'ஹீரோவா வேற யாரும் கிடைக்கலயா'னு கேட்டிருக்காங்க’- 1000 எபிசோடு மகிழ்ச்சியில் 'ஆ...
’பீகார் வெற்றிக்கு காரணம் SIR தான்!’ - முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
திண்டுக்கல் காட்டு ஆஸ்பத்திரி சாலையில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம் சிலைக்கு திண்டுக்கல் அதிமுக எம்எல்ஏ மற்றும் முன்னாள் அமைச்சர் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அதிமுக திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, ``பீகார் இடைத்தேர்தல் முழுக்க முழுக்க தமிழகத்தில் வெற்றியாக வரும்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்திலும் அப்படியே பிரதிபலிக்கும். 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று 2026ல் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார்.
எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது தான், காங்கிரஸ் ஆட்சியிலும் இது நடைபெற்றது. ஆனால் எதற்காக ராகுல் காந்தி எஸ்.ஐ.ஆர்.ஐ எதிர்க்கிறார் என்று தெரியவில்லை.. ஏன் திமுக இதை தடுக்கிறார்கள்? எனத் தெரியவில்லை.. ஆனாலும் வாக்காளர் சேர்க்கும் இடங்களில் திமுக கொடி தான் பறக்கிறது. அவர்கள்தான் அனைத்து இடங்களிலும் இருக்கிறார்கள்.

திமுக புலி வால் பிடித்துவிட்டு விட முடியாமல் தவிக்கிறார்கள். உண்மை தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியும். எஸ்ஐஆரை வீடு வீடாக சேர்க்க வேண்டும். அது நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பீகார் வெற்றிக்கு காரணம் எஸ்.ஐ.ஆர். தான்.
அரசு ஊழியர்கள் போராட்டம் செய்வது நூற்றுக்கு நூறு சரி. 234 தொகுதியில் ஆயிரக்கணக்கான வாக்கு சாவடிகள் உள்ளது. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால்தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள்.

திண்டுக்கல் தொகுதியில் இறந்தவர்கள், இரட்டை வாக்குகள் பெற்றவர்களை கண்டுபிடித்து நீக்குதல் போன்ற காரணங்களால் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் குறையும்” என்றார்.












