செய்திகள் :

`திருமணத்துக்கு பெண் பார்த்து கொடுங்க, மறக்கவே மாட்டேன்’ - சரத் பவாருக்கு கிராம இளைஞரின் கோரிக்கை

post image

மகாராஷ்டிரா கிராமங்களில் வசிக்கும் இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். அதுவும் விவசாயம் செய்யும் இளைஞர்கள்தான் இது போன்ற சிக்கல்களை அதிக அளவில் சந்திக்கின்றனர். இதனால் இளைஞர்கள் 40 வயது வரை திருமணம் செய்யாமல் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவனர் சரத் பவார் அகோலா பகுதிக்கு சென்று இருந்தார். அங்குள்ள இளைஞர்கள் சரத்பவாரை சந்தித்து மனு கொடுத்தனர். வாலிபர் ஒருவர் சரத் பவாரிடம் ஒரு மனு கொடுத்தார். அந்த மனுவை சரத்பவார் வாங்கி வைத்துக்கொண்டார். அதன் பிறகு அதனை படித்து பார்த்தபோது சரத்பவார் அதிர்ச்சியாகிவிட்டார்.

அதில் அந்த வாலிபர் சரத்பவாரிடம் தனக்கு திருமணத்திற்கு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்திருந்தார்.

அவர் தனது கடிதத்தில், ``எனக்கு நாளுக்கு நாள் வயதாகிக்கொண்டே செல்கிறது. எதிர்காலத்தில் திருமணம் நடக்குமா என்று தெரிய வில்லை. நான் தனியாக வாழவேண்டியிருக்கிறது. எனவே தயவு செய்து எனது வாழ்க்கையை நினைத்து பாருங்கள். எனக்கு ஒரு மனைவியை ஏற்பாடு செய்து கொடுங்கள். எந்த சாதியை சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை.

பெண்ணின் வீட்டில் வேண்டுமானாலும் வாழ தயாராக இருக்கிறேன். நன்றாக வேலை செய்வேன் என்று உத்தரவாதம் அளிக்கிறேன். குடும்பத்தையும் நன்றாக நடத்துவேன். தயவு செய்து எனக்கு வாழ்க்கை கொடுங்கள். உங்களது கருணையை வாழ்நாள் முழுவதும் மறக்கமாட்டேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

அக்கடிதத்தை சரத்பவார் தனது கட்சி நிர்வாகி அனில் தேஷ்முக்குடன் பகிர்ந்து கொண்டார். இக்கடிதம் மூலம் சாமானிய மக்கள் இன்னும் எந்த அளவுக்கு சரத் பவாரை நம்புகிறார்கள் என்பது தெரிகிறது.

அந்த வாலிபர் தனது முகவரி மற்றும் போன் நம்பரையும் அக்கடிதத்தில் எழுதி இருக்கிறார். இது சரத்பவாருக்கு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்காத இளைஞர்கள் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று திருமணத்திற்கு பெண் ஏற்பாடு செய்து கொடுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். ஒருபுறம் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே செல்கிறது. மற்றொருபுறம் பெண்கள் படித்து வேலையில் இருப்பதால் விவசாயம் செய்யும் கிராமத்து இளைஞர்களை திருமணம் செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர் என்கிறார்கள்.

"அதிரடி அபராதங்கள்; ஆம்னி பேருந்து விவகாரத்தில் சுமூக தீர்வு வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி

கடந்த நவம்பர் 7ம் தேதி கேரளா மாநிலத்திற்குச் சென்ற தமிழ்நாடு பதிவு எண் கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் கேரளா போக்குவரத்து துறையினரால் அதிகாலை 3 மணி அளவில் திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்ட... மேலும் பார்க்க

புதுக்கோட்டை- ஏம்பல் சிப்காட் ஜவுளிப் பூங்கா- அரசின் அறிவுப்புக்காக காத்திருக்கும் ஏழைப் பெண்கள்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் 2025: ஹெலிகாப்டர்களில் சூறாவளி பிரசாரம்; எகிறும் தேர்தல் செலவுகள்!

2025 பீகார் சட்டமன்ற தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற முதல் கட்ட (121 தொகுதிகள்) வாக்குப்பதிவில் 64.66% வாக்குகள் பதிவாகியுள்ளன.இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு (12... மேலும் பார்க்க

‘22% ஈரப்பதம்’ நெல் கொள்முதல் எனும் தேசிய நாடகம்... கைதட்டும் தி.மு.க; கும்மியடிக்கும் பா.ஜ.க!

அனைவருக்கும் பசுமை வணக்கம்...‘கழுதைக்கு வாக்கப்பட்டுட்டு... உதைக்கு அஞ்சலாமா’ என்கிற பழமொழி போல்தான் இருக்கிறது, உழவர்களின் வாழ்க்கை. நாட்டுக்கே படியளக்கும் தங்களை, ‘மக்களாட்சி’ என்கிற பெயரில் ஆண்ட/ஆண... மேலும் பார்க்க

அமெரிக்கா: உடல் பருமன், சர்க்கரை நோய்‌ உள்ளவர்களுக்கு 'நோ' விசா; ட்ரம்ப்பின் புதிய கெடுபிடி என்ன?

அமெரிக்கா விசா வழங்குவதற்கு மேலும் புதிய கெடுபிடிகளை விதித்துள்ளது ட்ரம்ப் அரசு.நூறு, ஆயிரக் கணக்கிலான டாலர்கள் மதிப்புள்ள மருத்துவச் சிகிச்சை அல்லது மருத்துவ உதவி தேவைப்படுபவர்களுக்கு இனி விசா வழங்க ... மேலும் பார்க்க

"உதயநிதியின் செயல்பாடுகளைப் பார்க்கும்போது இதுதான் ஞாபகம் வருகிறது" - மு.க ஸ்டாலின் பெருமிதம்

இன்று திமுகவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக இளைஞரணி சார்பில் அறிவுத் திருவிழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், உதயநிதியின் செயல்பாடுகளைப் பார... மேலும் பார்க்க