செய்திகள் :

`` 'நேத்து முளைச்ச காளான்' என விஜய்யை சொல்லவில்லை" - பிரேமலதா விஜயகாந்த் விளக்கம்!

post image

விஜய் அரசியலில் காலாடி எடுத்து வைத்தது தொடங்கி, தேமுதிக பிரேமலாதா விஜயகாந்த் தொடர்ந்து ஆதரவு தெரிவித்த வண்ணமிருக்கிறார்.

தேமுதிக இன்னும் கூட்டணியை முடிவு செய்யாமல் இருக்கும் நிலையில் விஜய்யின் தவெக கட்சியோடு கூட்டணி இருக்குமா அல்லது அதிமுக, திமுக-வோடு கூட்டணி இருக்குமா என்று கூட்டணி பேச்சுவார்த்தைகள் அரசியலில் அடிபட்டுக் கொண்டிருக்கின்றன.

விமான நிலையத்தில் விஜய்

2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதையொட்டி தேமுதிக சார்பில் தமிழகம் முழுவதும் 'உள்ளம் தேடி, இல்லம் நாடி' என்கிற பெயரில் அதன் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.

நேற்று சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை சுற்றுப் பயணத்தில் பிரேமலதா விஜயகாந்த், "கேப்டன் விஜயகாந்த் இருந்தபோது யாரும் அவரை புரிந்துகொள்ளவில்லை.வாழ்க்கை ஒரு வட்டம். கீழே இருப்பவர்கள் மேலே வருவார்கள்.

அதேபோல், மேலே இருப்பவர்கள் கீழே வருவார்கள் மாற்றம் ஒன்றே மாறாதது. நேத்து முளைச்ச காளான் எல்லாம் இங்க எடுபடாது. அந்த மாற்றம் மக்களுக்கு நல்லது நடக்கின்ற சிறந்த மாற்றமாக இந்த தேர்தல் அமையும். யார்? யாரையோ நம்பி ஓட்டு போடுகிறீர்கள். தேமுதிகவிற்கு ஏன் வாய்ப்பு கொடுக்கக் கூடாது?" என்று பேசியிருந்தார்.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

இந்நிலையில் பிரேமலதா 'நேத்து முளைச்ச காளான்' என்று விஜய்யை குறிப்பிட்டாரா?' என்று சர்ச்சை கிளம்பிவிட்டது.

இதற்கு விளக்கமளித்திருக்கும் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், "நான் விஜய்யை 'நேற்று முளைத்த காளான்' என்று சொல்லவில்லை. விஜய் எங்கள் வீட்டுப் பிள்ளை சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவோரை கூத்தாடி என நாங்கள் தாக்கிப் பேசவில்லை. விஜய்க்கு எப்போதும் தேமுதக எதிர்ப்பு தெரிவித்ததில்லை. சினிமாவைப் போல் அரசியலிலும் அவர் சாதிக்க வேண்டும்" என்று பேசியிருக்கிறார்

காசா: 7 கி.மீ நீளம், 25 மீ ஆழம், 80 அறைகள்; இஸ்ரேல் கண்டறிந்த ஹமாஸின் மர்ம சுரங்கம்!

இஸ்ரேலிய ராணுவத்தின் (IDF) அதிரடிப் படையினர், காஸா பகுதியில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய சுரங்கம் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். லெப்டினன்ட் ஹடார் கோல்டின் உடல், இந்தச் சுரங்கத்தில்தான் ஹமாஸ் பயங... மேலும் பார்க்க

"மெட்ரோவுக்கு இங்கு போராடி என்ன பயன்? நாடாளுமன்றத்தை முடக்குங்கள்" - திமுகவுக்கு வேலுமணி அறிவுரை

கோவை அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற பூத் கமிட்டி கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எஸ்ஐஆர் பணிகள் மிகவும் தொய்வாக உள்ளன. கோவை மாவட்ட... மேலும் பார்க்க

CIA: "போர் வந்தால் இந்தியா வெல்லும்" - பாகிஸ்தானிடம் மன்னிப்புக் கேட்க மறுத்த அமெரிக்க அதிகாரி!

அமெரிக்காவின் முக்கிய உளவு நிறுவனமான CIAவில் பணியாற்றிய ஜான் கிரியாகோ என்ற அதிகாரி இந்தியா, பாகிஸ்தானின் ராணுவ பலத்தை ஒப்பிட்டு பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு மன்னிப்புக் கேட்கக் கூற... மேலும் பார்க்க

"அமெரிக்க அதிரபரையே எதிர்க்கும் துணிவு கொண்டவர் மோடி" - நயினார் நாகேந்திரன்

நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை, குற்றச்சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதனை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். கோவ... மேலும் பார்க்க

``ஆளுநர்களுக்குக் காலக்கெடு விதிக்கும் வரை ஓயமாட்டோம்!" - முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நீண்டகாலமாகக் கிடப்பில் போட்டதை எதிர்த்து, தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்ந... மேலும் பார்க்க