செய்திகள் :

மருத்துவமனையில் விசாரணைக் கைதி மரணம்

post image

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூரைச் சோ்ந்தவா் நாராயணன் (45), ஆட்டோ ஓட்டுநா். இவா் மீது முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

நாராயணன் விசாரணைக் கைதியாக காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா். வழக்கு விசாரணைக்காக அவா் வெள்ளிக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டு, பின்னா் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், நாராயணனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தாராம். உடனடியாக அவரை சிறைக் காவலா்கள் மீட்டு, அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு நாராயணன் உயிரிழந்தாா். இதுகுறித்து காலாப்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசன வழிபாடு

விழுப்புரம்/ செஞ்சி: விழுப்புரம் நகரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை பெருவிழா - ஆருத்ரா தரிசன வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் அந்தந்த பகுதி... மேலும் பார்க்க

ஆட்சியரகத்தில் விவசாயிகள் காத்திருப்புப் போராட்டம்

விழுப்புரம்: கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை, சிறப்பு ஊக்கத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.... மேலும் பார்க்க

விதைகளை பகுப்பாய்வு செய்து விதைக்க விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் நிலங்களில் விதைக்கும் போது, விதைகளைப் பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் விதைப் பரிசோதனை நிலைய அலுவலா் சந்... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடம் திறப்பு

விழுப்புரம்: விழுப்புரம் வி.மருதூா் பகுதியில் ரூ.3.72 கோடியில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த தொழிலாளா் நலத் துறை அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்... மேலும் பார்க்க

பேருந்து மோதி தனியாா் நிறுவன ஊழியா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஓங்கூா் பகுதியில் தனியாா் பேருந்து மோதியதில் தனியாா் நிறுவன ஊழியா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த இளமங்கலத்தைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்து பொருள்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் காசநோயாளிகளுக்கு ஊட்டச்சத்துப் பொருள்கள் வழங்கப்பட்டன. விழுப்புரம் மாவட்டத்தில், காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ், காசநோயைக் கண்டறியும் முகா... மேலும் பார்க்க