செய்திகள் :

ஹரியானா: கூடைப்பந்து கம்பம் விழுந்து 16 வயது தேசிய அளவிலான வீரர் மரணம்; அதிர்ச்சி தரும் வீடியோ

post image

ஹரியானா மாநிலம் ரோத்தக்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த 16 வயது தேசிய அளவிலான வீரர், எதிர்பாராத விதமாக கூடைப்பந்துக் கம்பம் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்கன் மாஜ்ரா பகுதியில் உள்ள மைதானத்தில் ஹர்திக் என்ற அந்தச் சிறுவன் பயிற்சி செய்துள்ளார். அப்போது தரையில் சரியாக நடப்படாமல் இருந்த அந்தக் கூடைப்பந்துக் கம்பம் முன்னோக்கிச் சாய்ந்து அவரது மார்பில் விழுந்துள்ளது. அவரது நண்பர்கள் உடனடியாக ஓடிச் சென்று உதவியபோதும், துரதிர்ஷ்டவசமாக சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை.

Video
Video

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகியிருக்கின்றன. சி.சி.டி.வி காட்சிகளைப் பார்க்கும்போது, ஹார்திக் மைதானத்தில் தனியாகப் பயிற்சி செய்து கொண்டிருப்பது தெரிகிறது. கூடைப்பந்துக் கம்பத்தின் மையத்தில் உள்ள three-point line -னிலிருந்து ஓடிவந்து, அவன் குதித்து கூடைக்குள் பந்தைத் போட்டு பயிற்சி செய்க்கிறார்.

சிறுவன் கூடைப்பந்துக் கூடையில் உள்ள வட்டமான 'ரிம்மை' (rim) பிடித்துத் தொங்க, கம்பம் வேரோடு பெயர்ந்து அவர் மீது விழுகிறது. கம்பத்தின் முழு எடையும் சிறுவனின் மார்பில் இறங்கியிருக்கிறது. இதைப் பார்த்துக்கொண்டிருந்த அவனது நண்பர்களும், சக வீரர்களும் உடனடியாக மைதானத்தை நோக்கி ஓடிவந்து, கம்பத்தைத் தூக்கி, ஹார்திக்கை மீட்டுள்ளனர். எனினும் துரதிர்ஷ்டவசமாக 16 வயது ஹர்திக் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சில நாட்களுக்கு முன்னர் ஹரியானாவின் பகதூர்கர் மாவட்டத்தில் இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. பதினைந்து வயது அமன் ஒரு மைதானத்தில் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது ஒரு கூடைப்பந்து கம்பம் அவர் மீது விழுந்தது.

உள்காயங்களால் அவதியுற்ற அமன் ரோஹ்தக்கின் பண்டிட் பகவத் தயாள் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவருக்கு உரிய சிகிச்சை வழங்கப்படவில்லை என குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஹரியானாவில் அடுத்தடுத்து இளம் விளையாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவத்தால், விளையாட்டு மையங்களின் உட்கட்டமைப்பு குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

தென்காசி: இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்குநேர் மோதி கோர விபத்து - 6 பேர் பலியான சோகம்

தென்காசி மாவட்டம் இடைகால் அருகில் உள்ள துரைச்சாமிபுரம் கிராமத்தில் இன்று காலை கே.எஸ்.ஆர் என்ற தனியார் பேருந்து தென்காசியில் இருந்து ராஜபாளையம் சென்று கொண்டிருந்தது. அதேபோல் எதிர்புரத்தில் கோவில்பட்டிய... மேலும் பார்க்க

திருச்சுழி: காட்டுப்பன்றிகளைத் தடுக்க மின்வேலி; எதிர்பாராமல் சிக்கிய விவசாயி பலி; என்ன நடந்தது?

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே தொப்பலாக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிசாமி. இவர் அதே கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய தோட்டத்திற்கு முன்பு தங்கபாண்டியன் என்பவரது தோட்டம் உள்ள... மேலும் பார்க்க

சிவகாசி: நடுரோட்டில் ரீல்ஸ் எடுத்து விபத்தை உண்டாக்கிய இருவர் கைது

சிவகாசி அருகே சாலையில் சண்டையிடுவது போல் நடித்து இளைஞர்கள் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை பார்த்த பைக்கில் சென்ற ஒருவர் விபத்தில் சிக்கியதை தொடர்ந்து, ரீல்ஸ் வீடியோ எடுத்த இரு இளைஞர்களை போலீஸார் கைது செய்தனர்... மேலும் பார்க்க

திண்டுக்கல்: தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து; 23 பேர் காயம்; ஓட்டுநரின் மதுபோதைதான் காரணமா?

கம்பத்தில் இருந்து திண்டுக்கல் வழியாக பெங்களூர் சென்ற தனியார் பேருந்து தாடிக்கொம்பு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து அதிகாலை 2:30 மணி அளவில் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.உடனடியாக சம்பவ இடத... மேலும் பார்க்க

Tejas: துபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கியது - அதிர்ச்சி வீடியோ

துபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) தொடங்கியது.இதில் இந்திய விமானப்படையின் விமானங்கள் உட்பட உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள... மேலும் பார்க்க

சாலையில் சண்டை போட்டு ரீல்ஸ் எடுத்த இளைஞர்கள்; விபத்தில் சிக்கிய பயணி - சிவகாசியில் சோகம்

சிவகாசியில் ரீல்ஸ் மோகத்தில் சாலையில் இரு இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளது போன்று ரீல்ஸ் எடுத்துள்ளனர். அதனை பார்த்துக்கொண்டிருந்த டூவீலரில் சென்ற நபர் பேருந்தின் பின்பக்கத்தில் மோதியதால் விபத்... மேலும் பார்க்க