செய்திகள் :

தேனி: மலை கிராமத்திற்கு முதல் முறையாக பேருந்து சேவை; ஆரத்தி எடுத்து வரவேற்ற மக்கள்!

post image

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கொட்டக்குடி ஊராட்சி அமைந்துள்ளது. கொட்டக்குடி, குரங்கணி, முதுவார்குடி, சென்டிரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன், கொழுக்குமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ளன.

போடியில் இருந்து குரங்கணி, செண்டிரல் ஸ்டேஷன், கொட்டக்குடி கிராமங்களுக்கு தார்ச்சாலை வசதி அமைக்கபட்டுள்ளது. ஆனால் குரங்கணி வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

குரங்கணிக்கு 1 கி.மீ. தூரத்துக்கு முன்பாக கொட்டக்குடி சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 1½ கி.மீ. தொலைவில் உள்ள கொட்டக்குடிக்குச் செல்லும் சாலையில் பஸ்கள் இயக்கப்படுவது கிடையாது.

இதனால் இந்தக் கிராமங்களுக்குச் செல்ல வேண்டுமென்றால் ஜீப் அல்லது நடந்துதான் செல்ல வேண்டும். மேலும்  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நடந்தும், ஆட்டோக்கள் அல்லது இருசக்கர வாகனங்களில் கொட்டக்குடி சாலை சந்திப்பு வரை வந்து அங்கிருந்து பஸ்களில் சென்று வருகின்றனர்.

தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து
தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து

கொட்டக்குடிக்குச் செல்லும் சாலை குறுகலாக உள்ளதால் அங்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தது. தங்கள் கிராமத்துக்கு பஸ் இயக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த வாரம் தேனி மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்று கொண்ட வைத்திநாதன், கொட்டக்குடிக்கு அரசு பஸ் சேவை தொடங்குவது தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் அரசுப் போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டனர். 

தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து
தேனி மலை கிராமத்திற்கு முதன்முதலாக இயக்கப்பட்ட பேருந்து

அதன் படி போடியில் இருந்து குரங்கணிக்கு காலை 5.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பஸ் இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தை கொட்டக்குடி சாலையில் இயக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து வேறு அரசுப் பேருந்தை கொட்டக்குடிக்கு நேற்று சோதனை முறையில், அதிகாரிகள்  இயக்கிப் பார்த்தனர்.

அந்தச் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமையவே, நேற்று மாலை முதல் கொட்டக்குடி கிராமத்திற்கு பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இந்த அரசுப் பேருந்து போடியில் இருந்து தினமும் காலை, மாலை நேரங்களில் கொட்டக்குடிக்கு இயக்கப்படவுள்ளது.

கொட்டக்குடி கிராமத்துக்கு முதல் முறையாக பேருந்து சேவை  தொடங்கியுள்ளதால் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்டாலின் படத்துடன் வந்த திமுக மேயர்; திண்டுக்கல் மாநகராட்சி கூட்டத்தில் என்ன நடந்தது?

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய ஆட்சி அமைந்த பிறகு, திண்டுக்கல் மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் இளமதி, துணை மேயர் ராஜப்பா மற்றும் ஆணையர் செந்தில் முருகன் ஆகியோர் த... மேலும் பார்க்க

திருச்செந்தூர் கோவில்: "25 லட்சம் ரூபாய்க்கு முறைகேடு; கண்காணிக்காதது ஏன்?" - நீதிபதி கேள்வி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கட்டண தரிசன முறை நடைமுறையில் உள்ளது. இதில் ரூ.100 டிக்கெட் பெறும் பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இந்த ரூ.100 டிக்கெட் வினியோகம் ச... மேலும் பார்க்க

உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு: ``உண்மைக்கு புறம்பான செய்தி" - உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்

தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்டு, முதல் கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 151 இடங்களை அக... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசின் நிலைப்பாடு என்ன? - உயர் நீதிமன்றம் கேள்வி

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தீபம் ஏற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என மாவட்ட நிர்வாகம் மற்றும் கோயில் நிர்வாகம் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்... மேலும் பார்க்க

Pocso சட்டம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க ‘சிங்கப்பெண் விழிப்புணர்வு’ முகாம்! - உயர் நீதிமன்ற உத்தரவு

திருச்சி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை போக்சோ நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்ககுளை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பலரும் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிப... மேலும் பார்க்க

`வங்கிகளில் மக்கள் பணம் வைக்கும் விதத்தில் மாற்றம் ; RBI தங்கத்தை விற்கிறதா?' - அறிக்கை சொல்வதென்ன?

சர்வதேச அளவில் புகழ்பெற்ற புளூம்பெர்க் ஊடகம், தனது பொருளாதார நிபுணர் அபிஷேக் குப்தாவின் ஆய்வை மேற்கோள்காட்டி ஒரு செய்தியை வெளியிட்டது. அதன்படி, மே 22-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், இந்திய... மேலும் பார்க்க