செய்திகள் :

விருதுநகர்: ``வாரச்சந்தைக்கு நிரந்தர இடம் வேண்டும்'' - நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள்

post image

விருதுநகர், ஆவியூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த காய்கறி வியாபாரிகள் விருதுநகர் நகராட்சிக்கு உட்பட்ட ஏ.ஏ.சாலையில் திங்கள்தோறும் வாரச்சந்தை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

அப்போது, அங்கு வியாபாரம் செய்ய நகராட்சி நிர்வாகம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதை எதிர்த்து சாலையில் காய்கறிகளை கொட்டி வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், நகராட்சி ஆணையாளருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த இரு மாதங்களாக அங்கு வியாபாரம் செய்து வந்தனர். இங்கு, குறைந்த விலையில் காய்கறி கிடைத்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.

விருதுநகர் நகராட்சி

இந்நிலையில், நேற்று, நகராட்சி மைதானத்தில் கடைகள் வைத்து வியாபாரம் செய்யக் கூடாது என திடீரென போர்டு வைக்கப்பட்டது. எனவே, நிரந்தர இடம் கேட்டு நகராட்சி அலுவலகத்தை காய்கறி வியாபாரிகள் முற்றுகையிட்டனர்.

பின்னர் நகராட்சி மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த டி.எஸ்.பி, யோகேஸ்வரன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையில் சி.ஐ.டி.யு மாவட்டச் செயலாளர் தேவா, சி.பி.எம் நகர் செயலாளர் ஜெயபாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் போது, இந்த வாரம் மட்டும் நகராட்சி மைதானத்தில் வியாபாரம் செய்யலாம் என்றும் அதன் பிறகு நகராட்சி நிர்வாகம் ஒதுக்கீடு செய்யும் இடத்தில் வியாபாரம் செய்யலாம் என கூறப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் காய்கறி வியாபாரிகள் மனு அளித்தனர்.

"ஆணவம் வேண்டாம் உதயநிதி; நீங்களே வாரிசை வைத்து வந்தவர்" - தமிழிசை செளந்தரராஜன் காட்டம்!

திமுக தொடங்கப்பட்டு 75 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அக்கட்சியின் இளைஞர் அணி சார்பில் 'தி.மு.க 75 அறிவுத்திருவிழா' என்னும் நிகழ்ச்சி நவம்பர் 8-ஆம் தேதி தொடங்கி, நவம்பர் 16- ஆம் தேதி வரை நடைபெற்றது.இந்ந... மேலும் பார்க்க

டெல்லி குண்டு வெடிப்பு: ``எந்த ஆதாரமும் இல்லை'' - 3 மருத்துவர்களை விடுவித்த NIA

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை (10-ம் தேதி) நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் தொடர்பு... மேலும் பார்க்க

மதுரை: ``குப்பை மேடாக காட்சியளிக்கும் கிருதுமால் நதி; நோய் பரவும் அபாயம்'' - மக்கள் அச்சம்

மதுரை சப்பாணி கோயில் தெரு, மீனாட்சி தியேட்டர் அருகில் உள்ள கிருதுமால் ஆற்றின் அருகில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஆற்றின் குப்பைகளை இருபுறமும் குவித்து வைத்து சென்... மேலும் பார்க்க

கோவை: 45 ஏக்கரில் செம்மொழி பூங்கா - எப்படி இருக்கு? | Photo Album

கோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்காகோவை செம்மொழி பூங்கா... மேலும் பார்க்க

பள்ளப்பட்டி: புதர் மண்டி, சிதிலமடைந்து காட்சியளிக்கும் ஏரிப் பூங்கா - புனரமைப்பு செய்யப்படுமா?!

சேலம் மாவட்டம், மூன்று‌ ரோடு அருகில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு பள்ளப்பட்டி ஏரிப் பூங்கா தற்போது பழுதடைந்து புனரமைப்பு பணிகளை எதிர்நோக்கி காத்திருக்கிறது.பள்ளப்பட்டி ஏரியை... மேலும் பார்க்க

``தொகுதிக்கு 500 வாக்குகள் காலியானால் என்ன நடக்கும்?'' - SIR குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி

2021 சட்டமன்ற தேர்தலில், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குகள் பெற்று அமைச்சரானார் ஐ. பெரியசாமி. திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான தமிழக ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கிறார்கடந்த ஆகஸ்ட் ... மேலும் பார்க்க