புனே: தெருவில் கேட்பாரற்று கிடந்த ரூ.10 லட்சம்; உரியவரிடம் ஒப்படைத்த பெண் தூய்மை...
"நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே; அதுக்குல்ல அலறல்" - திமுக வை தாக்கும் தவெக விஜய்
இன்று காஞ்சிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்களை சந்தித்துப் பேசுகிறார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு நடைபெறும் விஜய்யின் மக்கள் சந்திப்பு என்பதால், பலத்த பாதுகாப்புடன் சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர் ஜேப்பியர் தொழில்நுட்ப தனியார் கல்லூரி வளாகத்தைச் சுற்றி அதிக எண்ணிக்கையில் பவுன்சர்கள் பணியில் நிறுத்தப்பட்டு இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெறுகிறது.





கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் மக்கள் சந்திப்புகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை திட்டமிட ஓய்வு பெற்ற காவல்துறையினர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு சார்பில் கடந்த நான்கு நாட்களாக தவெகவின் தொண்டரணிக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அந்தத் தொண்டரணியினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இந்த உள்ளரங்கு மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், "'நாட்டுக்காக உழைக்கவே அண்ணா பிறந்தார். பொதுநலத்தில்தான் நாள் முழுக்க கண்ணா இருந்தார்' என்று எம்.ஜி.ஆர் அண்ணாவைப் பற்றி பாடலில் சொன்னார். அப்படிப்பட்ட அண்ணா பிறந்த ஊர் காஞ்சிபுரம்.

அறிஞர் அண்ணா ஆரம்பிச்ச கட்சியை, அவருக்குப் பிறகு கைப்பற்றி இப்போ என்னவெல்லாம் பண்றாங்கனு எல்லாரும் பார்த்துகிட்டுதான் இருக்காங்க. நான் எந்தக் கட்சியை சொல்றேனு எல்லாரும் தெரியும்னு நினைக்கிறேன்.
தனிப்பட்ட முறையில் அவங்களுக்கும், எங்களுக்கும் எந்த சண்டையும், வன்மமும் இல்லை. ஆனால், மக்களை நம்பவச்சு நம்மள ஓட்டு போட வச்சு துரோகம் பண்றவங்கள, நாடகம் ஆடுறவங்கள எப்படி கேள்வி கேட்கமால் இருக்க முடியும்.
பேரறிஞர் அண்ணா, 'மக்களிடம் செல், மக்களுக்கு சேவை செய்' என்றார். அதை மறந்துவிட்டார்கள் அவர்கள். நாம்தான் அதைச் செய்கிறோம்.
கொள்கை இல்லைனு சொல்றாங்க. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ, சமூகநீதி கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது எங்கள் தவெக கட்சி.
CAA எதிர்ப்பு, நீட் எதிர்ப்பு, வக்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நிதிமன்றம்வரை நீதி கேட்டு போனோம், கல்விய மாநில பட்டியல்ல சேர்க்கனும்னு சொன்னோம், சமத்துவம், சமவாய்ப்பு என நீதிகேட்ட தவெக விற்கு கொள்கை இல்லையா?

கொள்கைய வெறும் பேச்சுல மட்டும் பேசிட்டு இருக்காங்க. இவங்க கொள்கையே கொள்ளைதானே.
'எங்க கட்சி சங்கர மடம் இல்லைனு' சொன்னது யாரு? யார் சொன்னாங்க, எதுக்கு சொன்னாங்க. இப்போ உங்க கட்சியில என்ன நடக்குதுனு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
அதுனால 'பாப்பா பவள விழா பாப்பா. நீ பாசாங்கு காட்டாத பாப்பா. நீ நல்லவர்களைப் போல நடிப்பதைப் பார்த்து நாடே **** பாப்பா' னு சொன்னதையே இன்னும் சீர்யஸ எடுத்துகிட்டு இருக்கீங்க. நாங்க இன்னும் உங்கள விமர்சனம் பண்ணாவே ஆரம்பிக்கல. நாங்க இன்னும் அடிக்கவே ஸ்டார்ட் பண்ணலையே. அதுக்குல்ல அலறுனா எப்படி?" என்று 'திமுக' வை தாக்கிப் பேசியிருக்கிறார் விஜய்.


















