செய்திகள் :

`2,800 ஆமை குஞ்சுகள்' சிங்கப்பூரிலிருந்து திருச்சிக்கு கடத்தல் - சுங்கத்துறை தீவிர விசாரணை

post image

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் நடைபெற்று வருகின்றன.

இங்கு வரும் பயணிகளில் பெரும்பாலோர் தொழில்கள், வேலைகள், சுற்றுலா மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவாக இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும்.

amai kunchukal

அப்படியே, சர்வதேச நாடுகளிலிருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள் தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் போன்றவற்றை கடத்த முயற்சிப்பதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது.

இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகள் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில், உயிருடன் உள்ள 2,800 ஆமை குஞ்சுகள் கடத்த முயற்சிக்கப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் ஆமை குஞ்சுகளை கைப்பற்றி கொண்டு சென்றனர்.

தொடர்ந்து, ஆமை குஞ்சுகளை கடத்த முயற்சித்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சி விமான நிலையம்

இந்த ஆமை குஞ்சுகள் இங்கு கடத்தப்படுவதற்கு என்ன காரணம் என்பதையும் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்த ஆமைகளை அதிர்ஷ்டத்திற்காக வளர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரிலிருந்து வந்த பயணியிடம் இருந்து அரிய வகை 2,800 ஆமை குஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதுபோல் வெளிநாடுகளில் இருந்து வெளிநாட்டு கரன்சிகள், சிகரெட், போதைப் பொருட்கள், உயிரினங்கள், தங்கம் உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இதனை முற்றிலும் தடுக்கும் வகையில் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மதுபோதை: பழக்கடையில் வியாபாரியை தாக்கி பணம் பறித்த கும்பல் - சிவகாசியில் கொடூரம்

சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட திருத்தங்கல்லிருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலை திருவள்ளுவர் காலனியில் வசிக்கும் ராமர் என்பவர் கக்கன் காலனியில் பழக்கடையுடன் குளிர்பானக் கடையும் நடத்தி வருகிறார். இவர் வழக்... மேலும் பார்க்க

கரூர் துயர சம்பவம்: த.வெ.க முக்கிய நிர்வாகிகள் சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜர்

த.வெ.க சார்பில் கரூர் வேலுச்சாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டம் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி இரவு 7 மணியளவில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய் உரையாற்றும் போது ஏற்பட்ட க... மேலும் பார்க்க

`US விசா கிடைக்காத விரக்தி' - உயிரை மாய்த்துக்கொண்ட மருத்துவர்; ஹைதராபாத்தில் சோகம்

ஆந்திரா மாநிலம் குன்டூரைச் சேர்ந்த 38 வயது மருத்துவர், அமெரிக்கா செல்வதற்கான விசா கிடைக்காததால் ஏற்பட்ட மன அழுத்தத்தின் விளைவாக, ஹைதராபாத்தில் உள்ள தனது அப்பார்ட்மெண்ட் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்... மேலும் பார்க்க

திருமணமான ஒரு ஆண்டுக்குள் உயிரை மாய்த்த மனைவி; அமைச்சரின் உதவியாளர் கைது - அதிர்ச்சி புகார்

மகாராஷ்டிராவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பவர் பங்கஜா முண்டே. இவரிடம் ஆனந்த் கர்ஜே என்பவர் உதவியாளராக இருக்கிறார். இவரது மனைவி கௌரி. இவர் மும்பையில் உள்ள கே.இ.எம். மருத்துவமனையில் டாக்டராக பணி... மேலும் பார்க்க

திருச்சி: ரயில் நிலையத்தில் பயணிடம் ரூ.60 லட்சம் திருட்டு! - ரயில்வே போலீஸார் உள்பட 4 பேர் கைது

சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் வளையம்பட்டி அருள் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஜான் கென்னடி (32). இவர், கடந்த 30 -ம் தேதி சென்னையிலிருந்து தனது உறவினர் கொடுத்த ரூ. 60 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்... மேலும் பார்க்க

தென்காசி: ஸ்டாப்பில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து; வாதம் செய்த பயணியை காலணியால் தாக்கிய நடத்துனர்!

தென்காசி, கடையநல்லூர் அருகே நயினாரகரத்தைச் சேர்ந்தவர் சுப்பையா (50). இவர் கூலி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் நயினாரகரம் செல்வதற்கு தென்காசியில் இருந்து மதுரை செல்லும் அரசு பேருந்தில் ஏறியுள்... மேலும் பார்க்க