழியாக தொடரும் கொலைகள் - 20 வருட பகைக்கு தந்தையுடன் 5 வயது மகனும் பலியான சோகம்

தலையைத் துண்டித்தது...நெல்லை மாவட்டம் அருகே உள்ள மூலச் சி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து. 45 வயதான இவர் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று (2-ம் தேதி) இவர் தனது மகன்கள் சின்னதுரை (15), ஜெயராஜ்... மேலும் பார்க்க

வெனிசுலாவிருந்து கொண்டுவரப்பட்ட இந்திய மாலுமி உடல் - மூளை, இருதயம் உள்ளிட்ட உறுப்புகள் மாயம்

உத்தரப்பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் செளகான் என்பவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சரக்கு கப்பல் வேலைக்காக வெனிசுலா சென்றார். ஆனால் கடந்த மே மாத தொடக்கத்தில், அவர் வேலைக்கு சென்ற கம்பெ... மேலும் பார்க்க

புதுச்சேரி: நாட்டை உலுக்கிய போலி மருந்து வழக்கில் `ட்விஸ்ட்’ - லஞ்சம் கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரி கைது!

இந்தியாவின் பிரபல மருந்து நிறுவனங்களான `சன் ஃபார்மா' மற்றும் `டாக்டர் ரெட்டிஸ்' பெயரில், இந்தியா முழுவதும்போலி மருந்துகளை சப்ளை செய்துவந்த கும்பலை அண்மையில் கண்டறிந்தனர் சி.பி.சி.ஐ.டி போலீஸார். தொடர்ந... மேலும் பார்க்க

'ரகசிய ஷேவிங், பாலியல் ஆசைக்கு மறுப்பு' - பெண் வேடமிட்டு ஆணை மணந்த நபருக்கு நடந்த விபரீதம்

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்பவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் அடிக்கடி ஆன்லைன் மூலம் சாட்டிங் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் சேர்ந்து கணவன்... மேலும் பார்க்க