செய்திகள் :

வேலூர்: சிறுமியிடம் பாலியல் சீண்டல்; பேச மறுத்ததால் மிரட்டல் - தீயணைப்பு வீரர் கைது

post image

வேலூர் மாவட்டம், லத்தேரி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார், வயது 31. இவர், வேலூர் தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குத் திருமணமாகி மனைவி மற்றும் இரு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்த நிலையில், சசிகுமாருக்கும், 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. சிறுமியிடம் பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுவந்திருக்கிறார் சசிகுமார். இதுபற்றி, சிறுமியின் பெற்றோருக்குத் தெரியவந்ததும், மகளை அவர்கள் கண்டித்திருக்கின்றனர். இதையடுத்து, சசிகுமாரிடம் பேசுவதை நிறுத்திக்கொண்டார் அந்த சிறுமி.

சிறுமியிடம் பாலியல் சீண்டல்

இதனால், ஆத்திரமடைந்த சசிகுமார், சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லைக் கொடுத்து வந்ததோடு, சிறுமியின் அந்தரங்க போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து அசிங்கப்படுத்திவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

இது குறித்து, சிறுமியின் தாய் காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின்பேரில், `போக்சோ’ சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார், தீயணைப்பு வீரர் சசிகுமாரைக் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்திருக்கின்றனர்.

`உன் சகோதரியை கொலை செய்கிறேன்' - மனைவியை அடித்து கொன்று மைத்துனருக்கு போனில் தகவல் கொடுத்த கணவர்

டெல்லி போலீஸில் சிறப்பு ஆயுத பிரிவில் பணியாற்றி வந்தவர் காஜல் செளதரி(27). இவருக்கு கடந்த 2023ம் ஆண்டு அன்குர் என்பவருடன் திருமணம் நடந்தது. இத்தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். அதோடு காஜல் இப்போது 3 மாத... மேலும் பார்க்க

சென்னை: விடுதியில் பெண்கள் உடைமாற்றுவதை வீடியோ எடுத்த நபர்; சிசிடிவி காட்சியை வைத்து பிடித்த போலீஸ்!

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சிலர், கடந்த 28-ம் தேதி சென்னையில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து... மேலும் பார்க்க

சென்னை: Trible Murder Case; மூன்று பேர் கைது - கொலைக்கான காரணம் தெரியாமல் திணறும் போலீஸ்

சென்னை அடையாறு இந்திரா நகர், 1வது அவென்யூவில் உள்ள பைக் ஷோரூம் அருகில் கிடந்த சாக்கு மூட்டையிலிருந்து ரத்தம் வழிவதாக அடையாறு போலீஸாருக்கு கடந்த 26-ம் தேதி தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்துக்குச் ... மேலும் பார்க்க

சபரிமலைக் கோயில் தங்கம் திருட்டு: `செல்வம் பெருகும் என்றார்கள்' - விசாரணையில் நடிகர் ஜெயராம்

இந்தியாவிலிருந்து ரூ.10,000 கோடி கடனுடன் தப்பி ஓடிய தொழிலதிபர் விஜய் மல்லையா, 1998-99 காலக்கட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குத் 32 கிலோ தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்களைத் தானமாக வழங்கினார். அந்தத்... மேலும் பார்க்க

`400 மீட்டர் பயணத்துக்கு ரூ.18,000' - அமெரிக்க பெண் சுற்றுலா பயணியை ஏமாற்றிய மும்பை டாக்சி டிரைவர்

மும்பைக்கு தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து கொண்டிருக்கின்றனர். பொதுவாக மும்பையில் உள்ள ஆட்டோ மற்றும் டாக்சிகள் மீட்டரில் உள்ளபடிதான் கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவில் இர... மேலும் பார்க்க

"பேசி சரிபண்ணிட்டேன்" - மின்சாரம் பாய்ந்து இறந்த ஐடிஐ மாணவர்; அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் பதில்

திருச்சி மாவட்டம், முசிறி தொகுதியை அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ செல்வராஜ் என்பவருக்குச் சொந்தமான புதிய உணவகம் மற்றும் விடுதி கட்டடத்தின் திறப்பு விழா இன்று நடைபெற உள்ளது.இந்த விழாவில் முன்னாள் அமைச்சர... மேலும் பார்க்க