செய்திகள் :

மனைவிக்கு ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவன்; 9 மாத போராட்டத்திற்கு பிறகு பெண் உயிரிழப்பு

post image

பெங்களூரு அருகே உள்ள அத்திபேலே என்ற இடத்தில் வசித்தவர் வித்யா. இவரை அவரது கணவரும், அவரது மாமனாரும் சேர்ந்து கடுமையாக சித்ரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்தனர்.

திடீரென வித்யாவின் உடல் நிலை கடந்த மார்ச் மாதம் பாதிக்கப்பட்டது. உடனே அவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். அங்கிருந்து அவர் வேறு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு வித்யாவிற்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டதில் அவரது உடம்பில் பாதரசம் கலந்திருப்பது தெரிய வந்தது.

வித்யா
வித்யா

உடனே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதோடு அவரது மாதிரிகள் மேல் சோதனைக்காக அனுப்பப்பட்டன. இச்சோதனையிலும் உடம்பில் பாதரசம் கலந்திருப்பது தெரிய வந்தது. அவர் அங்கிருந்து விக்டோரியா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது உடம்பு முழுவதும் பாதரசம் பரவி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அது உடம்பில் உள்ள சிறுநீரகம் உட்பட அனைத்து முக்கிய உறுப்புகளையும் சேதப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

வித்யா தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இது தொடர்பாக வித்யா போலீஸில் புகார் செய்தார். அவர் போலீஸில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், தனது கணவர் பசவராஜ் தனது தந்தை மாரீஸ்வராச்சாரியாவுடன் சேர்ந்து தொடர்ந்து கொடுமை செய்து அவமானப்படுத்தியும் வந்ததாக குறிப்பிட்டார்.

அடிக்கடி என்னை முட்டாள் என்று எனது கணவர் திட்டுவதாகவும், வீட்டில் அடைத்து வைப்பதோடு உறவினர்கள் யாரையும் சந்திக்க விடாமல் தடுத்ததாகவும் வித்யா கூறினார்.

ஊசி
ஊசி

உறங்கியபோது பாதரசம் செலுத்திய கணவன்

கடந்த பிப்ரவரி, ஆழ்ந்த உறக்கத்தில் சென்றேன். காலையில் தான் கண்விழித்தேன். எனது கையில் ஏதோ ஊசி போட்டது போல ஒரு வலி இருந்தது என்று வித்யா குறிப்பிட்டுள்ளார்.

வித்யாவுக்கு டாக்டர்கள் 9 மாதம் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தம்பதிக்கு ஒரு குழந்தையும் இருக்கிறது.

காஞ்சிபுரம்: மனைவியைக் கொலை செய்த கணவர்; சிக்கிய கணவர் - தவிக்கும் இரண்டு குழந்தைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை அருகே உள்ள ஆதனஞ்சேரி கிராமம், காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன் (36). இவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி நந்தினி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள்... மேலும் பார்க்க

`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் - சுங்கத்துறை தீவிர விசாரணை

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதரா... மேலும் பார்க்க

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்

த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றும் போது ஏற்பட்ட க... மேலும் பார்க்க

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்... மேலும் பார்க்க

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணி... மேலும் பார்க்க