செய்திகள் :

``விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை'' - கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

post image

தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்த கபடி போட்டிகளில் காயமடைந்த 8 வீரர்கள் மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களுக்கு நம்பிக்கை அளித்து உடல் நலனை விசாரிப்பதற்காக இந்திய மகளிர் கபடி அணி வீரர் கார்த்திகாவும், ஆடவர் அணி வீரர் அபினேஷும் வருகை தந்துள்ளனர்.

கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா
கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா

வேலம்மாள் மருத்துவமனை நிர்வாகத்தினரும், தமிழ்நாடு அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா உள்ளிட்ட நிர்வாகிகளும் கபடி வீரர்களையும் உற்சாகமாக வரவேற்றனர்.

கபடி வீராங்கனை கார்த்திகா பேசும்போது, "கபடி விளையாட்டு மிகவும் கடுமையானது. விளையாட்டில் அடிபட்டால் அவர்கள் சிகிச்சை பெற்று மீண்டுவருவது கடினமானது. அடிபட்டவர்கள் அனைவரும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; குடும்பத்தினரால் சிகிச்சைக்கு செலவு செய்ய முடியாது," என்று கூறினார்.

இதனை அறிந்ததன் மூலம் அமெச்சூர் கபடி சங்கத் தலைவர் சோலைராஜா, வேலம்மாள் மருத்துவமனையுடன் ஒரு காப்பீட்டு ஒப்பந்தம் ஏற்படுத்தி வைத்துள்ளார். அதன் மூலம் கடந்த 3 மாதங்களில் 66 வீரர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் சரியாகிவிட்டனர்.

வேலம்மாள் மருத்துவமனை விளையாட்டு வீரர்களுக்கு அதிக அளவில் மருத்துவ சேவைகள் வழங்கியிருந்தாலும், அதில் கபடி வீரர்கள் அதிகமாக உள்ளனர்.

கார்த்திகா
கார்த்திகா

விளையாட்டில் ஆண்-பெண் பாகுபாடு இல்லை; அப்படி யாரும் பார்த்ததும் இல்லை, அனைவரையும் சமமாகவே பார்க்கிறார்கள். கபடி வீரர்களுக்கு இலக்கு மற்றும் ஒழுக்கம் முக்கியம்.

தேசிய அளவில் விளையாடப்படும் கபடியை ஒலிம்பிக்கில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன. “தமிழகத்திற்காக 11 முறை விளையாடி 8 முறை பதக்கம் வென்றுள்ளேன். கிரிக்கெட்டிலும் பெண்கள் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருவது மகிழ்ச்சி அளிக்கிறது,” என்றார்.

IPL Retentions : சென்னை அணியில் சாம்சன்; வெளியேறியது யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ஐ.பி.எல் மினி ஏலம் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் நிலையில், அணிகள் தங்களின் டிரேடிங் அப்டேட்ஸை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கின்றனர். அதன்படி, சஞ்சு சாம்சன் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.... மேலும் பார்க்க

IPL Retentions : மீண்டுமொரு சீசனில் தோனி; CSK கூண்டோடு வெளியேற்றப்போகும் வீரர்கள்? - IPL அப்டேட்ஸ்!

ஐ.பி.எல் மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கிறது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணியுன் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை ஐ.பி.எல் நிர்வாகத்திடம் சமர்பிக்க வேண்டும். இதற்கான கெ... மேலும் பார்க்க

'திராவிட மாடல் ஆட்சி, விளையாட்டின் பொற்காலம்!' - உதயநிதி பெருமிதம்!

சர்வதேச ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பைப் போட்டி சென்னையிலும் மதுரையிலும் வருகிற நவம்பர் 28 ஆம் தேதி முதல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில், சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலி... மேலும் பார்க்க

IPL: சென்னை அணியில் சஞ்சு சாம்சன்? விடைபெறும் ஜடேஜா?! - இந்த ட்ரேடிங் மூலம் யாருக்கு லாபம்?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடி வரும் சஞ்சு சாம்சனை டிரேடிங் முறையில் சென்னை அணி வாங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. சாம்சனுக்கு பதில் ஜடேஜாவையும் சாம் கரணையும் சென்னை அணி ராஜஸ்தானுக்கு விட்ட... மேலும் பார்க்க

உலகக் கோப்பை: ரூ.2.5 கோடி ரொக்கம், அரசு பணி, வீட்டு மனை: வறுமையைத் துரத்திய வீரமகளுக்கு அங்கீகாரம்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஐசிசி உலகக் கோப்பையை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்திருக்கும் இந்தச் சூழலில், அணியில் இடம்பெற்ற வீராங்கனைகளுக்கு மாநில அரசுகள் அளித்த கௌரவம் உணர்வுப்பூர்வமானது. ஆந்திரப் ... மேலும் பார்க்க

`எனது தாத்தா சொன்னார்' - இந்திய அணிக்கு விளையாட குடியுரிமையை சரண்டர் செய்த ஆஸி., கால்பந்து வீரர்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கால்பந்து வீரர் ரியான் வில்லியம்ஸ் அடிப்படையில் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர். அவரின் பெற்றோர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள் ஆவார். வில்லியம்ஸ் குடும்பத்தினர் அவரது ... மேலும் பார்க்க