செய்திகள் :

நெல்லை: தகாத உறவைக் கைவிட மறுத்த மகள்; வாயில் விஷம் ஊற்றி கொன்று, தற்கொலை நாடகமாடிய பெற்றோர் கைது

post image

நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகேயுள்ள செண்பகராமநல்லூரைச் சேர்ந்தவர் சிவன். இவரது மனைவி வைரம்மாள். இவர்களுக்கு 5 மகள்கள் உள்ளனர். இவரது 5வது மகள் அமுதா.

திருமணமாகாத நிலையில் அமுதா தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரது உறவினர் ஒருவர் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார். நாளடைவில் அவருக்கும் அமுதாவிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

மூலைக்கரைப்பட்டி
மூலைக்கரைப்பட்டி

அந்த உறவினருக்கு ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள நிலையில், இருவருக்கும் திருமணம் மீறிய உறவாக மாறியது. இந்த விவகாரம் அமுதாவின் பெற்றோருக்குத் தெரிய வர தகாத உறவைக் கைவிடும்படி அமுதாவைக் கண்டித்துள்ளனர். ஆனால், அமுதா அவருடனான பழக்கத்தைக் கைவிட மறுத்துள்ளாராம்.

இதுதொடர்பாக அமுதாவிற்கும் அவரது பெற்றோருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று அமுதா வீட்டில் தூக்கில் தொங்கியுள்ளார்.

அவர் தற்கொலைசெய்து கொண்டதாக பெற்றோர்கள் உறவினர்கள், ஊர்க்காரர்களிடம் கூறியுள்ளனர். இதுகுறித்து மூலக்கரைப்பட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு அமுதாவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அமுதாவின் கழுத்துப் பகுதியில் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகித்தனர்.

மூலைக்கரைப்பட்டி
மூலைக்கரைப்பட்டி

அமுதாவின் தாய், தந்தையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பலமுறை கூறியும், அமுதா தகாத உறவைக் கைவிட மறுத்ததால் அவரது வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அமுதாவின் கழுத்தை நெரித்தோம். சிறிது நேரத்தில் அமுதா உயிரிழந்ந்தார்.

பின்னர் உடலை தூக்கில் தொங்கவிட்டோம் எனக் கொலை செய்ததை இருவரும் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து அமுதாவின் தாய், தந்தை இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.   

ஸ்ரீவைகுண்டம் விவகாரம்: "என்னை வாழ விடாமல் அவதூறு.!" - பாதிக்கப்பட்ட பெண், டி.ஐ.ஜி-யிடம் கண்ணீர்!

. தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 37 வயது பெண்ணை த.வெ.க நிர்வாகியான பாலமுருகன் மற்றும் அவரது நண்பர் ஆகியோர் கூட்டுப் பாலியல் வன்கொடும... மேலும் பார்க்க

சேலம்: பெண்களை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை; தவெக உறுப்பினர் கைது; ஒதுங்கும் கட்சி

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்களைப் பல்வேறு வழிகளில் ஏமாற்றி ஆபாச வீடியோக்களை எடுத்து மிரட்டி வந்த த.வெ.க-வைச் சேர்ந்த மணிகண்டன் என்கிற நபரை காவல்துறையினர் நேற்றிரவு கைது செய்தனர்.... மேலும் பார்க்க

சேலம்: குழந்தைக்கு வலிப்பு வந்ததாக நாடகமாடிய தாய்; அம்பலமான நாடகம்; குழந்தை உயிரிழந்தது எப்படி?

சேலம் மாவட்டம் தலைவசால் அருகில் உள்ள வரகூர் தெற்கு காடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் திருமலை வாசுதேவன். இவரின் மனைவி லலிதா. இந்தத் தம்பதிக்கு ஹர்சன் ராஜ், புவன் ராஜ் ஆகிய இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன... மேலும் பார்க்க

கலெக்டர் ஆபீஸ் வந்த போலி சிபிஐ அதிகாரி! - தவெக உட்பட 20-க்கும் அதிகமான போலி ஐடி கார்டுகள் பறிமுதல்

. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுகாதார நல்வாழ்வுக் குழுமத்தின் தற்காலிக ஆய்வாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து ... மேலும் பார்க்க

பீகார் : 40 மீட்டர் மொபைல் போன் டவரை தூக்கிச் சென்ற திருடர்கள்! - அதிகாரிகள் அதிர்ச்சி

பீகாரில் அடிக்கடி வித்தியாசமான திருட்டு நடப்பது வழக்கம். இதற்கு முன்பு ஆற்றின் அமைக்கப்பட்டு இருந்த இரும்பு பாலத்தை கூட இரவோடு இரவாக திருடிச்சென்ற சம்பவங்கள் நடந்து இருக்கிறது. இப்போது மொபைல் போன் டவர... மேலும் பார்க்க

கேரள - தமிழக எல்லை: 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்ம மரணம் - சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோர்ட்!

கேரளம்-தமிழ்நாடு எல்லையோர மாவட்டமான பாலக்காட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 13 ஆண்டுகளில் 23 குழந்தைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். பாலக்காடு மாவட்டத்தில் ​வாளையார், கசபா, கொல்லங்கோடு, ​பட்டாம்ப... மேலும் பார்க்க