செய்திகள் :

லண்டன்: ``ரயிலில் பயணிகளுக்கு கத்திகுத்து; 8-வது நிமிடத்தில் கைது'' - சம்பவத்தை விளக்கும் காவல்துறை

post image

இங்கிலாந்தின் டான்காஸ்டரில் இருந்து லண்டனின் கிங்ஸ் கிராஸ் நிலையத்திற்கு சனிக்கிழமை மாலை 6:25 மணிக்கு ரயில் ஒன்று புறப்பட்டது.

இரவு 7:42 மணிக்கு ரயிலில் இருந்தவர்கள் காவல்துறைக்கு அவசர அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டனர். பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஹண்டிங்டன் ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்.

அப்போது ரத்தக் களறியுடன் 32 வயது மதிக்கத்தக்க ஒருவர் கையில் கத்தியுடன் வெளியே வந்தார். அவரை காவல்துறை கைது செய்து, ஆயுதத்தையும் மீட்டது.

லண்டன் - கத்தி குத்து
லண்டன் - கத்தி குத்து

அதைத் தொடர்ந்து சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்தது. இதற்கிடையில், பல பயணிகள் பீதியுடனும், ரத்தத்துடனும் ரயிலிருந்து வெளியேறினர்.

அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் லண்டனில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் குறித்து லண்டன் காவல்துறை நேற்று மாலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

அதில், ``லண்டன் செல்லும் ரயிலில் கத்திக்குத்து தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரில், ஒருவர் குற்றச்சாட்டு இல்லாமல் விடுவிக்கப்பட்டார். மற்றொருவர் 32 வயது பிரிட்டிஷ் நபர்.

மேலும், இந்த கத்திக்குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாகக் கருதவில்லை. இந்த தாக்குதலில் வேறு தொடர்புகள் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்த தாக்குதலுக்கான காரணத்தை விசாரித்து வருகிறோம்.

ரயிலிருந்து அழைப்பு வந்த 8-வது நிமிடத்தில் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்திருக்கிறோம். சிறப்பு துப்பறியும் குழு எங்கள் காவலில் உள்ள சந்தேக நபரின் பின்னணி மற்றும் தாக்குதலுக்கு வழிவகுத்த நிகழ்வுகள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

லண்டன் போலிஸ்
லண்டன் போலிஸ்

காயமடைந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார். 5 பேர் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கின்றனர். ரயில்வே ஊழியர்களில் ஒருவர் கடுமையாகப் போராடி பயணிகளின் உயிரைக் காப்பாற்ற முயன்றிருக்கிறார்.

அந்தக் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்." எனக் குறிப்பிட்டுள்ளது.

டெல்லி கார் வெடிப்பு: `Hyundai i20 கார், CCTV கேமராக்கள் ஆய்வு' - அமித் ஷா பேட்டி

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று (நவ 10) மாலை 6.50 ம... மேலும் பார்க்க

Delhi Car Blast: போலீஸ் கமிஷனருடன் அமித் ஷா பேச்சு; கார் வெடிப்பு குறித்து கெஜ்ரிவால் கவலை!

திங்கட்கிழமை (நவ. 10) மாலையில் டெல்லி செங்கோட்டை மெட்ரோ அருகே ஏற்பட்ட கார் வெடிப்பில் குறைந்தபட்சம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். அருகாமையில் இருந்த வாகனங்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.மெட்ரோ கேட் 1 அருகே கார... மேலும் பார்க்க

டெல்லி: செங்கோட்டை அருகே கார் வெடிப்பு; 8 பேர் பலி; நெஞ்சை உலுக்கும் வீடியோ - விசாரணை தீவிரம்!

டெல்லி செங்கோட்டைக்கு அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் எண் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தால் அருகே இருந... மேலும் பார்க்க

தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு; பெண் டாக்டர் காரில் ஏ.கே.47 ரக துப்பாக்கி பறிமுதல் - பகீர் பின்னணி!

ஜம்மு காஷ்மீர் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் இரண்டு டாக்டர்கள் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸார் டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசத்தில் ரெய்டு நடத்தினர். இதில் படித்து உயர் பதவியில் ... மேலும் பார்க்க

கரூர் சம்பவம்: அனைத்து வீடியோ ஆதாரங்களை சமர்ப்பித்த தவெக; 2 -ம் நாளாக சிபிஐ விசாரணை

ஆஜரான 12 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள்கடந்த செப்டம்பர் 27-ம் தேதி த.வெ.க கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பா... மேலும் பார்க்க

டெல்லி: `பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்கள் சப்ளை; தாக்குதல் நடத்த சதி' - தீவிரவாதிகள் கைது

டெல்லி அருகே ஜம்மு காஷ்மீர் போலீஸார் ரெய்டு நடத்தி 350 கிலோ வெடிமருந்துகளையும், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்யும் 20 ரிமோட்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று ஹரியானாவில் உள்ள பரிதாபாத்தில் இதே போலீஸா... மேலும் பார்க்க