செய்திகள் :

நடிகர் ரன்வீர் சிங்கை தொடர்ந்து சல்மான் கான் மைத்துனர்! தொடரும் பிஷ்னோய் கேங்க் மிரட்டல் சம்பவங்கள்

post image

மும்பையில் நேற்று முன்தினம் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிற்கு குஜராத் சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோய் ஆட்கள் பல கோடி ரூபாய் கேட்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். வாட்ஸ் ஆப் மூலம் ரன்வீர் சிங் செயலாளருக்கு இந்த மிரட்டல் வந்திருந்தது.

இது குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில் இப்போது நடிகர் சல்மான் கானின் சகோதரி அர்பிதா கானின் கணவர் ஆயுஷ் சர்மாவிற்கும் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க்கிடமிருந்து மிரட்டல் வந்திருக்கிறது. இமெயில் மூலம் இக்கொலை மிரட்டல் அனுப்பப்பட்டுள்ளது. அதனை அனுப்பியவர் தன்னை லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்தவன் என்று குறிப்பிட்டுள்ளான். இது குறித்து போலீஸில் புகார் செய்யப்பட்டுள்ளது.

ரன்வீர் சிங் மற்றும் ஆயுஷ் சர்மா ஆகிய இரண்டு பேருக்கும் வந்திருக்கும் மிரட்டல் குறித்து குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர். ரன்வீர் சிங்கிற்கு வாட்ஸ்ஆப்பில் வந்த வாய்ஸ் மெசேஜ் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதை மறைக்க வி.பி.என்((Virtual Private Network) தொழில் நுட்பத்தை பயன்படுத்தி இருந்தனர்.

மனைவியுடன் ஆயுஷ் சர்மா

ஆனால் ஆயுஷ் சர்மாவிற்கு புரோடான் மெயின் மூலம் மிரட்டல் விடுத்திருந்தனர். இக்கொலை மிரட்டலை விடுத்த நபர் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மிகவும் விழிப்புடன் இருக்கும் படியும் தேவைப்பட்டால் பாதுகாப்பு கேட்கும்படி ஆயுஷ் சர்மாவிடம் போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் ஐந்து பேர் மீதும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ரோஹித் ஷெட்டி வீட்டின் மீது துப்பாக்கிச்சூடு நடத்த ஆயுதங்களை கொடுத்து உதவிய லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தை சேர்ந்த ஆசாராம் என்பவனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த இரண்டு வாரத்தில் லாரன்ஸ் பிஷ்னோய் கேங்க் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகர்கள் 12 பேரிடம் பணம் கேட்டுமிரட்டல் விடுத்துள்ளது. ஏற்கனவே சல்மான் கானின் வீட்டின் மீது இதே கேங்க் துப்பாக்கிச்சூடு நடத்தி இருந்தது.

முக்கோண காதல்: நண்பனை கொலை செய்து 190 கி.மீ தூரம் எடுத்துச்சென்று உடலை எரித்து மும்பை போலீஸ்காரர்

மும்பை அருகில் உள்ள நவிமும்பையில் போலீஸ்காரராக இருப்பவர் பந்து பிசே (49). இவர் தான் விரும்பும் பெண்ணை தனது நண்பரும் விரும்பியதால் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து தனது நண்பரை கொலை செய்து கிணற்றில் த... மேலும் பார்க்க

பேரணாம்பட்டு: பேருந்தில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் - தோல் வியாபாரி கைது

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மாலை கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருக்கிறார். குடியாத்தத்தில் இருந்து பேரணாம்பட்டு செல்லும் தனியார் பேருந்தில... மேலும் பார்க்க

குடியாத்தம்: பாலியல் வன்முறைக்குள்ளான 14 வயது சிறுமி - போலீஸார் தீவிர விசாரணை

திருவண்ணாமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியின் 14 வயது வளர்ப்பு மகள், வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து பத்தாம் வகுப்புப் பயின்றுவந்தார். இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக... மேலும் பார்க்க

நாமக்கல்: சொத்து வரி மாற்றத்திற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம்; வருவாய் அலுவலர் வசமாகச் சிக்கியது எப்படி?

நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல். விவசாயியான இவரது பெயரில் உள்ள நான்கு வீடுகளை அவரது மகன் பெயருக்கு மாற்றி, சொத்து வரி விதிக்கக் கோரி, நாமக்கல் மாநகராட்சியி... மேலும் பார்க்க

`வெறுப்புப் பேச்சு'- அண்ணாமலைக்கு சம்மன்; பியூஷ் மானுஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு!

2023-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி சென்னையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய அப்போதைய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “1956-ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் பகுத்தறிவுக் கருத்துகளைப் பேசிய அற... மேலும் பார்க்க

அதானி குழுமம் மீது ஊழல் பதிவுகள், செய்தி கட்டுரைகள்; செய்தியாளருக்கு சிறைத் தண்டனை! - விவரம் என்ன?

குஜராத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் ரவி நாயர். இவர் அவதூறு பரப்பும் வகையில் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் பதிவுகள் மற்றும் பொய்யான செய்திக் கட்டுரைகளை வெளியிட்டதாக குஜராத் நீதிமன்றத்தில் வழக்கைத் தொடர்ந்த... மேலும் பார்க்க