செய்திகள் :

லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

post image

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.

இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது ரத்தக் களறியுடன் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே வந்தார். அவரை காவல்துறை கைது செய்து, ஆயுதத்தையும் மீட்டது.

லண்டன் - கத்தி குத்து
லண்டன் - கத்தி குத்து

அதைத் தொடர்ந்து சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தது. இதற்கிடையில், பல பயணிகள் பீதியுடனும், ரத்தத்துடனும் ரயிலிருந்து வெளியேறினர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் லண்டனில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து லண்டன் காவல்துறை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ``லண்டன் செல்லும் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரில், ஒருவர் குற்றச்சாட்டு இல்லாமல் விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் 32 வயது பிரிட்டிஷ் நபர்.

மேலும், இந்த கத்திக்குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாகக் கருதவில்லை. இந்த தாக்குதலில் வேறு தொடர்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்.

ரயிலிருந்து அழைப்பு வந்த 8-வது நிமிடத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறோம். சிறப்பு துப்பறியும் குழு எங்கள் காவலில் உள்ள சந்தேக நபரின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

லண்டன் போலிஸ்
லண்டன் போலிஸ்

காயமடைந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கின்றனர். ரயில்வே ஊழியர்களில் ஒருவர் கடுமையாகப் போராடி பயணிகளின் உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

அந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளது.

கோவை டிரைவர் மாயமான வழக்கில் டிவிஸ்ட் - கொலை செய்து மறைத்த திமுக கவுன்சிலர் உள்பட 3 பேர் கைது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுமையா. இவருக்கு அலாவுதீன் என்ற கணவர் இருந்தார். டிரைவராக பணியாற்றி வந்த இவர், கடந்த 2024-ம் ஆண்டு மாயமாகியுள்ளார். இதுதொடர்பாக சுமையா காவல்நிலையத்த... மேலும் பார்க்க

மும்பையில் கைதான போலி விஞ்ஞானி; பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்பா? - தீவிர விசாரணை

மும்பையில் கடந்த வாரம் அக்தர் உசைனி (60) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் தன்னை மும்பை பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றுவதாக தெரிவித்துக் கொண்டார். அவரிடம் இதற்கான போலி அடையாள அட்டைய... மேலும் பார்க்க

கோவை: கல்லூரி மாணவியை கடத்தி கூட்டு பாலியல் கொடுமை; திருடி விட்டு வரும் வழியில் 3 பேர் வெறிச்செயல்

கோவை ஒண்டிப்புதூர் அருகே வினித் என்கிற இளைஞர் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், தனியார் கல்லூரியைச் சேர்ந்த 20 வயது மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணியளவில் அந்த மாணவி, கோவை ... மேலும் பார்க்க

நூடுல்ஸ், பிஸ்கெட் பாக்கெட்களில் ரூ.42 கோடி மதிப்புள்ள கஞ்சா; தாய்லாந்திலிருந்து மும்பைக்கு கடத்தல்

மும்பைக்கு விமானத்தில் போதைப்பொருள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் மும்பை விமான நிலையத்தில் ரூ.47 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் ச... மேலும் பார்க்க

Scam: டிஜிட்டல் கைது, சைபர் அடிமை, பார்ட்-டைம் ஜாப், கடன் செயலி; எத்தனை மோசடி, எப்படி தப்பிக்கலாம்?

இணையதள சேவைகள் மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை காரணமாக பல வழிகளில் இணைய மோசடிகள் நடைபெற்றுவருகின்றன.இதைத் தடுக்கும் வகையில் அரசு மற்றும் காவல்துறை பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து ... மேலும் பார்க்க

மதுப்பழக்கம்: வேலைக்குச் செல்லாமல் மனைவியிடம் தகராறு; கண்டித்த மாமியாரை வெட்டிக் கொலை செய்த இளைஞர்

நெல்லை அருகேயுள்ள சுத்தமல்லியைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களுக்கு துர்காதேவி என்ற மகளும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் துர்காதேவி கீழச்செவலைச் சேர்ந்த ஆறுமுகநயினார் எ... மேலும் பார்க்க