செய்திகள் :

நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்

post image

மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடத்தல்காரர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் விமான நிலையத்திற்கு தாய்லாந்தில் இருந்து வரும் பயணிகள் போதைப்பொருள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தாய்லாந்தில் இருந்து வந்த இரண்டு பயணிகளின் உடமைகளை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

மும்பை விமான நிலையம்
மும்பை விமான நிலையம்

ஆனால் அவர்களிடம் போதைப்பொருள் எதுவும் இல்லை. எனினும், அவர்களிடம் நூடுல்ஸ் மற்றும் பிஸ்கெட் பாக்கெட்கள் இருந்தன. அதில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த பாக்கெட்களை சோதனை செய்தபோது, அதில் கஞ்சா இலைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

அவை அனைத்தும் ஹைட்ரோபோனிக் முறையில் வளர்க்கப்பட்ட கஞ்சா இலைகள் ஆகும். மொத்தம் 42 கிலோ கஞ்சா இலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மொத்த மதிப்பு ரூ.42 கோடியாகும். மொத்தம் 21 பாக்கெட்கள் இருந்தன. அவற்றை கடத்தி வந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டனர். இதன் மூலம் கடந்த 3 நாட்களில் மும்பை விமான நிலையத்தில் ரூ.90 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விமானங்கள் மட்டுமல்லாது கப்பல் மூலமாகவும் போதைப்பொருள் மும்பைக்கு கடத்தி வரப்படுகிறது. இப்போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க