செய்திகள் :

9% அதிகரித்த வாக்குப்பதிவு; `பீகார் தேர்தல் பேட்டர்ன்’ மீண்டும் பலிக்குமா? வரலாறு சொல்வது என்ன?

post image

பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது.

இதுவரை வெளியாகி உள்ள தேர்தலுக்கு பின்னான கணிப்புகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே உள்ளன. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 150 - 170 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று சில நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால், இப்போதே பாஜக கூட்டணி குஷியாக உள்ளது.

நிதிஷ் குமார், மோடி|பீகார் தேர்தல் 2025
நிதிஷ் குமார், மோடி|பீகார் தேர்தல் 2025
ஆனால், அவர்கள் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயமும் உள்ளது.

பீகாரில் கடந்த 6-ம் தேதி நடந்த முதல் கட்ட தேர்தலில் 65.08 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. 11-ம் தேதி நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 68.76 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. மொத்தமாக, இப்போது நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் 66.91 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. இது பீகார் தேர்தல் வரலாற்றில் புதிய சாதனை ஆகும்.

2020-ம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 57.29 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன. 2020-ம் ஆண்டு தேர்தலை விட, இந்த ஆண்டு வாக்கு பதிவின் எண்ணிக்கை 9.62 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

இதைத் தான் பாஜக கூட்டணி கவனிக்க வேண்டும்.

முந்தைய தேர்தலை விட, 5 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவு நடக்கும்போது, இதுவரை பீகாரில் மூன்று முறை ஆட்சி மாற்றம் நடந்துள்ளது.

அதாவது 1967-ம் ஆண்டு நடந்த தேர்தலில், 1962-ம் ஆண்டை விட 7 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி இருந்துள்ளது. அப்போது காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

1980-ம் ஆண்டு நடந்த பீகார் தேர்தலில், 1977-ம் ஆண்டை விட, 6.8 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி உள்ளன. அப்போது காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. ஜனதா தளம் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது.

நிதிஷ் குமார், மோடி|பீகார் தேர்தல் 2025
நிதிஷ் குமார், மோடி|பீகார் தேர்தல் 2025

பின்னர், 1990-ம் ஆண்டு தேர்தலில் 1985-ம் ஆண்டு தேர்தலை விட, 5.7 சதவிகிதம் அதிகமாக வாக்குப் பதிவாகி உள்ளது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டு, ஜனதா தளம் ஆட்சி அமைத்துள்ளது.

இதனால், நாளை தேர்தல் முடிவுகள் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் சாயலாம் என்ற பேச்சுகள் அரசியல் மட்டத்தில் கொடிக்கட்டி பறக்கிறது.

மோதிக்கொள்ளும் பெருசுகள்; நொந்துகொள்ளும் காவி இளசுகள் டு வசூலுக்குத் தயாராகும் எம்.பி! | கழுகார்

கொதிக்கும் மதுரை ரத்தத்தின் ரத்தங்கள்!“அவர்கள்மீது அப்படியென்ன பாசமோ?”மதுரையில், இலைக் கட்சியின் பூத் கமிட்டிப் பயிற்சி நிகழ்ச்சி சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய இலைக் கட்சியின் ‘சூரிய’ மாஜி, “நமது தல... மேலும் பார்க்க

US: ரூட்டை மாற்றுகிறாரா ட்ரம்ப்? H-1B விசா, வெளிநாட்டு மாணவர்களுக்கு திடீர் ஆதரவு!

அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்கர்களை விடுத்து வெளிநாட்டினரை குறைந்த சம்பளத்திற்கு பணிக்கு அழைத்து வருகிறார்கள். அமெரிக்காவில் வெளிநாட்டினரின் குடியேற்றம் அதிகம் இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அரசுக்கு... மேலும் பார்க்க

Delhi Blast: வாகன நெரிசலில் கார் வெடித்த சம்பவத்தை காட்டும் சிசிடிவி காட்சிகள்

டெல்லி செங்கோட்டை அருகே கார் வெடித்த சம்பவம் நடந்து 2 நாட்கள் கடந்துவிட்டன. இதில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர்; 24 பேர் காயமடைந்துள்ளனர்.தற்போது கூட்ட நெரிசல் மிக்க சாலையில் வெள்ளை நிற ஐ20 கா... மேலும் பார்க்க

SIR FAQ #5: பென்சிலில் Enumeration Form எழுத வேண்டுமா? | Decode | Vikatan

இந்த வீடியோவில் தமிழ்நாட்டில் நடைபெறும் SIR குறித்து மக்களுக்கு அடிக்கடி வரும் முக்கிய கேள்விகளுக்குப் பதில்கள் தரப்படுகின்றன.வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வெளிநாட்டில் உள்ளவர்... மேலும் பார்க்க

``பெண்கள் தைரியமாக புகாரளிப்பதால் பாலியல் வழக்கு அதிகம் உள்ளதாக தெரிகிறது'' - அமைச்சர் கீதாஜீவன்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நாகர்கோவில் வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "சமூ... மேலும் பார்க்க

``கொடூரமான தீவிரவாத செயல்'' - டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து மத்திய அரசு அறிவிப்பு

கடந்த 10-ம் தேதி, மாலை 6.52 மணியளவில், டெல்லி செங்கோட்டை அருகே 'ஹுண்டாய் ஐ20' கார் வெடித்து சிதறியது. செங்கோட்டை அருகேயே நடந்த குண்டு வெடிப்பு நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது, பேசப்படுகிறது. சிசி... மேலும் பார்க்க