செய்திகள் :

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை

post image

மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டையும் இருந்தது.

அவரிடம் விசாரித்தபோது, வேறு பல பெயர்களில் பல்வேறு போலி பாஸ்போர்ட்கள், ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகளும் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாபா அணு ஆராய்ச்சி மையம்
பாபா அணு ஆராய்ச்சி மையம்

அதோடு, அணு ஆயுதங்கள் தொடர்பான 10 வரைபடங்களும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரது சகோதரர் அடில் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சகோதரர்கள் இருவரும் 1995-ம் ஆண்டிலிருந்து வெளிநாட்டிலிருந்து நிதி பெற்றுள்ளனர். ஆரம்பத்தில் லட்சங்களில் பணம் பெற்று வந்துள்ளனர்.

ஆனால் 2000-ம் ஆண்டுக்கு பிறகு கோடிகளில் பணம் பெற்று இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாபா அணு ஆராய்ச்சி மையம் மற்றும் அணு ஆயுதங்கள் தொடர்பான தகவல்களை சேகரித்து கொடுத்ததற்காக இந்த பணத்தை பெற்றுள்ளனர்.

அக்தர் உசைனி பெயரில் இருந்த வங்கி கணக்குகளில் நடந்துள்ள பரிவர்த்தனைகள் சந்தேகத்தை கிளப்பும் வகையில் உள்ளன என்றும், சில வங்கி கணக்குகளை மூடியிருப்பதும் தெரிய வந்துள்ளதாகவும், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.

அந்த வங்கி கணக்குகளில் நடந்த பரிவர்த்தனை விவரங்களை போலீஸார் சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் கேட்டுள்ளனர்.

போலீஸார் விசாரணை
போலீஸார் விசாரணை

அவர்கள் பாகிஸ்தானுக்கும் சென்று வந்துள்ளனர். எனவே பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடனும் இருவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும், 2004-ம் ஆண்டு துபாயிலிருந்து அக்தர் உசைனி நாடு கடத்தப்பட்டதாகவும், அதன் பிறகும் போலி பாஸ்போர்ட் மூலம் வெளிநாடுகளுக்கு அக்தர் உசைனி சென்று வந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானுக்கு மட்டும் 20 முறையும், சவுதி அரேபியாவிற்கு 15 முறையும், மாஸ்கோ, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கும் அவர் சென்று வந்திருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

அமெரிக்கா, ஈராக் நாடுகளிலிருந்தும் இருவருக்கும் பணம் வந்துள்ளதாகவும், 2004-ம் ஆண்டுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருந்து மர்ம நபர்களிடமிருந்து அதிக அளவில் பணம் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்தர் 40 முறை வெளிநாடுகளுக்கு சென்று வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் கொடுமை; திருடி விட்டு வரும் வழியில் 3 பேர் வெறிச்செயல்

கோவை ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவி, கோவை ... மேலும் பார்க்க

நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்

மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது. இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூல... மேலும் பார்க்க

Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?

இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் எ... மேலும் பார்க்க