செய்திகள் :

மகனை வாட்டிய உடல்நிலை; 36-வது மாடியிலிருந்து குதித்த இந்திய வம்சாவளி குடும்பம் - லண்டனில் சோகம்!

post image

லண்டனில் உள்ள சொகுசு அடுக்குமாடிக் குடியிருப்பின் 36-வது மாடியில் இருந்து கீழே குதித்து இந்தியத் தம்பதியினர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலகெங்கும் வாழும் இந்தியர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனில் உள்ள எலிஃபெண்ட் அண்ட் கேசில் பகுதியில் அமைந்திருக்கும் 45 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் 27-05-2026 அன்று இந்த விபரீதம் நடந்துள்ளது.

இதில் 47 வயதான ராகேஷ் பாய், 46 வயதான அவர் மனைவி அதிதி பரல்கர் மற்றும் அவர்களின் 9 வயது மகன் சித் ஆகிய மூவரும் சுமார் 400 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் மகன் சித், சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட தீவிரமான மற்றும் குணப்படுத்த முடியாத பல உடல்நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு, பேசும் திறனை இழந்து நீண்ட நாள்களாக அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்கொலை தடுப்பு மையம்

முதலுதவி மற்றும் தீவிர மீட்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் மூவரும் இறந்துவிட்டனர். இந்த மரணங்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வரும் லண்டன் மாநகரக் காவல் துறை, இதில் வெளிநபர்கள் எவருக்கும் தொடர்பில்லை என்றும், இது தற்கொலைச் சம்பவமாக இருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

மும்பையில் இருந்து லண்டனுக்குக் குடிபெயர்ந்து நிதி மற்றும் கட்டுமானத் துறைகளில் தங்களது சொந்த ஆலோசனை நிறுவனங்களை நடத்தி வந்த இத்தம்பதியினர், தங்களது மகனின் தீவிர மருத்துவ நிலைக்குப் பல்வேறு சிகிச்சை முறைகளை மேற்கொண்டும் பலனளிக்காததால் கடுமையான மன உளைச்சலில் இருந்து வந்துள்ளனர்.

குறிப்பாக, மகனைப் பராமரித்து வந்த அதிதி, தீவிர மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில், இந்தக் கடுமையான சூழல் காரணமாகவே அவர்கள் இத்தகைய விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் லண்டன் காவல் துறை தொடர்ந்து முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

விஜய் : எம்.ஜி.ஆர் பாணியில் `வாள்' காணிக்கை - கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் தரிசனம்!

டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் முடித்த கையோடு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று லேண்ட் ஆனது மங்களூரில். அங்கே புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். கூடவே, மூகாம்பி... மேலும் பார்க்க

`ஆண் சடலங்களின் அந்தரங்க உறுப்பை ஒப்பிட்டு பேசுவோம்' - காமெடி ஷோவில் பெண் டாக்டர் சர்ச்சை கருத்து

மும்பையில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கே.இ.எம்.மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் படித்தவர் டாக்டர் சாஜல் பவார். இவர் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை தொடர்பான பயிற்சியின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை... மேலும் பார்க்க

திறந்துக் கிடந்த வீட்டின் கேட்; சாலைக்குத் தவழ்ந்து வந்த குழந்தை; சாமர்த்தியமாகச் செயல்பட்ட டிரைவர்!

கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் கொண்டோட்டியிலிருந்து வலியபறம்பு செல்லும் 'சபா மர்வா' என்ற தனியார் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. பேருந்து கிணறுபடி என்ற பகுதியில் வளைவான சாலையில் பேருந்து சென... மேலும் பார்க்க

இடி தாக்கி இறந்த காளை; ஏர்கலப்பையில் மனைவியைப் பூட்டி உழவடித்த விவசாயி - முதல்வரை உலுக்கிய சம்பவம்!

இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில்தான் அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நடக்கின்றன. சமீபத்தில் மகாராஷ்டிரா அரசு விவசாயிகளின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இரண்டு லட்சம் ர... மேலும் பார்க்க

ஐ.நா மேடையில் ஒலிக்கவிருக்கும் தமிழக இளைஞரின் குரல்! - யார் இந்த அபிஷேக் அசீர்?

ஜூலை 13-ம் தேதி, சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வில் பங்கேற்றுப் பேசவிருக்கிறார் 24 வயதேயான அபிசேக் அசீர். திருநெல்வேலி பாளை பகுதியைச் சேர்ந்தவர் அபிஷேக் அசீர... மேலும் பார்க்க

மும்பை: `28,000 குடிசைவாசிகளுக்கு அடுக்குமாடி வீடுகள்' - அதானியைத் தொடர்ந்து களமிறங்கும் அம்பானி

மும்பையில் அதானி நிறுவனம் பெரிய அளவில் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக கருதப்படும் தாராவி குடிசை மேம்பாட்டுப் பணிகளை அதானி நிறுவனம்தான் மேற்கொண்டு... மேலும் பார்க்க