செய்திகள் :

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் கம்மல் திருட்டு... வைரலான வீடியோவால் சிக்கிய இருவர்

post image

நேபாளத்தின் நாராயணி ஆற்றங்கரையில், கடும் வெள்ளத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் இருந்து தங்கக் கம்மலை இருவர் திருடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சித்வான் மாவட்ட போலீஸார் 25 மற்றும் 38 வயதுடைய இருவரைக் கைது செய்துள்ளனர்.

செல்போனில் சிக்கிய வீடியோ

வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட பெண்ணின் உடலை இருவர் மரக்கட்டைகளைப் பயன்படுத்தி கரைக்கு இழுத்து வந்து, பின்னர் அவரது காதுகளில் இருந்த தங்கக் கம்மலை எடுத்ததாகக் கூறப்படுகிறது. அங்கிருந்த சிலர் இந்தச் சம்பவத்தை செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளனர்.

போலீஸார் கைது நடவடிக்கை

இந்தச் சம்பவத்தின் 41 விநாடி வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து வீடியோவை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீஸார், சம்பவத்தில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டனர்.

மதன் குரூங் (25), உமேஷ் சௌத்ரி (38) ஆகிய இருவரையும் பரத்பூர் பகுதியில் உள்ள பொக்காரா பேருந்து நிலையம் அருகே ஆகஸ்ட் 27-ம் தேதி போலீஸார் கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

காவல்துறை எச்சரிக்கை

இதற்கிடையே, நேபாளம் மற்றும் திபெத் பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளனர். இந்தச் சூழலில், உயிரிழந்தவர்களின் உடமைகளைத் திருடுவது போன்ற செயல்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாளக் காவல்துறை தெரிவித்துள்ளது.

மதுரை: 'இரட்டிப்பு லாபம் பெறலாம்' - 'சதுரங்க வேட்டை' பட பாணியில் ஏமாற்றும் Bitcoin மோசடி கும்பல்

மதுரை மாவட்டம் மேலூரைச் சுற்றியுள்ள கட்டையம்பட்டி, கோட்டநத்தாம்பட்டி, அ.வல்லாளப்பட்டி, அய்யாப்பட்டி, மேலவளவு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் உள்ளனர். அவர்களைத் தொடர்பு கொள்ளும் மக்களிடம் ரூபாய்... மேலும் பார்க்க

சென்னையில் விற்கப்பட்ட பச்சிளம் குழந்தை, ஆந்திராவில் மீட்பு - தாய், டாக்டர் சிக்கிய பகீர் பின்னணி!

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ். இவரின் மனைவி பவித்ரா. இவருக்கு அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது. ரௌடியான `குள்ள' கணேஷ், வழக்கு ஒன்றில் கைதாகி புழல் சிறைய... மேலும் பார்க்க

மதுரை: ஆசிரியர் திட்டியதால் தற்கொலை செய்துகொண்ட பள்ளி மாணவி; உறவினர்கள் போராட்டம்!

மதுரை மாவட்டம், சமயநல்லூர் பர்மா காலனியைச் சேர்ந்தவர்கள் அந்திஸ்வரன்- ஆனந்த லெட்சுமி தம்பதி. இவர்களது மகள், அலங்காநல்லூர் அருகே உள்ள கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்த ... மேலும் பார்க்க

மணல் திருட்டு; அபேஸான கும்பல்... மாட்டு வண்டிகளை ஸ்டேஷனுக்கு ஓட்டிவந்த போலீஸ்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே கிளியூர் பகுதியில் சட்டவிரோதமாக மாட்டு வண்டியில் மணல் கடத்தப்படுவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், திருவெறும்பூர் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தக... மேலும் பார்க்க

மதுரை: மதுபோதையில் தவறாக நடக்க முயன்ற மகன்; அடித்துக் கொன்ற தாய் பரபரப்பு வாக்குமூலம்

மதுரை மாவட்டம் வரிச்சியூர் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவரது மனைவி அய்யம்மாள்(50). இவரது கணவன் உயிரிழந்த நிலையில் தனது மகன் ராஜாவுடன் வசித்துவந்துள்ளார். ராஜாவுக்குத் திருமணமாகி மனைவியைப் பிரி... மேலும் பார்க்க

`கொலை குறித்த பாடல்' இன்ஸ்டாவில் வெளியிட்ட சிறிது நேரத்தில் ஹரியானா பாடகர் உ.பி.யில் சுட்டுக்கொலை!

ஹரியான பாடகரும் யூடியூபருமான அங்கித் பாலியன் (32) உத்தரப்பிரதேசத்தில் ஜிம்மிற்கு வெளியே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சாம்லி மாவட்டத்தில் உள்ள கோட்வாலி என்ற நகரில் உள்ள ஆர்யபுரி ... மேலும் பார்க்க