செய்திகள் :

`வாசிப்புப் பழக்கம் தொடர்வது மகிழ்ச்சி' - பவா செல்லதுரை பரிந்துரைக்கும் 3 நூல்கள்!

post image

கோலாகலமாக நடைபெற்று வரும் 49-வது சென்னை புத்தக கண்காட்சியில், வார இறுதியில் குவிந்த வாசக கூட்டத்திற்கு மத்தியில், தனசீலி திவ்யநாதன் எழுதிய ஏவாளும் சாராளும் நூல் வெளியீட்டு நிகழ்வு, Her Stories அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பவா செல்லதுரை கலந்துகொண்டார்.

வாசகர்களுடனும் எழுத்தாளர்களுடனும் இயல்பாக உரையாடும் அவரது பாணி, அரங்கில் கூடியிருந்த இளம் வாசகர்களின் கவனத்தை ஈர்த்தது. புத்தக வெளியீட்டின் பின்னர், இலக்கியம், வாசிப்பு பழக்கம் மற்றும் இன்றைய சமூக சூழலில் புத்தகங்களின் அவசியம் குறித்து அவர் வாசகர்களுடன் உரையாடினார். குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே வாசிப்பு பழக்கம் தொடர்ந்து இருப்பது குறித்த அவரது கருத்துகள், நிகழ்வில் கலந்து கொண்ட பலரையும் ஈர்த்தது.

அவரிடம் பேசியபோது, “எப்போதும் போல இந்த வருடமும் புத்தக கண்காட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான் இன்று தான் இங்கு வருகிறேன். இளம் வாசகர்களின் கூட்டத்தை பார்க்கும் போது, புத்தகம் படிக்கும் பழக்கம் இன்றைய தலைமுறைக்கும் தொடர்வது மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்தாளர்களும் வாசகர்களும் நேரடியாக ஒன்றிணையும் இடமாகவே நான் புத்தக கண்காட்சியை பார்க்கிறேன்,” என்றார்.

இந்த வருடத்திற்கான தனது புத்தக பரிந்துரைகள் குறித்து பேசுகையில்,

``சமீப காலத்தில் பெண்களை மையப்படுத்தி வெளிவந்த முக்கியமான படைப்பாக சால்ட் பதிப்பகம் வெளியிட்ட எழுத்தாளர் நரனின் `குமாரத்தி' நாவலை அவர் குறிப்பிட்டார்.

சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் யதார்த்தங்களை நேர்மையாக பேசும் இந்த நாவல், அனைவரும் கட்டாயமாக வாசிக்க வேண்டிய படைப்பு என அவர் தெரிவித்தார்.

மேலும், மற்றொரு சமீபத்திய படைப்பாக சால்ட் பதிப்பகம் வெளியிட்ட பிரியா தம்பி எழுதிய `தேவி விலாசம்' நாவலை அவர் எடுத்துரைத்தார். ஆண்கள் அதிகமாக தற்கொலை செய்து கொண்டோ, காணாமல் போய்க் கொண்டோ இருக்கும் ஒரு வீட்டின் கதையை, பெண்களின் உலகம் வழியாக சொல்லும் இந்த நாவல், வாசகர்களை சிந்திக்க வைக்கும் படைப்பாக இருப்பதாக அவர் கூறினார்.

தனது மூன்றாவது பரிந்துரையாக `வாரண மௌனம்' நூலை அவர் குறிப்பிட்டார். லாரன்ஸ் ஆண்டனி மற்றும் கிரகாம் ஸ்பென்ஸ் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய The Elephant Whispers நூலின் தமிழ் மொழிப்பெயர்ப்பாக இது வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் மானசி தமிழாக்கம் செய்துள்ள இந்த நூல், இயற்கை, மனிதன் மற்றும் விலங்குகளுக்கிடையேயான உறவை பேசும் முக்கியமான படைப்பாக இருப்பதாகவும், எதிர் வெளியீடாக வெளிவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

இளைஞர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒரு விதம் - இளம் தலைமுறையினரிடையே எப்படி இருக்கிறது புத்தக ரசனை?!

சென்னையில் 49-வது புத்தகக் காட்சியை, Ymca மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று வார இறுதி நாள் என்பதால், இளைஞர்களின் கூட்டமும் அலைமோதியது. சரி, இந்த புத்தகத் திருவிழாவில் இளைஞர்களின் சாய்ஸ் என்னவாக இ... மேலும் பார்க்க

`நம் கண்ணுக்கு தெரியாமல் அரூபமாக வாழும் மனிதர்களின் கதை' - எழுத்தாளர் ஜெயராணியின் பரிந்துரைகள்!

சென்னையில் நடைபெற்று வரும் 49-வது புத்தகத் திருவிழாவில், வார இறுதிநாள் என்பதால் வாசகர்கள் கூட்டம் களைகட்டியது.அங்கு வாசகர்களால் சூழப்பட்டிருந்த, விளிம்புநிலை மக்களின் வாழ்வியலை தனது எழுத்துகளில் தொடர்... மேலும் பார்க்க

சென்னை புத்தக கண்காட்சியில் ஒரே இடத்தில் ஆதார், தபால், மை ஸ்டாம்ப் சேவைகள்! - சூப்பர் வரவேற்பு!

இன்று வங்கி கணக்கு தொடங்குவதிலிருந்து பலதரப்பட்ட பொது மக்கள் சேவைகள் வரை, ஆதார் அடையாள எண் இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது.இந்நிலையில், ஆதார் விண்ணப்பிக்கவும், அதிலுள்ள தகவல்களை மாற்றம் செய்யவும் பலருக்... மேலும் பார்க்க

`எழுத்துலகம் பெரிய கடல்; அதில் கால்களையாவது நனைத்திடுங்கள்!' - கவிஞர் மனுஷ்யபுத்திரன்

உயிர்மை பதிப்பகத்தின் நிறுவனரும், கவிஞருமான மனுஷ்யபுத்திரனை, சென்னை புத்தகக் காட்சியில் சந்தித்து உரையாற்றினோம்.நம்மிடம் பேசிய அவர், ``இன்றைய இளைஞர்கள் ஜென்சி கிட்ஸ் என்ற கருத்தாக்கத்தையே நான் ஏற்க மற... மேலும் பார்க்க

`பதிவிடுவது பயனல்ல, அதை அச்சில் எழுத்தாக்க வேண்டும்!'- சென்னை புத்தகக் காட்சியில் ஆழி செந்தில்நாதன்

சென்னை YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் 49-வது புத்தகக் காட்சியில், மொழியுரிமை செயல்பாட்டாளரும், ஆழி பதிப்பகத்தின் நிறுவனருமான செந்தில்நாதன் பேசினார்.ஏன் ஆழி ?``ஆழி என்பது ஆழமானது. அது போன்று நல்ல ஆழ்... மேலும் பார்க்க

சென்னைப் புத்தகக் கண்காட்சி : ரமலோவ், மணிபல்லவம், ஆர்ட்டிகிள் - 29... மிஸ் பண்ணக்கூடாத 5 நூல்கள்!

ரமலோவ்ரமலோவ் - சரவணன் சந்திரன்நாவல்தனித்துவமான கதைக் களங்களோடு நாவல் உலகில் வலம் வருபவர் சரவணன் சந்திரன். இவரின் புதிய நாவல் ரமலோவ். இந்த நாவல் குறித்துப் பேசும் பதிப்பாளர் மனுஷ்யபுத்திரன், "கடல், அதன... மேலும் பார்க்க