செய்திகள் :

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை

post image

மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டையும் இருந்தது.

அவரிடம் விசாரித்தபோது, வேறு பல பெயர்களில் பல்வேறு போலி பாஸ்போர்ட்கள், ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகளும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்

அதோடு, அணு ஆயுதங்கள் தொடர்பான 10 வரைபடங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது சகோதரர் அடில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவரும் 1995-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் லட்சங்களில் பணம் பெற்று வந்துள்ளனர்.

ஆனால் 2000-ம் ஆண்டுக்கு பிறகு கோடிகளில் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து கொடுத்ததற்காக இந்த பணத்தை பெற்றுள்ளனர்.

அக்தர் உசைனி பெயரில் இருந்த வங்கி கணக்குகளில் நடந்துள்ள பரிவர்த்தனைகள் சந்தேகத்தை கிளப்பும் வகையில் உள்ளன என்றும், சில வங்கி கணக்குகளை மூடியிருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அந்த வங்கி கணக்குகளில் நடந்த பரிவர்த்தனை விவரங்களை போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் கேட்டுள்ளனர்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அவர்கள் பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர். எனவே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடனும் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், 2004-ம் ஆண்டு துபாயிலிருந்து அக்தர் உசைனி நாடு கடத்தப்பட்டதாகவும், அதன் பிறகும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அக்தர் உசைனி சென்று வந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானுக்கு மட்டும் 20 முறையும், சவுதி அரேபியாவிற்கு 15 முறையும், மாஸ்கோ, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அவர் சென்று வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

அமெரிக்கா, ஈராக் நாடுகளிலிருந்தும் இருவருக்கும் பணம் வந்துள்ளதாகவும், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர்களிடமிருந்து அதிக அளவில் பணம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்தர் 40 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிஜிட்டல் கைது: "மகனின் திருமணம் நல்லபடியாக நடக்கணும்னுதான்" - பெங்களூரு பெண்ணிடம் ரூ.32 கோடி மோசடி

நாடு முழுவதும் பெண்கள் மற்றும் முதியவர்களை ஆன்லைனில் டிஜிட்டல் முறையில் கைது செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. கைது செய்ய வீட்டிற்கு போலீஸாரை அனுப்புவோம் என்று பெண்களை மிர... மேலும் பார்க்க

சேலம்: திருமணம் தாண்டிய உறவு விவகாரத்தில் கொலை - 25 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் கைது

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள உம்பிளிக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் நல்லதம்பி(60). கடந்த 2000-ம் ஆண்டு நல்லதம்பிக்கு 35 வயது இருந்தபோது, உம்பிளிக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். அப்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: பட்டியல் சமூக மாணவரை தாக்கிய மாற்று சமூக மாணவர்கள் - அரசு விடுதியில் அரங்கேறிய அவலம்

ராமநாதபுரம் அம்மா பூங்கா பகுதியில் மாணவர்களுக்கான அரசு சமூக விடுதி இயங்கி வருகிறது. இந்த விடுதியில் பல்வேறு சமுதாயத்தினை சேர்ந்த சுமார் 50 மாணவர்கள் தங்கியிருந்து அருகில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகி... மேலும் பார்க்க

``டெல்லியில் நடந்த தற்கொலைப்படைத் தாக்குதல்'' - NIA விசாரணை என்ன சொல்கிறது?

டெல்லியில் கடந்த வாரம் செங்கோட்டை அருகில் நடந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயம் அடைந்தனர். இக்குண்டு வெடிப்பில், வெடிகுண்டு இருந்த காரை ஓட்டி வந்த டாக்டர் உமர் உல் நப... மேலும் பார்க்க

ராஜஸ்தான்: ``திருமணம் நடைபெற 16 நாள் குழந்தையை பலியிட்ட 4 பெண்கள்'' - பெற்றோர்கள் அதிர்ச்சி

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் பூனம்ராம். இவரது மனைவி சுமன். சுமனுக்கு அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்திருந்தது.ஆனால், பூனத்தின் சகோதரிகள் ரமேஷ்வரி, மம்தா, கீதா, மஞ்சு... மேலும் பார்க்க

காங்கேயம்: சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு பாலியல் தொல்லை; போலி வார்டன் போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்குப் பின்புறம் தமிழக அரசின்... மேலும் பார்க்க